சில
உண்மைகளை நோக்கிப் பயணப்படும் நேரமிது. சிலவார்த்தைகள் வெல்லுவதையும், கொல்லுவதையும்
அனுபவப்பூர்வமாக எல்லோருமே அறிந்திருப்போம் அல்லவா? நான் பல உண்மைகளைச் சொல்லிவரும்
போது, அதில் சில தவிர்க்கமுடியாத “நழுவல்களும்” இருக்கலாம். பயிற்சி வகுப்பில் கலந்து
கொண்டவர்கள் மட்டும் அந்த நழுவல்களை காணமுடியும். பயிற்சி வகுப்பு என்பது என் நண்பர்
மீனாட்சி சுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் சமாச்சாரம். அதில் நாங்களும் பங்கு
கொண்டுள்ளோம் என்பதுதான் உண்மை. ஆனால், எந்த நிகழ்ச்சியும் எங்களால் நடத்தப்படவில்லை.
நண்பர் கேட்டுக் கொண்டதின் பேரில் சில உரையாடல்களை மட்டும் நடத்தினோம்.
மதியம்
சில கருத்துக்கள் எழும்பின. அது என்னவெனில், “எந்த ஜோதிட விதிகளாலும் சகோதரவர்க்கத்தைக்
கூறமுடியாது. அப்படி கூறுவதாக இருந்தால் அது ஏமாற்று வேலை. துருவக் கணிதத்தாலன்றி வேறு
எந்த முறையாலும் சொல்லமுடியாது “ என்ற கருத்தை பதியவிட்டார்கள். அவர்களே, “ கைரேகையால்
எல்லா நுட்ப விடயங்களைக் கூற முடியும் “ என்றும் கூறிவிட்டனர். இது எப்படி என்றுதான்
எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய நிகழ்ச்சியான இளவயதில் திருமணம் முடிக்கும் யோகம்
யாருக்கு அமையும் என்கிற விவாதம் முடிந்ததும்,
நான் காலையில் இருந்து அஸ்ட்ரோ செந்தில் குமாரை அவருடன் பேசவே இல்லாத காரணத்தால், அவரிடம்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, மேடையில் இருந்து அழைப்பு வந்தது. சென்றேன்.
“ உங்களால் துருவகணிதம் இல்லாமல், சகோதர வர்க்கத்தை சொல்லமுடியுமே, சொல்கிறீர்களா?
“ என்று கேட்டார்கள்.
தொடர்புக்கு….
9751822129 8754873378
No comments:
Post a Comment