Monday 29 June 2015

இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?







64.

நம் தமிழ் சமூகம் எப்போதுமே பெண்மையைப் போற்றியே வந்தி ருக்கிறது.  ஆனால், இடையில் பெரும் பொருளாதாரத் தேடலில், தாய்மை உணர்வுகளைத் தொலைத்து விடுகிறோம் அந்த உறவை இழக்கக்கூடாது.

 
இலக்கினத்திற்கு நான்குக்குடையவனும், குருவும் யாருடைய ஜாதகத்தில் கேந்திரங்கள் (1, 4, 7, 10 ) பெற்றிருந்தால், அவர்களுக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் அதிகமிருக்கும். அவர்களின் வழிகாட்டலின்படி வாழ்வில் முன்னேற்றமும் இருக்கும் 


65 - 

 பெரும்பாலும், மனிதன் எப்போதுமேசிறப்பானஒன்றைத்தான் விரும்புவான். ஒரு விழாவிற்கு அழைப்பாளர்களை விட, சிறப்பு அழைப்பாளர்களுக்கு தனி மரியாதை இருப்பதை உணர்வீர்கள். அது போலத்தான், இவர் வீட்டில் அவரும், அவர் வீட்டில் இவருமாக பரிவர்த்தனைப் பெறுவதும் சிறப்புதான் என்றாலும்,

இலக்கினத்திற்கு கேந்திரதிபதிகளும், (1, 4, 7, 10). திரிகோணதிபதிகளும் (1, 5, 9 ), ஒன்றுக்கொன்று பரிவர்த்தனைப் பெறுவது இன்னும் சிறப்பாகும். இந்த அமைப்புடைய ஜாதகரின் வாழ்வில் ெட்டது என்று எதுவும் நடக்காது 

கை பேசி. 87548 73378 01501 06069

Saturday 27 June 2015

சாரம் தா! பெண்ணே! சாரம் தா!


நான் ஆரம்பக்கல்வி கற்கும் காலத்தில், என்னுடன் படித்த, " சாரதா " என்ற பெயருடையவளால், நாடகத்துறைக்குள் கால் பதித்தேன். அந்த பள்ளியின் " ஆஸ்தான நடிகன் " என்ற பெயருடன் 10 ஆண்டுகள் இருந்தேன்.
இளமைப் பருவத்தில், இன்னொரு " சாரதா " குறிக்கிட்டாள். அவளின் கடைக்கண்ணால் வீழ்த்தப்பட்ட நான், நல்ல கவிஞன் என்ற பெயருடன் இருக்கிறேன். ஆனால்,
நல்ல ஜோதிடன் என்று மட்டும் பெயரெடுக்க முடியவில்லை. காரணம், இளமைக்குப்பின் இந்த வயது வரை " இன்னொரு சாரதா " கிடைக்கவில்லையே!

61, இன்றொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?




ஒரு தனிமனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியானாலே, அவன் தன்னிறைவு அடைந்துவிட்டான் என்று அர்த்தமாகும். அதுதான் சிறந்த யோகமாகக் கருதப்படும்.

மேஷத்தில் செவ்வாய் ஆட்சிப் பலம்பெற்றும், கடகத்தில் குரு உச்சபுபலம் பெற்றும் இருந்து, மேஷம் இலக்கினமாகவோ, அல்லது கடகம் இலக்கினமாகவோ இருந்தால், யோகங்கங்கள் பெற்று தன்னிறைவுடன் வாழ்வான் என்கிற தகவலுடன் உங்கள்...
‪ 

62- 

நம்மில் பலர் அடிக்கடி பேசிய பேச்சையே மாற்றி, மாற்றிப் பேசுவார்கள். இன்னும் சிலரோ ஒரு வார்த்தை பேசினாலும், திருவாசகமாகப் பேசுவார்கள். சொன்ன சொல் தவறவும் மாட்டார்கள்.

இலக்கினதிபதி ஐந்தாம் வீட்டினில் இருக்க, வார்த்தை தவறமாட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை உயிர் போனாலும் காப்பார்கள். அவரின் குழந்தைகளும் உத்தமனாய் வாழும் என்கிற தகவலுடன் உங்கள்



63 - 
புதிதாய் கோவில்கள் கட்டுவதால் கிடைக்கும் புண்ணியத்தை விட, சிதலமடைந்த கோவில்களை புனரமைப்பதில் கிடைத்துவிடும். பல கோடிப்பேர் வாழும் நாட்டில். ஒரு சிலர்தான், இந்த அமைப்பைப் பெறுகின்றனர்.

இலக்கினத்திற்கு பத்தாமிடமான கர்மவீட்டில், பத்தாமதிபதியும், புதனும் பலமுடன் இருந்து, இராகு தொடர்பு கொள்ள, பழைமையான திருக்கோவில்களைப் புனரமைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்கிற தகவலுடன் உங்கள் ...

59- இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




எத்தனையோ மக்களின் உழைப்புகள், அவர்கள் பெறும் தொழில் வெற்றியால் தான் ஏற்கப்படும். அவர்களுக்கு அதிஷ்டமும், திறமையும் சரிவிகிதமாய் இருந்தால் போதும், அவன் மிகச்சிறந்த தொழிலதிபனாவான்.

இலக்கினாதிபதியானக் கோள் இரண்டில் இருக்க, ஆசைகளையும், எல்லாவகையான இலாபங்களைக் குறிக்கும் பதினொன்றுக்குரியவன், பத்திலிருக்க அமையப் பெற்ற ஜாதகர்கள், அடித்தட்டு மக்களாகவே இருந்தாலும், உழைப்புத்திறன், அதிஷ்டம் கைகொடுக்க உச்சாணிக் கொம்பில் ஏறி, பெருஞ்செல்வந்தராக வாழ்வார், என்கிற தகவலுடன், உங்கள் ...


60-
இந்த பரந்துபட்டஉலகம், அபூரவமாகத்தான் புரட்சியாளனை பெற்றெடுக்கிறது. ஆனால், செல்வத்தைத் தேடுபவர்களை அதிகம் தந்து கொண்டே இருக்கிறது. சமனற்ற ஏற்ற தாழ்வுகளில் இருந்துதான், புரட்சியின் விதைக்கு உரம் கிடைக்கிறது.

இலக்கினத்திற்கு ஒன்று, இரண்டுக்குடையவன் இரண்டில் இருக்க, ஒன்பது, பதினொன்றுக்குரியவன் கூடி, ஐந்து, ஒன்பதில் இருக்க, அவன் சம்பாதிக்கும் செல்வத்திற்கு அளவேதும் இல்லை என்று கூறி, உங்கள்,

கைபேசி எண் 87548 73378   91501 06069

56.இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?





நம் வாழ்க்கையை நாம் விருப்பியபடி வாழ்ந்திருக்கோமா? அல்லது நம் வாழ்க்கையின் போக்கை, நம்மால் தான் மாற்ற முடிந்திருக்கிறதா? முகநூல் உறவுகளே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நம்மைப் பெற்றவர்களும், நாம் பெற்றெடுத்தவர்களும், உறவுகளும், நண்பர்களும் ஏன் காதலியும், அருகில் இருப்போர்களும்,.இன்னும் சொல்லப் போனால் வருபவனும், போகிறவனும் என்று இல்லாமல், நம் பகைவர்களும், துரோகிகளும் கூட, நம் வாழ்க்கையை திசை திருப்பி விடுவார்கள்.

இலக்கினத்திற்கு ஆறாமிடம் என்பது எதிரிகளைச் சொல்லுமிடமாகும். இங்கே, பாவக்கிரகங்கள் இருந்தால் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இலக்கினம் என்பது நீங்கள்தான். இலக்கினாதிபதி ஆறில் இருந்தால், நீங்கள் எதிரிகளிடம் இருப்பதாக அர்த்தம் என்கிற தகவலுடன், உங்கள் ...

57-  

தினம்தினம் ஏதோவொன்றை கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், சிறுவயதில் படித்த பாடங்களதான், முதுமையிலும் துணைசெய்கின்றன.

பொதுவாக, இலக்கினாதிபதியும், புதனும் கூடினாலே, அனைத்து நூல்களையும் கற்றுக் கொள்வான். அதிலும், ஜீவனவீடான பத்தில் நின்று, வாக்கின் அதிபதி வலுத்தால், கற்ற புராண, இதிகாசம், காப்பியங்களை, ஆன்மீக, இலக்கிய மேடைகளில் முழங்குவதன் மூலம், பொருள் சம்பாதிப்பார் என்கிற தகவலுடன், உங்கள் ...


58- 

ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளில் உண்மைகள் இருந்தாலும், அந்த கருத்திற்கு நேரெதிராய் ஒரு கருத்து வருமானால், அதிலும் உண்மை உள்ளதா? இல்லையா? என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் அல்லவா

நம்மிடையே " உச்சனை உச்சன் பார்க்கில் பிச்சையெடுப்பான் " என்ற கருத்து சொல்லப்பட்டு வழக்கத்திலும் எல்லோரையும் பயமுறுத்தும்படி உள்ளது. அதற்கு மாறாக, அச்சப்பட வேண்டாம், அதுபோல் கெடுபலன்கள் நடக்காது. நல்லதே நடக்கும். இதுவும் ராஜயோகத்திற்கு இணையானதே என்பதாக முன்னோர் அனுபவமொழியும் உள்ளது என்ற தகவலுடன் உங்கள் ...

கைபேசி எண் 87548 73378   91501 06069