நமக்கு செல்வம் சேரவேண்டும் என்ற விதிப்பயன்
இருந்தால், எந்த வழியிலேனும் சேர்ந்துவிடும். காலத்திற்கும் உழைத்துச் சேர்க்க வேண்டிய
செல்வவளத்தை, ஒரு பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் கிடைத்து விடுகிறது. இதற்கான கிரக
அமைப்பைக் காண்போம்.
எவருடைய ஜாதகத்திலும் சுக்கிரம் கெடாமல் இருந்து,
இலக்கினத்திற்கு இரண்டாமதிபதியும், ஏழாமதிபதியும் கூடினாலும், அல்லது ஒன்றையொன்று சப்தமத்தில்
பார்த்துக் கொண்டாலும், இவருடைய சாரத்தை அவரும், அவருடைய சாரத்தை இவரும் பெற்று சார
பரிவர்த்தனை அடைந்தாலும், ஜாதகன் மனைவியின் மூலம் பெரும் செல்வத்தை அடைவான் .
36
நம்மில் சிலர் எல்லா நேரங்களிலும் எல்லா உண்மைகளையும்
சொல்லிவிட மாட்டார்கள்.. பல நிகழ்வுகளில் முத்தாய்ப்பான விடயத்தை சொல்லாமல் மறைத்துவிடுவர்.
அப்படி மறைப்பவன்தான் சிறந்த புத்திசாலி. காரணம், எந்த நுணுக்கச் செய்தியும் அவன் கையில்
இருக்கும் வரை, அதுதான் துருப்புச் சீட்டாகும். ஜோதிடச் செய்திகளையும், அதிலுள்ள நுட்பங்களையும்
பலர் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு காரணம், அதை பலர்அடைய ஆசைப்படுவதும், அதை நோக்கித்
தேடுதல் பயணத்தைத் துவக்குவதும்தான். அதனால் பலர் வெளிப்படுத்துவது கூட இல்லை. இதுபோல்,
எல்லோரிடமும் மறைக்கப்பட்ட பல செய்திகள் உண்டு. இதற்கு ஜோதிட சூட்சம விதியை காண்போமா?
இலக்கினத்திற்கு ஐந்தாமதிபதி நல்லக்கிரகமாக இருந்து,
ஆட்சி, உச்சம் பெற்று, பகை நீசம் பெறாமல் இருந்து, நல்லக்கிரகம் இணைந்து, நல்ல இடத்தினில்
அமர, ஜாதகர் கூர்ந்த அறிவாற்றலும், நல்ல ஞானமும் உடையவராக இருப்பார். இதே அமைப்பில்
ஐந்தாமதிபதி, பிரபஞ்சத்தின் அனைத்து இரகசியங்களும் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமான எட்டாமிடக்
கோளின் சாரம் பெற்றால், அந்த ஞானங்களுடன், மறைவான பல செய்திகளை தனக்குள் மறைத்து வைத்திருப்பான்.
91501 06069
No comments:
Post a Comment