இந்த உலகில் போலித்தனங்கள் அதிகம் உள்ளன. தன்
வாழ்வின் அதீத மதிப்பை, உண்மை வாழ்வுக்கு தருவதில்லை. எத்தனைவிதமாக முகங்களை காட்ட
முடியுமோ, அத்தனை விதமாக மாற்றிக் கொள்கிறார்கள். மனதின் விகாரங்களை, முகத்தில் பிரதிபலிக்காமல்,
சஞ்சலமற்றவனைப் போல, சலனமே இல்லாதவனைப் போல, கூச்சமே இல்லாமல் புன்முறுவல் புரிவதில்,
மனிதனை மிஞ்சிய உயிரினம் வேறில்லை.
ஒரு மனிதனின் மனதைக் குறிக்கும் கோள் சந்திரனாகும்.
இராகு என்கிற நிழல்கோள், எதையும் பெரிதுபடுத்தும் கோளாகும். அதற்கு எதிர் திசையில்
அமரும் கேது, எதையும் சிறுமைப்படுத்தும் கோளாகும். இப்போது, சிந்திக்கும் திறனுள்ள
இலக்கினத்தில் பெரிதுபடுத்தும் இராகுவும், மனசுக்காரகன் சந்திரனும் கூடி அமர, எல்லாவற்றையும்
பெரிதாய் சிந்தித்து, அதை செயல்படுத்த இயலாமல், மனதளவில் தோற்றுப்போவார்கள். அதேபோல்,
இலக்கினத்தில் கேது, சந்திரன் அமர, சிறியளவில் சிந்தித்து மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.
இதுபோன்ற பலன்கள் அனைத்தும் முன் ஜென்ம வினையால்
நடந்தேறும். இந்த கிரகண தோஷத்தால், பேரும்புகழுமற்று வீணான ஜென்மாய் அலைவார்கள். செல்வமும்
செல்வாக்கும் இழந்தவர்களாய், அவர்களின் கடைசி காலம் இருக்கும் .
20. குழந்தைப் பேறு அற்றவர்களின் விகிதம்
ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. குழந்தைவரம் வேண்டி கோவில்களிலும், மருத்துமனைகளிலும் பலர் தவமாய்Yதவம் கிடக்கின்றனர்.
சமீபகாலங்களில் நாடிபிடித்துப் பார்த்துவிட்டு, வேப்பமர கொளுந்து இலையை கசக்கி, ஏதோ
மந்திரத்தை முணுமுணுத்து, வெறும்வயிற்றில் தின்னச்சொல்லி மூன்று மாதத்தில் நல்லசேதி
தெரியும் எனச் சொல்லிய “ கைராசி “ வைத்தியன் காணாமலே போய்விட்டான். நெற்றியிலே திருநீறு
பூசிவிட்டு, வாயிலே கொஞ்சம் அள்ளிப்போட்டு, நல்லதே நடக்கும் என வாக்குச் சொன்ன பூசாரியும்
பொய்யனாய் தெரிகிறான். ஆனால்,
பிள்ளைவரம் கேட்டு ” திடீர் “ சுவாமியிடம்
சென்றால், அவள் மூக்கின் துவாரத்தில் கைவைத்துப் பார்த்து விட்டு, “ எனக்கு சூரியகலை
ஓடுகிறது, உனக்கும் சூரிய கலை ஓடுகிறது. இப்போது நாமிருவரும் கூடினால், அழகான சித்தன்
பிறப்பான் “ என்று கூறி, அவள் கையை பிடித்து படுக்கைக்கு இழுக்க, அவளோ “ சித்தனும் வேண்டாம், புத்தனும் வேண்டாம்
“ என, விழுந்தடித்து ஓடுகிறாள். அவளே மருத்தவமனைக்குப் போனால், “ டெஸ்ட் டியூப் பேபி
தான், ஐந்து லட்சம் கட்டு “ என்றால், கஞ்சிக்கே பஞ்சாப் பறப்பவளிடம்,, ஐஞ்சு லட்சத்தை,
மிஞ்சிக் கேட்டாலும், கெஞ்சிக் கேட்டாலும் அவள் எங்கே போவாள். ஆம் முகநூல் உறவுகளே!
இதற்கான தீர்வு என்ன?
புத்திரஸ்தானமான ஐந்தாம் வீட்டில், இராகு
இருந்து, குரு, சுக்கிரன் பார்க்காமல், பாவக்கிரகங்கள் பார்த்தாலும், ஐந்தில் இராகு
இருந்து, ஐந்துக்குடையோன் ஆறு, எட்டில் இருந்து, குரு காணாவிடினும், ஐந்தில் பாவக்கிரகங்கள்
இருந்து, ஐந்துக்குடையவன் நீசமாகி, குரு, சுக்கிரன் ஐந்தாம் வீட்டைக் காணாவிடினும்
புத்திரப் பேறு இல்லை.
இதுபோன்ற அமைப்புடைய ஆண்பெண் அனைவரும்,
திருமணத்திற்கு முன்பே, தன்னை முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொண்டு,
அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், திருமணத்திற்குப்
பின் எந்த சுவாமியிடமும் பிள்ளைவரம் கேட்டுப் போகவேண்டியதில்லை. எந்த மருத்துவமனைக்கும்
அலைய வேண்டியதில்லை .
91501 06069
No comments:
Post a Comment