Thursday 13 November 2014

சுவையான உணவை உண்பவனைப் பற்றி ஜோதிடம் கூறும் விதிகள்.






மனிதன் ஆற்றோர சமவெளியில் நீரைத்தேக்கி, திமிரித் திரிந்த காளைகளின் கழுத்தில் நுகத்தடியை வைத்தான். ஏரைப்பூட்டி, நெடுவயல் உழுதான். புல்லின் விதையைத் தூவினான். நீரைப் பாய்ச்சினான். கதிரறுத்தான். களஞ்சியம் சேர்த்தான்.
                    
                     வரப்புயர, நீர் உயரும்
                    நீர் உயர, நெல் உயரும்
                    நெல் உயர, குடி உயரும்
                    குடி உயர. கோல் உயரும்
                    கோல் உயர, கோன் உயர்வான்.         என குரல் கொடுத்தான்.


வேட்டைக்கு மாற்றாக, உணவின் தேவையை, உழவே பூர்த்தி செய்தது. உணவுக்காக மட்டுமே, மனிதனின் ஜீவிதம் இருந்தது.
இன்றைய சூழலில் பலதொழில்களில் உலகம் பரிணமித்திருந்தாலும், மனிதனின் வயிற்றுப்பசியைப் போக்குவதற்கே போராடி வருகிறது. உழவு நின்றால், உலகம் சுழல்வதை நிறுத்திவிடும் என்றார் திருவள்ளுவர்.  
                 
                   சுழன்றும் ஏர் பின்னது உலகம். அதனால்
                  உழந்தும் உழவே தலை.   குறள் 1031.

கஞ்சி, கூழ். சோறு, களி என உண்டு கொழுத்து, நாகரீகம் வளர்த்து, வீரம் காட்டினான்.
உணவின் பரிணாமத்தில், உவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, தித்திப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவையை அறிந்தான். உலகின் அத்தனை வகையான உணவுகளையும் ருசி பார்த்தான். எத்தனை அழகானப் பண்டங்கள். கண்ணைக் கவரும் வண்ணங்கள். எச்சிலை ஊற வைக்கும் நறுமணம். நினைத்தாலே தின்னத் துடிக்கும் சுவை
ஏதேதோ உணவுகளைத் தின்று, இப்போது எதைத் தின்கிறோம் என்பதையே தெரியாமல் தின்கிறோம்.


நாம் உண்ணும் உணவு என்ன? நம் உடலுக்கு உகந்ததா? இந்த உணவுகளால் பக்கவிளைவுகள் ஏதேனும்  ஏற்படுமா?

எங்கிருந்தோ வந்த உணவுகளால் தான், நமக்கு இவ்வளவு நோய்கள்.

பார்ப்பதற்கு அழகாக இல்லை என்பதற்காக, களியும், கூழும் காணாமலே போய்விட்டன. கம்பும், கேப்பையும், வரகும், சோளமும், குதிரைவாலியும் நம் மண்ணின் உணவுகள். நம் செரிமான சக்திக்கேற்ப, நம் உடலின் வெப்பநிலைக்கு உகந்த, உணவே இதுதான். நல்ல ஊட்டம் தரும். உயிர் காக்கும் கவசமே, நம் தலைமுறை  உணவுகள்தான்.

அதேபோல் வாழ்க்கைக்கு வழிகாட்ட, உருவான ஜோதிடமும், நாம் உண்ணும் உணவின் தன்மையை விளக்குகிறது

முதலில் சுவைகளைப்பற்றி எந்தெந்த நூல்கள், என்னென்ன கூறியுள்ளன என்பதைக் காண்போம்.


கிரகம்.
சினேந்திர மாலை
மங்களேஸ் வர்யம்
ஜாதக் அலங்காரம்
குமார சுவாமியம்.
பொதுவானவை
சூரியன்

காரம்
காரம்
காரம்
காரம்
காரம்
சந்திரன்


                
துவர்ப்பு
உப்பு
துவர்ப்ப
   



உப்பு
உப்பு

செவ்வாய்
கரிப்பு
கசப்பு
கைபபு
கசப்பு
கசப்பு

புதன்
பலசுவை
பலசுவை
நீர்ப்பு
துவர்ப்பு
பலசுவை

குரு
இனிப்பு
இனிப்பு
இனிப்பு
இனிப்பு
இனிப்பு

சுக்கிரன்
புளிப்பு
புளிப்பு
புளிப்பு
புளிப்பு
புளிப்பு

சனி
கசப்பு
துவர்ப்பு
கசப்பு
கசப்பு
கசப்பு

இராகு
கசப்பு
----------------
------------------
------------------
கசப்பு

கேது
கசப்பு
---------------------
------------------
--------------------
கசப்பு

இலக்கினத்திற்கு  இரண்டு, ஐந்தாமதிபதிகள் தான், உணவின் சுவையை உணரும் தன்மையை தருகின்றன. உணவு உட்கொள்ளும் விதத்தை, இரண்டாமிடத்தைக் கொண்டும், உணவு செரிமானத்தை, ஆறாமிடத்தைக் கொண்டும் அளவிடலாம்.
இரண்டாமதிபதி பாவக்கிரகங்களுடன் கூடினாலும், இரண்டாமிடத்தில் பாவக்கிரகங்கள் நின்றாலும், அதிகமான உணவை உட்கொள்வார்.


இலக்கினத்தில் குரு நின்றாலும், இலக்கினத்தில் புதனும், ஆறாமிடத்தோனும், இராகுவும் கூடி நின்றால், முன் ஜென்ம கர்மவினைப் பயனால், அதிக உணவை உண்பான்.

