Sunday 7 June 2015

17. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்ளலாமா?




நாம் ஆழ்மனக்கட்டுப்பாட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டால், அதுவே உயர்ந்த ஞானத்தைப் பெற வழிகாட்டி விடுகிறது. நமக்குக் கிடைக்கும் ஞானம் என்பதை ஆடை அணிந்திருப்பதால் பெற்றுவிடமுடியாது.  அதேசமயம் ஆடையற்று நிர்வாணியாக இருந்தாலோ, ஞானம் பெற்றுவிடுவோம் என்பதை தீர்மானித்து விடமுடியாது. எல்லா ஜீவன்களில் ஈ, எறும்பு உள்பட, மனத்தாழ்ச்சியைக் காட்டாத எவரும் காலத்தைப் பங்கு போட இயலாது. நான் என்கிற மாயையில், எல்லாம் கடந்து விட்டேன் என்பதுகூட,, ஆழ்மனதின் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. ஆம். முகநூல் உறவுகளே! இன்று யோகநிலையைப் பற்றிய சின்னவிடயத்தைத்தான் காணப்போகிறோம்.

இலக்கினத்தில் சனி, செவ்வாய் இருந்தாலும், இலக்கினத்தில் சனியிருந்து, செவ்வாய் கண்டாலும், அல்லது செவ்வாய் இலக்கினத்தில் இருந்து, சனி கண்டாலும், ஜாதகன் யோகநிலையில் ஆட்பட்டு, குடும்ப சுகத்தை துறந்து, மிகுந்த தூய மனத்தனாக இருப்பான் என கூறப்படுகிறது. இதுவே, காலபுருட ராசிக்கு ஏழாம்வீடான துலாமில், சனி உச்சமடைந்து அமர, திருமணவாழ்விலும் பிரச்சனையைத் தருகிறது. மேடம் என்பது செவ்வாயின் இராசியாகி, ஏழில் இருக்கும் சனிக்குத் தொடர்பு ஏற்படுவதால், இந்த நிலை என்கிற தகவலுடன் உங்கள்……       
18.
இந்த உலகத்திலே Block Magic எனும் பில்லி, சூன்யம், ஏவல், அபிசாரம் முதலிய அத்தனை துர்ச்செயல்களும், நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை மக்களின் பயத்தை வைத்து செய்யப்படும் மோசடி என்று சொல்பவர்களும் உண்டு. இதை மாயஜாலவித்தை போன்றது என்பாரும் உள்ளனர். இதையே பிரதானமாக வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்களும் உண்டு. எப்படியோ மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும், இதை ஏற்பவர்களும், மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பில்லிசூன்ய, ஏவல் கட்டுகளை துரத்தியடிப்பதற்காகவே, பல கோவில்களும் உள்ளன. பூஜை புனஸ்காரங்கள்ம், வழிபாட்டு முறைகளும் உள்ளன. இன்று நாம்  ஜோதிடத்தில் இருந்து சில நுட்பமான செய்திகளைக் காண்போம்.

பொதுவாக, சனி என்கிற கோள் இருளைக் குறிக்கும்.  இராகு என்கிற கோள் நிழலைக் குறிக்கும். சனிக்கு ஆட்சி வீடு இருப்பதுபோல், இராகுவுக்கும் சனியின் வீடு ஆட்சி வீடாக உள்ளதாக வடமொழி நூல்கள் கூறினாலும், நம்மில் பலர் இராகுவிற்கு ஆட்சி வீடு இல்லை என்கிற கருத்தையே கொண்டுள்ளனர். ஆனால், சனியின் தசா காலம் 19 வருடங்கள் போல, இராகுவின் தசாகாலம் 18 வருடங்கள் ஆகும். மேலும், சனியைப் போல, இராகு பலன் தருவதில் வல்லவர். இரண்டு பேரும் கோச்சாரத்தில் 3, 6, 11 ல் இருந்தால் மட்டுமே நன்மையைச் செய்கின்றன. மற்றவிடங்களில் தீமையானப் பலன்களையே செய்கின்றன.

உங்களின் பிறப்பு ஜாதகத்தில் வலுவிழந்த சனிக்கோள், இராசிக்கு பத்தில் கோச்சாரத்தில் வர, யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என எண்ணத் தோன்றும். அதேபோல், வலுவிழந்த இராகு கோச்சாரத்தில் ஒன்பதில் அமர, செய்வினை பாதிப்புகள் உள்ளதாக உணர்வார்கள். மேலும், ஒருவருக்கு வலுவிழந்த சனிதசாவில், இராகு புக்தி நடந்தாலும், இராகுதசாவில் சனி புக்தி நடந்தாலும், செய்வினை செய்துவிட்டார்களோ என நினைக்கத்தோன்றும், 

91501 06069

No comments:

Post a Comment