Sunday 22 March 2015

சிந்தனை துளிகள் 5




#################################
நம் எண்ணங்களும், செயல்களுமே, நம்மை சுயபரிசோதனை செய்யும் கருவிகளாகும். இவைகளை புனரமைத்துக்கொள்ளாத எவரும்,வாழவின் உயர்ந்த நிலையில் இருந்தாலும், விளிம்பு நிலையில் வாழ்பவர்களே!!
###############################
தான் ஊர்க்குருவிதான் என்பதை உணர்ந்தவன், எவ்வளவு உயரத்தில் பறந்து திரிந்தாலும், தரைப்பகுதிக்கு பத்திரமாய் வந்து சேர்வான். தன்னிலை மறந்தவன், தரையில் நடந்தாலும் பறக்கிற சிந்தனையில் பாதாளத்தில் வீழ்வான்.
################################
நம் முன்னோர்கள் யுகயுகமாய் அனுபவித்து எழுதிய வைத்ததையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். புதிதாக எதையும் நாம் சொல்லவில்லை. அவர்களுக்குப் புலப்பட்ட எதுவும், நமக்குள் ஏன் தோன்றவில்லை. அவர்கள் இந்த சமூகத்திற்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள். நாமோ, அவர்கள் தேடிவைத்ததை தேடிக் கொண்டிருக்கிறோம்.
#################################
வயிற்றை நிரப்ப சோற்றுக்காக வாழும் மனிதர்களுக்கு உலகம் வெறுமையாகத்தான் தெரியும். வாழத்தெரியாத எவருக்கும் இரசனையற்றதாகவே இருக்கும். உங்கள் வாழ்வு உங்கள் கைகளில். பூமாலையாய் சூட்டிக் கொள்வதும், பிய்த்து எறியப் போவதும் நீங்கள் தான்.
##################################
பணம் செய்யும் மாயத்தைப் பார்த்தால், இறையருளுக்கும் விலை சொல்கிறது. முட்டாளை, முதலாளியாக்கி விடுகிறது. மூடனை அறிவாளியாக்கி அலையவிடுகிறது. மொத்தத்தில் மனிதனை மனிதனாக்க விடாமல் வைத்திருக்கிறது.
###############################
ஆணின் விந்தும், பெண்ணின் சுரேணியமும் கலந்தால், ஜீவன் ஜனிக்கிறதோ, அதேபோல, ஜோதிடத்தில் பாவகமும், காரகமும் இணைந்தால் தான் பிரபஞ்ச சக்தியோடு மனிதன் இயங்க முடியும்.
################################
ஆவதும், மனுஷன் அழிவதும், இன்னும் சொல்லப் போனால், அழிப்பதும் பெண்ணாலே என்றால், ஆணாதிக்க மனோபாவம் மட்டும் காரணமா?
################################
நாம் பேசும் ஒவ்வொரு சொற்களும் அர்த்தம் பொதிந் ததாக இருக்கவேண்டும். எப்போதெல்லாம் அர்த்த மற்றுப் பேசுகிறோமோ. அல்லது அவர்களின் தகுதிக்கு மீறிப் புகழ்கிறோ மோ, அப்போதெல்லாம், நம் பிறப்பின் நோக்கத்தை இழிவு செய்கிறோம்.
###############################
குடும்பவாழ்வில் புரிதல் இல் லாமலே, "இல்லறம் இனிதே" முடிந்து விடுகிறது.
ஆதிக்கங்களால் சாதிப்பது என்ன?
################################

சிந்தனை துளிகள் 4




################################
நம் பூமியின் காற்றுமண்டலத்தில், எங்கே குறைவான காற்றடுக்கு உள்ளதோ, அதை நிரப்புவதற்காக, ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு காற்று செல்கிறது.

எங்கே தேவையும், பற்றாக்குறையும் அதிகம் உள்ளதோ, அந்த திசைநோக்கி அதிவேகமாய், சூறைக்காற்றாகி சுழன்றடிக்கும். எந்த திசையில் சமன்பாடு குறைவோ, அங்கே தென்றலாகி சென்று மறையும்.
################################
உங்களின் மனதில்பட்டதை வெளிப்படையான பேசிவிடும் குணம் கொண்டவராக இருந்தால், இந்த உலகமெனும் நாடகமேடையில் நடிப்பதற்கு, இலாயக்கற்றவர்கள்.. ஒரு முகமூடிக்குப் பத்து முகமூடிகளை கைகளில் வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள். தப்பில்லை.  காரணம், உங்களின் நிஜமுகம் இங்கு யாருக்கும் தேவையில்லை.
என்ன….. அறிவையும், மனதையும் முகமூடிகளாய் நினைத்து, அடிக்கடி கழட்ட வேண்டி வரும்.
###############################
எளிய மனிதனிதனிடம் பேசும்போது, இதயத்திலிருந்து பேசுங்கள். அவன் இறைவனாகக் கூட இருக்கலாம்.
அறிவை முன்னிறுத்தி, மனதை பின்னிழுத்து வைத்துப் பேசாதீர்கள். எங்கிருந்து வெளிப்படும் வார்த்தைகள் சத்தியமானது என்று அந்த இறைவனுக்கும் தெரியும்.   
#################################
நம் கைகளில் எதுவும் இல்லை என்பதற்காக, எதையும் தேடி வைக்காமல் இருக்கிறோமா? சந்ததிகள் வாழ, நம் நிம்மதியைத் தொலைத்துக் கொள்கிறோம். இப்படித்தா னே நம் முன்னோர்களும் நினைத்து இருப்பார்கள். பிறகு ஏன் நாம் நிம்மதியாய் வாழவில்லை.
சேர்த்து வைத்த சொத்துக்கும், நிம்மதிக்கும் தொடர்பில்லை.
################################
எல்லாம் அவன் செயல் என் றால், அவன் படைப்பில் நீ எதற்கு?
##################################
ஒவ்வொரு முறையும் அடுத்தவன் போட்டுவைத்த பாதையில், சொகுசாக செல்லவே விரும்புகிறான். தன் பயணத்தையோ, பாதையையோ தானே தீர்மானிப்பவன் வெற்றிபெறுவான். அவரவர் பாதையில்  அமைதியாக யாரும் பயணிப்பதே இல்லை.
################################
எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விடைகள், இதுதான் என்று எனக்கான கேள்விகளையும் தீர்மானித்து வைத்துள்ளேன். இதிலிருந்து மாற்றுச் சிந்தனைகள் வரும்போது, சிந்தனைகளைத்தான்எதிர்நோக்கவேண்டும். சிந்தித்தவரை அல்ல. 
##################################
பந்தய விளையாட்டில் ஆட்டத்திற்கு உள்ளே விளையாடிக் கொண்டிருப்பவனுக்கும், வெளியே வேடிக்கைப் பார்ப்பவனுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்கே, சுற்றி நிற்பவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, விளையாடுபவனுக்கில்லை.
##################################எவ்வளவு உயரமாக நிமிர்ந்து நின்றாலும், பூமியில் நிலைகொண்டு ஆகவேண்டும். புவியீர்ப்புக்குள் பணியாத எதுவும், அந்தரத்தில் அலைந்துதான் தீரவேண்டும்.
#################################