Saturday 29 November 2014

“மேளம் கொட்டு….. தாலி கட்டு…” பாகம்.5.


 
கணவன், மனைவி இருவருக்கும் காம உணர்வுகள் பொதுவானவை. தனக்குக் கிடைக்கும் இன்பசுகத்தைப்போல, தன் இணையான பெண்ணுக்கும் கிடைக்க வேண்டுமென நினைக்கும் மனப்பக்குவத்திற்கு ஆண் வந்து விட்டான். முன்பெல்லாம் தன் உச்சக்கட்ட சுகத்தை வெளிக்காட்டும்சின்ன முனங்களைக்கூட, ஒரு பெண்ணால் வெளிக்காட்ட முடியாது. ஆனால் இன்று அப்படியல்ல. தனக்கான தேவையை, தான் விரும்பும் தேக சுகத்தை எப்படி வேண்டும், அல்லது இப்படி வேண்டாம் சொல்லுவதும், அதைக்கேட்டுப் பெறும் நிலையில் தான் பெண் சமூகம் உள்ளது. இந்த விழிப்புணர்வு எல்லா நிலைகளிலும் இருக்கிறது. இருபாலரும் அதிகமான உடல்சுகத்தை எந்த கிரக அடிப்படையில் பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
இலக்கினம் என்கிற ஜாதகர் பலமானவராக இருக்கவேண்டும். அதன்பின்வீரியத்தைத் தரக்கூடிய மூன்றோனும், ஜாதகரின்சுகத்தைக் குறிக்கும் நான்கோனும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கு ஏழோனும். இவர்களோடே காரகன் சுக்கிரனும், மனதுக் காரகன் சந்திரனும் பலவான்களாக  இருக்க வேண்டும்.

இலக்கினத்தில் சந்திரன், சுக்கிரன் இருந்தாலோ, மனைவியைக் குறிக்கும் ஏழில் இருந்தாலோ, அல்லது இருவரில் ஒருவர் இலக்கினத்தில் இருந்து, மற்றவர் ஏழில் இருந்தாலோ காம சுகத்தில் எல்லை மீறி நடப்பார்.
அதீத வேகத்தையுடைய செவ்வாயும் சுக்கிரனும், சந்திரனும், இராகும் தொடர்பு கொள்ளஉச்சக்கட்டத்தையும்மீறிய காமவேட்கை கொண்டவர். இவர்கள் சனி, கேதுவின் தொடர்பையோ, சாரத்தையோ பெற்றிருக்கக் கூடாது.    

ஒரு இலக்கினத்திற்கு எட்டுக்குடையக் கிரகம், ஏழாம் வீட்டில் அதாவது எட்டாமிடத்திற்கு பனிரெண்டாமிடமான விரையவீட்டில், அமரக் கூடாது. அது கட்டிய மனைவிக்கு ஆபத்தாக முடியும். அது ஜாதகனுக்கும் ஆபத்தான அமைப்பாகும். மேலும், மனைவியின்  குடும்பம் என்பது எட்டாமிடமாகும். அது மனைவியின் ஸ்தானத்துக்கு இரண்டாமிடமாகும். அந்த எட்டாமதிபதி உங்களின் இலக்கினாதிபதியை தொடர்பு கொண்டு, ஏழில் இருந்தால் மனைவியோடு மாமனார் வீட்டில் வாழ்வார். அல்லது மனைவியின் குடும்பத்தோடு அவர்களின் வருமானத்தில் வாழ்க்கை நடத்துவார்.
இலக்கினத்திற்கு ஏழில் இலக்கினாதிபதி நின்றால், மனைவியின் வீட்டில் கணவன் இருப்பதாக அர்த்தமாகும். இவர்கள் மனம் நெருங்கிய ஆத்மார்ந்தம் உணர்ந்தவர்களாக மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.

