Saturday 6 June 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...12





மே 2ம்தேதி 2015 அன்று மாலை, கைரேகை வகுப்பு முடிந்ததும், எமது நெருங்கிய நண்பரும், பத்திரிகை உலகில் இருக்கும்போதே பிரமிக்கத்தக்க உயரத்தில் இருந்தவருமான, எங்கள் மதிப்புக்குரிய ஜோதிடக்கலை ஆதித்ய குருஜி அவர்களும், நான் முகநூலில் ஜோதிடப்பேழை, ஜோதிடப் பேரொளி என இரண்டுக் குழுக்கள் ஆரம்பித்ததில் இருந்து, இன்றுவரை மறக்காமல் பதிவிட்டு வரும், ஒத்த கருத்துடைய பாபு ஐயா அவர்களும் உரையாற்றி முடித்தபின், அவர்களை வழியனுப்ப செல்வதின் மூலம் " உலகத்தமிழ் ஜோதிட மகாசபை " யைப் பற்றியும், சின்ன கலந்துரையாடல் நடத்தினோம். அதன்பின் மேடைக்கு வந்த என்னிடம், நண்பர்கள் உடன்பிறப்புகளைச் சொல்லும் நிகழ்ச்சியினை துவங்கலாமா? எனக்கேட்க, நானும் தயார் என்றேன். நண்பர் Astro Senthil kumar அவர்களின் LabTap பில், நாகராஜ் எனகிற,Guru- Naga அவர்கள், ஜாதகம் போட்டுத்தர உதவி செய்தார். எனது அருகில் நண்பர்கள் ஜோதிவேலும், ஜெயவேலும் அமர்ந்திருக்க, குமரன் ஜி அருகில் இருக்க, முதல் ஜாதகத்தை பயிற்சிக்கு வந்தவர்களிடம் கேட்டோம். ஒருவர் எழுந்தார். ஜாதகத்திற்கான DOP யைத்தந்தார். நாகராஜ் ஜாதகத்தைப் போட்டுச் சொன்னார். நான் கரும்பலகையில் சாரம் உள்பட குறித்தேன். அவை அமைதியானது. என் சிந்தனையோ வெல்ல வேண்டும் என்கிற மனநிலையில் சிறகடித்துப் பறந்தது. முதல் கெள்வி. சகோதர எண்ணிக்கையை சரியாக சொன்னேன். இரண்டாம் கேள்வி தகப்பன் வர்க்கம், மூன்றாவது தாயின் வர்க்கம் இப்படியாக மனைவியின் வர்க்கம், மனைவியின் வீட்டின் திசை, மனைவி வீட்டின் அருகாமை வீடுகள், அதன் திசைகள் என மொத்தம் எட்டுக்கேள்விகள் அதில் அனைத்திற்கும் சரியாகவே எண்ணிக்கையும், வீடுகளின் இருப்பும் சொல்லப்பட்டது. இதில் ஒரு கேள்விக்கு மட்டும் தவறான பதில் எனச் சொன்னார் ஜாதகம் தந்தவர். அது என்னவெனில் மனைவியோடு உடன்பிறந்தவர்கள் நான்கு பேர் என்றேன். அவர் இல்லை என்றார். ஆனால், அவர்க்கு இரண்டு மனைவிகள். இவர்களோடு பிறந்தவர்கள் நால்வர்தான் என்றார் GuruNaga என்கிற நாகராஜ். இவர் சொன்னார், " நான் வேண்டுமானால் சொல்லவா? என்றார். நான் சபையில் சொல்ல வேண்டாம். இந்தவொரு கேள்விக்கு நாம் தோற்றதாகவே இருக்கட்டும் என மறுத்தேன். முதல் ஜாதகம் எங்களைப் பொறுத்தவரை 100% சரியாக சொல்லப்பட்டது. ஆனால், சபையோருக்கு எட்டுக் கேள்விகளுக்கு, ஏழு கேள்விகளுக்குத்தான் பதில் சொன்னதாக ஆனது. இனி இரண்டாம் ஜாதகம் போட முயன்றோம். அப்போதுதான்எங்கள் மனதைக் குலைக்கும் செயல்கள் நடக்கத்துவங்கின. நாங்கள் இருந்து மேடையை நோக்கி விதி சொக்கட்டான் ஆட வந்தது.


தொடர்புக்கு…. 9751822129  8754873378
 

No comments:

Post a Comment