Sunday 7 June 2015

3. இன்றுவொரு ஜோதிடத் தகவலை தெரிந்து கொள்வோமா?





3.    
உங்களின் தொழிலைக் குறிக்கும் பத்தாமிடத்தில் சுக்கிரன் இருந்து, அவருக்கு சூரியன் தொடர்பு ஏற்படவும், தன் கொடும்பார்வையால், சனி, நான்கினில் இருந்து பார்க்கவும், நீங்கள் அலுவலகங்களில் அடிமட்ட பணியாளராக இருப்பீர். நல்லநிலையில் பலமுள்ள சனியால் சுக்கிரன் பார்க்கப்பட்டால், நீங்கள் உயர்வாக பதவியில் இருந்தாலும், அடிமட்ட உழைப்பாளிகளிடம் தன் அதிகாரச் சிந்தனையைக் காட்டாமல், மென்மையை கடைபிடிப்பவராக இருப்பீர்கள். இதற்கு காரணம். நான்கு, பத்தாமிடங்கள் என்பது, கிழக்கு, மேற்கு, அல்லது வடக்கு தெற்கு ராசிகள் என ஒரே நேர்கோட்டில் உள்ளன.


4. எந்தவொரு ஜாதகத்திலும் கேந்திரமும், திரிகோணமும், இலக்கினத்திற்கு   இணையான மிகப்புனிதமான இடங்களாகும். இவ்விடங்களை, நாற்சதுர முடிச்சுகள், மூன்று கோண முடிச்சுகள் என்றும் சொல்லலாம். இதில் கேந்திரம் என்றழைக்கப்படும், நாற்சதுர முடிச்சுகளில், குருவெனும் முழுநல்லக்கோளும், வளர்பிறை சந்திரனும், அரசியலில் வலிமைதரும் செவ்வாயும் அமர, மக்களை ஆளும் தகுதியும், அரசியல் நிபுணத்துவமும், அதிகாரசெருக்குடையவனாகவும், ஜாதகன் இருப்பான்  .



91501 06069

No comments:

Post a Comment