ஜென்ம லக்கினாதிபதி என்கிற ஆணும், ஏழாமதிபதி என்கிற பெண்ணும் கூடினால் தான் நான்காமதிபதி என்கிற சுகம் கிடைக்குமல்லவா? அதேபோல், இவர்கள் ஒன்று கூட பேரழகியும், மனதுக்கினியவளுடனும் வாழ்க்கை நடத்துவான். மேலும், கிழக்கு இராசிகளிலும், இரிடபத்திலும் கூட அவளிடம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனநிலையுடன் இணைந்து  வாழ்க்கை நடத்துவீர். 

இன்று தனக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் அழகானவளாக இருப்பாளா? அவளின் குணநலன் எப்படி இருக்கும் என்பதனை   காண்போம்.
இலக்கினத்திற்கும் ஏழாமிடத்தில் உள்ள கிரகத்தை வைத்தோ, அதிலுள்ள கிரகங்கள் பெற்ற சாரத்தை   மையப்படுத்தியோ, அல்லது அவ்வீட்டின் அதிபதியையும், அவர் பெற்ற சாரநாதனையும் வைத்தோ மனைவி, அல்லது கணவனின் குணநலன்கள் ,அழகு அனைத்தும் காணவேண்டும்.

 இலக்கினத்திற்கு ஏழாமிடம் நல்லகிரகத்தின் வீதாக இருந்து, அதில் நல்லகிரகம் இருந்து, நல்லகிரத்தின் பார்வையும் பெற்று இருந்தால், அவர்க்கு கிடைக்கும் வாழ்க்கைத் துணை, நல்லகுணமுள்ள, அழகான, அமைதியானதாக கிடைக்கும்.
இலக்கினத்திற்கு ஏழாமிடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்தால், ஜாதகர்க்கு கிடைக்கும் வாழ்க்கைத் துணை அற்புத அழகுடையவளாக இருப்பாள். அழகுதான் ஆபத்து என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அதேசமயம், தேய்பிறை சந்திரனாக இருந்தால், வெறுக்கத்தக்க பிடிவாதத்துடன், சண்டையிடும் மனைவி வாய்ப்பாள்     

ஏழாமிடத்தில் ஆதித்தன் எனும் சூரியன் இருந்து நல்லகிரகம் காண, வாழ்க்கைத்துணை அழகான, ஆளுமைத் திறன் மிக்க, அமைதியானதாக வாய்க்கும்.
ஏழாமிடத்தில் சந்திரனும், ஆறாமதியும் கூட, ஒருவருக்கு ஒருவர் ஆதிக்க உணர்வோடு இருப்பார்கள். அது குடும்பவாழ்வுக்கு தேவையற்றதாகும். இது பிரிவினையைத் தூண்டும் அமைப்பாகும்.

 பொதுவாக ஏழாமிடத்தில் பாவக்கிரகங்கள் இருந்தாலோ, பாவக்கிரக சாரம்பெற்ற கிரகம் இருந்தாலோ, வாழ்க்கைத்துணையால் பிரச்சனைதான் ஏற்படும். ஏழில் சூரியன் இருக்க வாழ்க்கைத்துணை உயர்ந்த இடத்தில் இருந்து வரும். இதேபோல, கிரகங்களின் காரகங்களை வைத்து காணவேண்டும். செவ்வாய் கிரகம் எப்படி வெப்பநிலையில் தகித்துக் கொண்டுள்ளதோ, அதேபோல் ஏழில் இருந்தாலும் அதேநிலைதான். புதனும் குருவும் ஏழில் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கைத்துணை புனிதமாக இருக்கும். ஆனால், பாவக்கிரகங்களின் தொடர்போ, மறைவு அதிபதிகளின் தொடர்போ இருக்க்க் கூடாது. ஏழில் சுக்கிரன் நின்றாலோ, சுக்கிரனின் சாரம்பெற்றக்கிரகம் நின்றாலோ, வரும் வாழ்க்கைத்துணை பாக்கியம் நிறைந்த்தாக இருக்கும். ஏழில் குளிகனோ, கேதுவோ இருக்க தன்தகுதிக்கு கீழான வகையில் அமையும். இவை போன்ற அனைப்புகளில் சீர்தூக்கி பலன்பார்ப்பது நல்லது.

"மேளம் கொட்டு….. தாலி கட்டு…” பாகம். 4.


 
இந்த பதிவில் மறைவிடங்களான 6,8,12ல் களத்திரக்காரகன், களத்திர ஸ்தானாதிபதி, குடும்பாதிபதி, இவர்கள் இருந்தால் என்னநிகழும் என்பதைக் காண்போம்.

பொதுவாக, ஜோதிடக் கல்வியில் 6,8,12 மிடங்களின் அதிபதிகள் நன்மை எதுவும் செய்வதில்லை என்று படித்துள்ளோம். முதலில், ஆறாமிடம் என்பது ஜாதகரின் கடனையும், வழக்கையும், திருமணப் பந்தம் முறிவு அல்லது திருமணம் நிகழாதிருத்தல், தன் மனைவியின் மேல் ஆதிக்கம் செய்வது போன்ற காரகங்களைக் குறிக்கும் இடமாகும். இந்த இடத்தில் ஜாதகரின் இலக்கின அதிபதி சம்பந்தப்பட்டால், அதாவது ஜாதகரை இயக்கும் கிரகம் ஆறில் இருந்தால், கடன், வழக்கு, திருமண முறிவு முதலியவற்றில் சிக்குவார் என்பதாம். அதேபோல், ஆறாமதிபதி இலக்கினத்தில் அமர்ந்தால், கடன், வழக்கு ஜாதகரிடம் நிரந்றடமாய் இருக்கும் என்பதாம்.

இலக்கினத்திற்கு ஏழாமிடம் என்பது ஜாதகரின் மனைவியைக் குறிக்குமிடம் என்பதாக முன்பே கண்டுள்ளோம். அதனால், ஏழாமிடத்திற்கு பனிரெண்டாமிடமே ஜாதகரின் வாழ்க்கைத்துணைக்கு விரைய ஸ்தானமாகும். அதுவே நம் ஜாதகர்க்கு பகையைக் குறிக்கும் ஸ்தானமுமாகும். ஜாதகரின் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் ஏழாமதிபதி, அந்த ஸ்தானத்திற்கு பனிரெண்டில் இருந்தால், இருவரின் பிரிவினைக்கும் வாய்ப்புண்டு.

இலக்கினத்திற்கு எட்டாமிடத்தைக் கொண்டு ஆயுள், வலி, வேதனை, துரதிஷ்டம், போராட்டம். தெய்வக் குற்றம், தெய்வ அருள் கிட்டாத நிலை, ஜாதகரின் அதர்ம சிந்தனை, அவமானம், எதிரிகள் தொல்லை போன்ற கெடுபலன்கள் அனைத்தும் நடக்கும்.

இலக்கினாதிபதி எட்டாமிடத்தில் இருக்கும் போது, இதுபோன்ற காரகப் பலன்களே நடக்கிறது. இதுவே இலக்கினத்திற்கு ஏழாமிடத்திற்கு இரண்டாமிடம் என்பது வாழ்க்கைத் துணையின் குடும்பஸ்தானம் அல்லவா? இங்கே பாவக்கிரகங்கள் கூடினாலோ, ஏழாமதிபதிக்கு பகைபெற்ற கிரகங்கள் இருந்தாலோ, வாழ்க்கைத் துணையின் குடும்ப வாழ்வு பாதிக்கிறது. மேலும்,

இலக்கினத்திற்கு விரைய ஸ்றானமான பனிரெண்டாம் வீடு, ஜாதகரின் மோட்ச ஸ்தானமாகும். ஜாதகரின் ஆன்மா பெறும் விடுதலையைக் குறிப்பிடும் இடமாகும். வாழ்க்கைத் துணையின் ஏழாமிடத்திற்கு ஆறாமிடம், ஜாதகரின் விடுதலை வீடாகும். மேலும், ஜாதகரின் ஐந்தாமிடத்திற்கு எட்டாமிடமும் ஜாதகரின் மக்களிடமிருந்து விடுதலையைக் குறிக்கும் வீடாகும். மனைவி, மக்களிடமிருந்து விடுதலை பெறும் இடமே, ஜாதகரின் பனிரெண்டாமிடமாகும்.

சிலருக்கு திருமணம் நடப்பதில் சிக்கலும், காலதாமதமும், பலருக்கு நடக்காமலே போயும் விடுகிறது. இன்னும் சிலருக்கோ திருமண வாழ்விலே பிடித்தம் இல்லாமல், தனிக் கட்டையாகவே காலத்தை கடத்தி விடுகின்றனர்.

ஒரு ஜாதகர் ஆணாக இருந்தால், அவருக்கு களத்திரக் காரகன் அதாவது மனைவியைத் தருபவர் சுக்கிரன் என்றும், பெண்ணாக இருந்தால், கணவனைத் தரும் கிரகம் செவ்வாய் என்பதும் எல்லோருக்கும் தேரியும்.  இப்போது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகியோ, மறைவுவீடுகளிலோ, அஸ்தங்கம் அடைந்து இருந்தாலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாகியோ, மறைவுவீடுகளில் இருந்தாலோ, அஸ்தங்கம் அடைந்து இருந்தாலும், திருமணத்தின் மேல் நாட்டமிருக்காது. இதேபோல் இருவருக்கும் களத்திரவீட்டின் அதிபதி நீசமோ, மறைவு வீடுகளிலோ, அஸ்தங்கமோ அடைந்து இருந்தாலும், திருமத்தின் மேல் நாட்டமிருக்காது. ஒருவரின் களத்திரகாரகனுக்கு, ஏழாம்வீட்டின் அதிபதி மறைவிடங்களில் இருந்தாலும் காலதாமத திருமணம் தான்.

களத்திர வீட்டின் அதிபதி பலமற்று, புத்திர வீட்டின் அதிபதி பலம்பெற்று இருந்தாலும், திருமணத்தை விரும்ப மாட்டார்.

ஏழாம் வீட்டின் அதிபதியும், களத்திரகாரகனும், குடும்பதிபதியும் பலமற்று இருந்தால், திருமணம் நடக்க வாய்ப்பு குறைவுதான். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குடும்பவீட்டில் சனி, செவ்வாய் ஏழாமதியுடன் தொடர்புடன் இருந்தாலும், குடும்பதிபதி சனி, செவ்வாய் சாரம் பெற்று இருந்தாலும், ஏழாமிடத்தில் சனி, இராகு கூடி நின்றாலும், ஏழாமதிபதி அம்சத்தில் சனி, செவ்வாயுடன் இருந்தாலும் கலகம் செய்து சண்டை, சச்சரவு செய்பவளே மனைவியாகவோ, கணவனாகவோ வருவர்.

ஆணின் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஏழாம்வீட்டில் சூரியன், செவ்வாய் இருந்தாலும், அந்தவீட்டோடு தொடர்பு கொண்டிருந்தாலும், மணமுடிக் கூடிய பெண் வெப்ப உடம்புக்காரியாக இருப்பாள். அதேபோல, ஏழாம் வீட்டில் புதன், குரு சனி, இவர்களில் ஒருவர் இருந்தாலும், அல்லது எவரேனும் இருவரோ, அல்லது மூவரோ   இருந்தாலும், ஏதேனும் வகையில் மூவரில் ஒருவர் தொடர்பு கொண்டு இருந்தாலும் காற்றுப் பிடிப்புள்ளவளும், பெருத்த உடம்புள்ளவளாகவும் வாழ்க்கைத் துணையாக வந்து வாய்ப்பாள். அதே போல், சந்திரன், சுக்கிரன் இருவரும் கூடி ஏழில் இருந்தாலோ, இருவரில் ஒருவர் இருந்தாலோ, அல்லது இவர்களின் தொடர்பு கொண்டாலோ நீர்ப்பிடிப்புள்ளவளே வந்து வாய்ப்பாள். இவள் இசைஞானம் மிக்கவளாகவும், கலைகள் மேல் தீராக் காதல் கொண்டவளாகவும் இருப்பாள்.

ஒரு சின்ன விடயம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

இந்த பூமி நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற நான்கு கூறுகளை தனக்குள்ளே கொண்டுள்ளது. மேடம், சிம்மம், தனுசு இம்மூன்று இராசிகளும் நெருப்புத் தன்மையைக் கொண்டது. இரிடபம், கன்னி, மகரம்  என்ற இம்மூன்று இராசிகளும் நிலத்தன்மையைக் கொண்டது. மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் காற்றுத்தன்மையைக் கொண்டவை. கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் நீர்த்தன்மையைக் கொண்டவை. இப்போது ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஏழாமதிபதி நெருப்பு, நிலம், காற்று நீர் இராசிகளில் அமர்ந்தாலும், காரகன் சுக்கிரன் தொடர்பு கொண்டாலும் இராசிகளின் தன்மைக்கு ஏற்ப மனைவி வந்து அமைவாள்.

உதாரணத்திற்கு, காற்றின் இராசியே ஏழாமிடமாகி காற்றின் கிரகம் அமர்ந்தால், காற்று வலுக்கும். அப்போது பெருத்த உடல் கொண்டவள் மனைவியாக வருவாள். நெருப்பின் இராசியில் காற்றின் கிரகம் அமர்ந்தால், பெருநெருப்பாக மாறிவிடும் அல்லவா? அதேபோல், நெருப்புடன் நீர் சேர்ந்தால், வெப்பம் இருக்காது அல்லவா? காற்றோடு நீர் சேர்ந்தால், பெருமழையும் கொந்தளிப்பும் இருக்குமல்லவா? இந்த கருத்து அனுபவத்தில் சரியாக உள்ளது.

திருமணம் என்கிற மாபெரும் உணர்வுகளின் தொகுப்பை ஜோதிடத்தில் அணுகும் விதத்தைக் காண்கிறோம். இங்கே காரகங்களை மட்டும் மையப்படுத்தி சொல்வதற்கு முயற்சி செய்கிறேன். அவ்வளவுதான்.

 

“மேளம் கொட்டு….. தாலி கட்டு…” பாகம்.3.


 
இலக்கினம் என்பதுநான்என்று முன்பே சொல்லியிருந்தேன். இலக்கினத்திற்கு ஏழாமிடம் என்பது, “என் மனைவிஎன்றும் சொல்லியிருந்தேன்.

இப்போது, நான் என்கிற இலக்கினத்தின் மேல், எந்த கிரகம் உள்ளதோ, அதுஎன் மேல்உள்ளதாகத்தானே அர்த்தம். அப்படியானால், இலக்கினம் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசியின் அதிபதியும், அதற்கு சாரம் கொடுத்தவனும், இலக்கினத்தின் மேல் இருக்கும் கிரகமும், (ஒன்றுக்கு மேற்பட்டக் கிரகங்கள் இருந்தால், அவை ஒவ்வொன்றும்) “நான்என்கிற என்னை இயக்குபவையாக இருக்கும். இதே போன்ற நிலைதான் ஒவ்வொரு பாவகத்திற்கும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டக் கிரகங்கள் இலக்கினத்திலோ, ஏழாமிடத்திலோ, அல்லது இரண்டாமிடத்திலோ இருந்தால், அக்கிரகங்களின் காரக, நட்பு, பகை உறவின் அடிப்படையில், ஜாதகரோ, மனைவியோ, மற்றும் ஜாதகரின் குடும்பத்தினரோ செயல்படுவர்.

இலக்கினாதிபதியுடனோ, இலக்கினத்திலோ பல கிரகங்கள் கூடும் போது, ஜாதகரின்செயல்பாடுகள் பன்முகத் தன்மை உள்ளதாக இருக்கும்.

ஏழாமிடத்தினில் பல கிரகங்கள் கூட, ஜாதகர்க்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை, பலகிரகங்களின் காரகத்தன்மையை தனக்குள் உள்வாங்கியவராக இருப்பார்.  அதனால்தான், திருமணப் பொருத்தம் பார்க்கும் பருவத்தில், ஆண்பெண் இருபாலர் ஜாதகத்திலும், ஏழாமிடம், எட்டாமிடம் சுத்தமாக உள்ளதாக பார்த்துப் பொருத்துகிறார்கள்.

இலக்கினம் என்கிறஜாதகர்க்குஏழாமிடம் ஜாதகரின்மனைவியைக்  குறிக்கும் என்று முன்பே கண்டுள்ளோம்.

இந்த ஏழாமிடத்தில் சூரியன் இருந்தால், ஜாதகர் மணமுடிக்கும் பெண் ஆதிக்க உணர்வுள்ளவளாகவும், சுறுசுறுப்பு மிகுந்தவளாகவும், பிடிவாதம் மிக்கவளாகவும் இருப்பாள்.

இலக்கினத்துக்கு ஏழில் சந்திரன் இருக்க வரக்கூடிய வாழ்க்கைத்துணை எப்படியிருக்கும் என்றால், இரண்டு வகையான நிலைகொண்ட கிரகமான சந்திரன் வளர்பிறையில் நல்ல கிரகமாகவும், தேய்பிறையில் பாவத்தன்மைக் கொண்ட கிரகமாகவும் இருக்கிறார். அதனால், ஜாதகரின் வாழ்க்கை முறையும் மனக்குழப்பமும், சஞ்சலமும் உள்ளவராய் இருப்பார். உடனே அதிலிருந்து தெளிவும் அடைவார். இவர்க்கு அடிக்கடி எண்ணங்கள் அலைமோதிக் கொண்டே இருக்கும்.
ஏழாமிடத்தினில் செவ்வாய் இருக்க, வாய்க்கும் வாழ்க்கைத் துணை அவசரப்படுபவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும், கோபப் படுபவராகவும்  இருப்பார்.

ஏழினில் புதனிருக்க வாய்க்கும் வாழ்க்கைத்துணை அதீத புத்திசாலியாகவும், எல்லாம் தனக்குத் தெரியும் என்கிற இறுமாப்புக் கொண்டவராகவும் இருப்பார்.

ஏழில் குருவிருக்க, வாய்க்கும் வாழ்க்கைத் துணை சிந்தனை தெளிவுடையவர், ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவர். நேர்மையானவர். தூய்மையானவர். அப்பழுக்கற்ற ஒழுக்கம் உதையவராக இருப்பார்.
ஏழில் சுக்கிரனிருக்க, வாய்க்கும் மனைவி அழகானவ்ர். ஆடம்பரப்பிரியை. எப்போதும் பணத்தை கையாள்வதில் குறியாக இருப்பார். தன்னைக் கவர்ச்சியாக்க் காட்டிக் கொள்ள முயல்வார்.

ஏழில் சனியிருக்க வாய்க்கும் வாழ்க்கைத் துணைவர் எந்த வேலையையும் செய்யும் மனதுடையவர், அடிமைச் சிந்தனை அதிகமிருக்கும். மந்த சுபாவம் உடையவர். ஏழில் இருப்பதால் சனியின் தீயப்பார்வை இலக்கினத்தின் மேல் விழுவதால் இருவருக்கும் வாழ்க்கை சோபிக்காது.

 ஏழில் இராகு இருப்பதால் வாய்க்கும் வாழ்க்கைத் துணைவர் எதையும் பெரிதுபடுத்துபவராகவும், அடங்காத தனத்தை அதிகம் கொண்டவராகவும் இருப்பார். இராகு என்பது நிழலைக் குறிக்கும் கிரகமானதால், அது எங்கே படிகிறதோ, அந்த இடம் இருண்டதாகவே போய்விடும். அதனால் தான் ஏழில் இராகு, கேதுவிருக்க களத்திரத் தோஷம் எனப்படுகிறது.
ஏழில் கேது இருக்க, வாய்க்கும் மனைவி ஞானமிக்கவராக இருப்பார். எதிர்மறை சிந்தனை அதிகமிருக்கும். கணவனோ, மனைவியோ இருவருக்கும் ஒத்துப் போகாது. குடும்பவாழ்வுக்கான இணைவை விரும்பாதவர். பிரிவினை எண்ணம் உடையவர்,

இப்பலன்கள் காரகங்களோடு தொடர்பு கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டியது. நம் மனதுக்குள் எழும் கேள்விகளுக்கு ஆங்காங்கே தான் பதில் தரமுடியும். இது சின்ன பதிவுதான்.