Monday 29 June 2015

இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?







64.

நம் தமிழ் சமூகம் எப்போதுமே பெண்மையைப் போற்றியே வந்தி ருக்கிறது.  ஆனால், இடையில் பெரும் பொருளாதாரத் தேடலில், தாய்மை உணர்வுகளைத் தொலைத்து விடுகிறோம் அந்த உறவை இழக்கக்கூடாது.

 
இலக்கினத்திற்கு நான்குக்குடையவனும், குருவும் யாருடைய ஜாதகத்தில் கேந்திரங்கள் (1, 4, 7, 10 ) பெற்றிருந்தால், அவர்களுக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் அதிகமிருக்கும். அவர்களின் வழிகாட்டலின்படி வாழ்வில் முன்னேற்றமும் இருக்கும் 


65 - 

 பெரும்பாலும், மனிதன் எப்போதுமேசிறப்பானஒன்றைத்தான் விரும்புவான். ஒரு விழாவிற்கு அழைப்பாளர்களை விட, சிறப்பு அழைப்பாளர்களுக்கு தனி மரியாதை இருப்பதை உணர்வீர்கள். அது போலத்தான், இவர் வீட்டில் அவரும், அவர் வீட்டில் இவருமாக பரிவர்த்தனைப் பெறுவதும் சிறப்புதான் என்றாலும்,

இலக்கினத்திற்கு கேந்திரதிபதிகளும், (1, 4, 7, 10). திரிகோணதிபதிகளும் (1, 5, 9 ), ஒன்றுக்கொன்று பரிவர்த்தனைப் பெறுவது இன்னும் சிறப்பாகும். இந்த அமைப்புடைய ஜாதகரின் வாழ்வில் ெட்டது என்று எதுவும் நடக்காது 

கை பேசி. 87548 73378 01501 06069

No comments:

Post a Comment