ஏழாமிடம் நீர் ராசியாகி, நீர்க்கிரகத்துடன் சுக்கிரன் இணைந்தாலோ, அல்லது பார்த்தாலோ, பால், நெய், தயிர் என அதிகம் உண்பார். (கடகம், மகரம், மீனம்+ முழு நீர் ராசிகள். சிம்மம், தனுசு, கும்பம்= அரைப்பங்கு நீர்ராசிகள். மேடம், துலாம், விருச்சிகம் = கால்பங்கு நீர்ராசிகள்)

இலக்கினத்திலும், அதற்கு 7, 10 லும் புதன் நிற்கபலவித சுவைகொண்ட, கலப்பு உணவை உட்கொள்வார்.

இலக்கினத்திலும், அதற்கு 7, 10 லும் சூரியன் செவ்வாய் நிற்கவும், இலக்கினத்திற்கு ஏழாமதிபதி, இலக்கினத்திலும், 7, 10 லும் நிற்க, பலவித சுவைகொண்டகலப்பு உனைவை உட்கொள்வார்.

இரண்டாமதிபதியுடன், குரு, புதன் கூட, அல்லது காண, மிகச்சிறந்த உணவே கிட்டும்.
செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஆறில்  அமர்ந்து, சனி காண, அதிக உணவை உட்கொள்வார்.

இலக்கினத்திற்கு 2, 3, அதிபதிகளுடன் சுக்கிரன் கூடி, இரண்டிலமர, தயிர், மோர், நெய் என, நிரம்ப ஊற்றி சாப்பிடுவான்.

இலக்கினத்திற்கு இரண்டில் செவ்வாய் நிற்க, அரிசி உணவையே அதிகம் விரும்புவான்.

இலக்கினத்திற்கு இரண்டுக்குடைய கிரகம் நல்ல கிரகங்களுடன் கூடினாலும், நல்ல கிரக பார்வை பெற்றாலும்நல்ல தரமான உணவு கிட்டும். மேலும், வெகு சீக்கிரத்தில் சாப்பிட்டு  விடுவார்.

இரண்டாமதிபதி சர ராசியில் (துரித ராசி) இருந்தால், வெகு சீக்கிரமே சாப்பிட்டு விடுவார்.
இரண்டுக்குடைய கிரகம், சந்திரன், சுக்கிரன் மூவரும், இலக்கினத்திற்கு மறையால், கேந்திர கோணங்களில் அமர, நல்ல தரமான, சுவையான உணவுகிட்டும்.

இரண்டாமதிபதி பகை, நீசம் பெறாமல், பாவக்கிரகங்களுடன் கூடாமல், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால், ஜாதகர்க்கு எக்காலத்திலும் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது.

ஐந்தாமதிபதி நல்ல கிரகமாகி, ஐந்தில் நல்ல கிரகமிருந்து, ஐந்தாமதிபதி நின்ற வீட்டோன் நல்லகிரகமாக இருந்து, இவர்களை குரு, சுக்கிரன் கண்டால், தெய்வ அனுக்கிரகம் மிகுந்த உணவு கிட்டும்.

இரண்டாமதிபதியாக குரு, சுக்கிரன் இருந்து, புதன் காண, தெய்வ அனுக்கிரகம் மிகுந்த உணவு கிட்டும்.

இலக்கினத்திற்கு 5, 6, 7, 8, 9, 9, 10, 12 ஆகிய இடங்களில் புதன் நின்றாலும், இரண்டாமதிபதி கேந்திர, கோணாங்களில் நின்றாலும், குரு, சுக்கிரன் கூடி நின்று, இரண்டாமிடத்தில் சுபக்கிரகங்கள் நின்றாலும், இவர்களை இலக்கினாதிபதி கண்டாலு,ம் மூன்றாமிடம் குரு வர்க்கமாகி, மூன்றாமதிபதி இலக்கின கேந்திரம் பெற்றாலும், ஜாதகர் நல்ல தரமான உணவையே உட்கோள்வார்.

இலக்கினத்தில் குரு, நான்கினில் சுக்கிரன், இலக்கினாதிபதி கேந்தி,கோணம் பெற, இந்த மூன்று நிலைகளும், ஜாதகர்க்கு நல்ல தரமான உணவையே தருகின்றன.

இலக்கினத்தில் சூரியன், இரண்டில் சுபக்கோள், இரண்டாமதிபதியும், சுக்கிரனும் கூட, ஜாதகர்க்கு சுமாரான உணவே கிட்டும்.

இரண்டு, ஏழுக்குடையவர்கள் மூன்றில் கூட, மூன்றுக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற, அன்னசத்திரம் கட்டி, எளியோர்க்கு உணவளிப்பான்.
                       
                       ஆசானும் புந்தி மிக்க அன்புடன் கூட அன்றி
                       நேசமாய் பார்க்க வாக்கோன் நின்றிட கேந்திரத்தில்
                       பாசமிக்குடையோராக பசி களைந்து அன்னதானம்
                       ஆசாரத்தோடு நாளும் அட்டியில்லா அளிப்பானாமே ! .
                                                                                                நவீன ஜோதிட சிந்தாமணி.

இரண்டாமதிபதி கேந்திரம் பெற, குருவும், புதனும் கூட, அல்லது காண, நாள்தோறும் தடையில்லாமல், அன்னதானம் வழங்கி வருவான்.

இதுவரை தரமான உணவு கிடைக்கும் கிரக அமைப்புகளைக் கண்டோம். கெட்ட உணவு கிடைக்கும் அமைப்பையும், உணவே கிடைக்காத கிரக அமைப்புகளைப் பற்றியும்  அடுத்த கட்டுரையில் காண்போம்.

முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர். அஞ்சல். 624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069.


No comments:

Post a Comment