நம் சமூக அமைப்பு குழந்தைப் பேறு அற்றவர்களைப் பார்க்கும் பார்வை மிகக்கொடுமையானது.அவர்கள் ஏதோ இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமூகம்தான். மனதளவில் பெண் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள். அந்த அளவுக்கு ஆணுக்குப் பாதிப்பில்லை. இந்த சமூகம் மலட்டுத்தன்மைடை பெண்ணின் உடல்சார்ந்த நிகழ்வாகப் பார்க்கிறது. திருமணம் முடிந்து சிலமாதங்களிலே குழந்தைக்கு கருவுறவில்லை என்றால், அதையொரு துக்கநிகழ்வாக உறவுகள் விசாரிக்கத் துவங்கும். அந்த விசாரிப்பில் அக்கறை இருப்பதுபோல, மறைமுக வார்த்தைத் தாக்குதல் இருக்கும். நல்லது கெட்டது என்று எங்கும் செல்லமுடியாது. அன்றிலிருந்து கரு உருவாகும்வரை, அந்த பெண் பாவம்தான். இனி குழந்தைப்பேறு கிடைக்காது என்று ஆனபின், அவள் மலடி என்று முத்திரை குத்தப்படுகிறாள்.
குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு பெண்தான் காரணம் என்று, நம் சமூகம் திட்டமிட்டுச் சொல்கிறது. ஆனால், அறிவியலும், ஜோதிடமும் பெண்மட்டும் காரணமல்ல. ஆணும்தான் காரணம் என்கிறது.
========================================================================
1). புருஷ வந்தியை எனும் காகவந்தியா தோஷம்:
இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் சனியும், சூரியனும் கூடியிருந்தாலும், அல்லது இவர்களின் சொந்த வீடுகளில் கூடியிருந்தாலும்,
இதே அமைப்பில் சந்திரனும், புதனும் கூடினாலும், அவர்களின் வீடுகளில் கூடியிருந்தாலும், ஜாதகர்க்கு ஆண் சந்ததி கிடைக்கவாய்ப்பில்லை. பெண் சந்ததியே உண்டாகும். இந்த அமைப்பு என்னுடைய நண்பரின் ஜாதகத்தில் உள்ளது. அவர்க்கு இரண்டுமே பெண்குழந்தைகள். நன்றி.
சுக்கிரனும், புதனும் ஐந்தாமிடத்தில் இருந்து, புத்திர ஸ்தானாதிபதி பலக்குறைவாய் இருந்தால், பெண்குழந்தையே பிறக்கும்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
/////////////////////////////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment