Saturday 27 June 2015

59- இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




எத்தனையோ மக்களின் உழைப்புகள், அவர்கள் பெறும் தொழில் வெற்றியால் தான் ஏற்கப்படும். அவர்களுக்கு அதிஷ்டமும், திறமையும் சரிவிகிதமாய் இருந்தால் போதும், அவன் மிகச்சிறந்த தொழிலதிபனாவான்.

இலக்கினாதிபதியானக் கோள் இரண்டில் இருக்க, ஆசைகளையும், எல்லாவகையான இலாபங்களைக் குறிக்கும் பதினொன்றுக்குரியவன், பத்திலிருக்க அமையப் பெற்ற ஜாதகர்கள், அடித்தட்டு மக்களாகவே இருந்தாலும், உழைப்புத்திறன், அதிஷ்டம் கைகொடுக்க உச்சாணிக் கொம்பில் ஏறி, பெருஞ்செல்வந்தராக வாழ்வார், என்கிற தகவலுடன், உங்கள் ...


60-
இந்த பரந்துபட்டஉலகம், அபூரவமாகத்தான் புரட்சியாளனை பெற்றெடுக்கிறது. ஆனால், செல்வத்தைத் தேடுபவர்களை அதிகம் தந்து கொண்டே இருக்கிறது. சமனற்ற ஏற்ற தாழ்வுகளில் இருந்துதான், புரட்சியின் விதைக்கு உரம் கிடைக்கிறது.

இலக்கினத்திற்கு ஒன்று, இரண்டுக்குடையவன் இரண்டில் இருக்க, ஒன்பது, பதினொன்றுக்குரியவன் கூடி, ஐந்து, ஒன்பதில் இருக்க, அவன் சம்பாதிக்கும் செல்வத்திற்கு அளவேதும் இல்லை என்று கூறி, உங்கள்,

கைபேசி எண் 87548 73378   91501 06069

No comments:

Post a Comment