Sunday 7 June 2015

27. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?





இன்றைய காலகட்டத்தில் ஆண்பெண் வேறுபாடுகள் இல்லாமல், எல்லாம் சமம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக அறியப் படுவது, பொருளாதாரம் என்கிற மந்திர வட்டம் தான். அடிமட்ட வேலையானாலும், அலுவலகப் பணியானாலும், பெண்கள் மிகப்பெரும் இயங்கு சக்தியாக உருவாகியுள்ளனர். இவர்களை தவிர்த்துவிட்டு, குடும்பம் மட்டுமல்ல, இனி உலகமே இயங்காது. ஆம்,   பிரபஞ்சத்தில் கூட, ஒருவிதி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்னவெனில்,

பனிரெண்டு பாவகங்களில் உள்ள ஆண்பெண் இராசிகளில், பெண்ராசிகள் ஆறில் மட்டும், ( இரிடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், தனுசு ) இவைகளில், இராகு கேது தவிர்த்து, மற்றைய கோள்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கோள்கள் மட்டும் அமர, மிகப்பெரும் யோகத்தை ஜாதகன் அனுபவிப்பான். எந்த நிலையிலும் அவனுக்கு தாழ்வு என்பதே வராது. பெண் என்றாலே யோகம் என்றுதான் அர்த்தம். அவள் தான் இலட்சுமி, சரசுவதி, சக்தி எனும் வடிவானவள். அதனால் பெண்மையை போற்றுவோம் .

28.
நாம் மனதைப் பற்றி பல பதிவுகள் எழுதிவிட்டாலும், இன்னும் எழுத எவ்வளவோ விடயங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. மனமொரு அடங்கா குதிரை போன்றது. எவருடைய கைகளுக்கும் சிக்காமல் திமிறிக் கொண்டு ஓடித்திரியும். அதைப் பிடித்து, தட்டிக் கொடுத்து, சேணத்தைப் பூட்டி, முதுகில் ஏறி அமரும் வரை, பிடறி சிலிர்க்க நிலையில்லாமல் திமிறும். ஆம், உறவுகளே!

மனதுகாரகனான சந்திரனும் அடங்கா குதிரை போன்றது தான், சுய ஒளியும், சுய ஈர்ப்பும் இல்லாமல், இயக்கு சக்தியின் இயக்கத்திற்கு கட்டுப்பட்டு இயங்கி வருகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இராசிக்கு முன்னும் பின்னும் வேறு எதாவது கோள்கள் இருந்தாக வேண்டும். அதாவது மனம் தனித்து இருந்தால், பல்வேறான சிந்தனைகளை த்ந்துவிடும். அதனால் மன அழுத்தம் அதிக்கப்படும். மேலும், சந்திரனுக்கு முன்னும், பின்னும் புதன், குரு நின்று விட்டால், அவர் மிகப்பெரும் ஞானத்தன்மையும், புத்திக் கூர்மையும் உள்ளவராக இருப்பார். இந்த விதி அனுபவத்தில் சரியாக வருகிறது.  

91501 06069

No comments:

Post a Comment