Saturday 14 March 2015

நான்குவிதமான மலடிகளுக்கான தோஷங்கள். முத்துப்பிள்ளை.



இந்த பிரபஞ்சத்தில் பரிணாமத் தோற்றத்தில் தான் உயிரினங்கள் பல்கிப் பெருகியுள்ளன. எல்லா உயிரினங்களிலும் இனக்கவர்ச்சியின் மூலமே, தங்களின் மரபணுக்களைக் ஒவ்வொரு தலைமுறைகளாக, காலங் காலமாக கடத்தி வருகின்றன. இதில் எந்த உயிரினமாக இருந்தாலும், தன் சந்ததிகளை உருவாக்க முடியாதவைகளும் உண்டு. சந்ததிகளை உருவாக்க முடியாத, எந்த உயிரினமும் வீணான உயிரினமாகக் கருதப்படும். அவைகளை, “மலடுஎன்று ஒதுக்கப்படுகிறது.  

இந்தமலடைநான்கு வகையாக, நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவைகளை, “வந்தியைதோஷம் என்றழைக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------
1) கதவீ வந்தியா :
பெண் குழந்தைகளை மட்டும் எவள் பெற்று எடுக்கிறாளோ, அவள்புருஷ வந்தியைஎன்றும் அழைக்கப்படுவாள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
2) ஸ்திரீ வந்தியை;
எவள் ஆண்குழந்தையை மட்டும் பெறுபவளும், பெண்குழந்தையை பெற முடியாதவளையும், “ஸ்திரீ வந்தியைஎன அழைக்கப்படுவாள்.
--------------------------------------------------------------------------------------------------------------------
3) மிருத வந்தியை:
எவளுக்கு குழந்தைகள் பிறந்து இறந்து விடுகின்றதோ, அவளுக்கு, “மிருத வந்தியைஎன்று பெயர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
4) ஸாஷாத் வந்தியை:
எவளொருத்தி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறாளோ, அவளே, “ஸாஷாத் வந்தியைஎன்று அழைக்கப்படுகிறாள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
வடமொழி நூல்களில் சொல்வது உண்மையான பட்சத்தில், ஆண்பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிகள் மட்டுமே, புத்திர தோஷமற்றவர்கள் என்று ஆகிறது. நம் முன்னோர் சொல்லிய கருத்தை ஆய்வு செய்வோம்.       அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.  
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment