நம்மில் பலபேர் தேடித்தேடி போய், தேவையற்ற வார்த்தைகளைப்
பேசி. விரோதத்தை விலைக்கு வாங்குவார்கள். அதேபோல,
அவர்கள் எதுசெய்தாலும் விவகாரத்தில் தான் முடியும். ஆனாலும், தாங்கள் செய்ததும், பேசியதும்
சரியென்றே வாதம் புரிவார்கள். இதற்கு உதாரணங்களாக பலபேரை ஊருக்குள்தான் இருந்தார்கள். இப்போது முகநூலில்
தான் அதிகம் உள்ளனர். அவர்களை தெடிப் பார்த்து களையெடுங்கள்.
உங்களின் ஜாதகத்தில் வித்தையை நான்காமிடத்தைக் கொண்டும்,
பேச்சுக்கலையை இரண்டாமிடத்தைக் கொண்டும் அறிந்துவிடலாம். புத்திக்குப் புதனும், பேச்சுக்குக்
குருவும் காரகமாகின்றனர். இவர்கள் அதாவது நான்காமதிபதி, குரு, புதன் மூவரும் மறைவிடமான
எட்டு, பனிரெண்டில் இருந்தாலும், ஒன்றுக்கொன்று எட்டு, பனிரெண்டில் நின்றாலும், வித்தை,
புத்தி, விவேகம் என்று எதுவுமில்லாமல், வெட்டியாய் விரோதம் வளர்த்துக் கொள்வார்கள்
என்ற தகவலுடன், உங்கள்…..
49. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?
நாமோ, நமக்கு அருகாமையில் இருப்பவர்களோ நல்ல உழைப்பாளிகளாக
இருப்பார்கள், நன்றாக வருமானம் பார்ப்பவராக இருப்பார்கள். ஆனாலும், அவர்கள் வாங்கிய
கடன் தொகை மட்டும் குறையாமல் மிகவும் துன்பப் படுபவராக இருப்பார்கள். நம்மில் சிலபேர்
வாங்கிய கடனைக் கட்டமுடியாமல், நெஞ்சை நிமிர்த்தி திரிபவர்களும் உண்டும். சிலபேர் கடனுக்குப்
பயந்து ஊரைக் காலிபண்ணி, வேரொரு நகரத்துக்குச் செல்வதும் உண்டு. இவர்களால் கடன் தொகையை
கட்டமுடியாமல், எது தடுக்கிறது.
இலக்கினத்துக்கு இரண்டுக்குடையவனும், ஐந்துக்குடையவனும் இலக்கின
மறைவிடங்கள் என்று சொல்லப்படும், ஆறு, எட்டு, பனிரெண்டில் இருந்தால், ஜாதகன் கடனாளியாகவே
இருப்பான். அந்த கடன்தொகை அடையவே அடையாது, என்கிற தகவலுடன், உங்கள்….
கைபேசி எண் : 87548 73378 91501 06069
No comments:
Post a Comment