போன பதிவில்
விதி சொக்கட்டான் விளையாடத் துவங்கியது எனறேன். முதல் ஜாதகம் வெற்றிகரமாக பிறப்பு வர்க்கத்தை
கூறிய பின், இரண்டாவது ஜாதகத்தை பெறும்போது, மதுரையை சேர்ந்த நண்பரும் ஜோதிடவியல் பட்டயம்
முடித்தவரும், தனியே வகுப்புகள் நடத்தி வருபவருமானவர் மேடைக்கு வந்து மைக்கைப் பிடித்தவர்,"
நண்பர் முத்துப்பிள்ளை அவர்கள், மிக அருமையாக நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டுள்ளார்.
இந்த அரிய கலையை எல்லோரும் பயன்படும் விதமாக, இங்கேயே அனைவருக்கும் கற்றுத்தரும்படியாக
அனைவரின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்." என்றார். அதற்கு நான், " இந்த கலையைக்
கற்றுக்கொள்ள மூன்றுமாதம இரண்டுவேளை உணவு இல்லாமல், கற்றுக் கொண்ட கலை இது. இதற்கென்று
ஒரு விலை உண்டு. அதைத் தருபவருக்கும், ஒருவேளை உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பவருக்கு
கண்டிப்பாக கற்றுத் தருகிறேன்" என்றேன். அதன்பின் என் மனநிலையில் குழப்பங்களும்,
மாற்றங்களும் உருவானது. இதுவரை எனக்குள் மட்டுமே பயன்படுத்திய கலையை, ஒரு சிலவேளைகளில்
முகநூலிலும் பயன் படுத்தினேன். எனக்குள் புதைந்திருக்கும் பதையலை விலையே தராமல் தோண்டி
எடுக்க முயற்சித்து விடுவார்களோ என்கிற மனப்பதட்டம் அதிகமானது. என்னைக்கவனித்த நண்பர்
ஜோதிவேல் கொஞ்ச நேரம் அமரச்சொன்னார். அமர்ந்தேன். அதன்பின் இன்னொருவரும் பேசினார்.
மீண்டும் நிகழ்ச்சி துவங்கியது. இரண்டாம் ஜாதகம் தநுதார்கள். அதற்கு சொன்னது ஒன்றிண்டைத்
தவிர, அனைத்தும் தவறு. ஜாதகம் தந்தவரோ தன்னுடைய ஜாதகத்தை தவறாக தந்து விட்டதாக கூற,
எனக்கோ ஏதோவொரு சக்தி தடுப்பதாக உணர, Guru Naga அவர்களோ,
"அண்ணே! நிகழ்ச்சியைத் தொடர வேண்டாம்" என்றார். தன்னுடைய ஜாதகத்தையே தவறாக
சொல்லவைத்து, என்னையும் எனக்குள் உள்ள அற்புத கலையை படித்தவர்களிடம் இருந்து காப்பாற்றிய
விதியை வணங்கி நிகழ்ச்சியை முடித்தோம். அதன்பின் நண்பர் மீனாட்சி அவர்கள் வந்தார்கள்.
அப்போதே மணி இரவு 8-45 ஆனது. எல்லோருக்கும் பசி நேரம். மீண்டும் நிகழ்ச்சியை துவங்கலாம்
என்றார். Astro Senthil Kumar அவர்கள் LabTap எடுத்துக் கொண்டார். அதனால் அவர்கள் சொன்ன
ஜாதகத்தைப் பயன்படுத்தி பலன் சொல்லத் துவங்க, அப்போதும் இடறல் ஆனது. நான் திருக்கணித
ஜாதகத்தில் சொல்லும் கலையை, அவர்கள் வாக்கியக் கணிதத்திற்கு பொருந்தவில்லை. இந்த நிகழ்ச்சியும்
அத்தோடு முடிந்தது. இரவு உணவுக்காக கலைந்தோம். ... நன்றி. முகநூல் உறவுகளே!!!
தொடர்புக்கு….
9751822129 8754873378
No comments:
Post a Comment