Sunday 7 June 2015

39. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




நாம் குழந்தைச் செல்வம் முதல் அனைத்து உறவுகளையும் பெற்றிருப்பது ஒரு வாழ்க்கை என்றால், அந்த உறவுகளைப் பெறாமல் ஏக்கத்துடனே வாழ்ந்து மடிவது இன்னொரு வாழ்க்கை முறையாகும். வரம் போல் வாங்கி வந்த உறவுகளை, மனம் போன போக்கில் விலக்கி வைப்பதும், விரட்டி விடுவதும், வரம் தந்த சாமியின் கரத்தையும் உதறி விடுவதற்கு சமம்.
குழந்தைப்பேறு அற்றவர்களை விட, அதை இறைவனிடமிருந்து பெற்றவர்கள் தான் அதிக துன்பத்தை அனுபவிக்கின்றனர். இலக்கனத்திற்கு ஐந்தில சுக்கிரன் எனும் சுபர் நின்று, குரு, புதன் போன்ற சுபர்கள் காண, குழந்தைச் செல்வங்களால் கடைசி காலம் வரை நிம்மதியுடன் வாழ்வீர்கள் .

40.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனபார்கள். அடங்காத காளைபோல், திமிறி திரிந்தவனுக்கு மூக்கணாங்கயிறு போல, பெண் வாய்ப்பதும், பவ்யமாய்.நடமாடியவனை பேயாட்டம் போட வைப்பதும் பெண் தான்.
ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஏழாமதிபதியையா, களத்திரக் காரகனான சுக்கிரனையோ, முழுச்சுபக்கிரகமான குரு பார்க்க, தன்மனதுக்கு மகிழவைத் தரும் பெண்ணை மனைவியாக அடைவார்.
எந்த உறவுக்கிரகத்தையும், உதாரணத்துக்கு தாய்க்காரகமான சந்திரனை குரு காண, தாயின் அன்பால் ஜாதகர் பலம் பெறுவார். இதுபோல, மற்றக் கிரகங்களுக்கும் உறவு நிலையைக் காணவேண்டும் .

91501 06069

No comments:

Post a Comment