உலகில்
உள்ள எல்லா
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும்,
அரண்மனையில் தான்
வாழ்ந்திருந்தார்கள். ஆனால்,
எல்லா அரசர்களும்
அரண்மனை கட்டினார்களா என்றால்,
இல்லை என்றுதான்
பதில் வரும்.
சிலமன்னர்கள் கலைகளை
வளர்ப்பதிலும், சில
மன்னர்கள் சமாதானமாய்
சென்று, நாட்டை
அமைதி பூங்காவாக
வைத்திருப்பதிலும் கவனம்
செலுத்துவர். ஏதோ
ஒன்றிரண்டு மன்னர்கள்தான்,
அலங்காரமிக்க அரண்மனைகளை
உருவாக்குவர். கட்டிட
நுணுக்கங்களும், கலைநயமுமிக்க அரண்மபைகள்
இருக்கத்தான் செய்கின்றன.
ஒருவரது
ஜாதகத்தில் எத்தகைய
கிரக அமைப்புகள்
இருந்தால் பங்களா
கட்டும் யோகம்
அமையும் என்பதைப்
பார்ப்போம்.
அரசே கேள் வாகனத் தானாதி நின்ற ராசி
அன்போடு நல்லோர் வீடாகிப் பணபரம், கேந்
திரமாய் உறைசெறியுச் சனித்த
சிறு குடிசையும் மாட அரங்கம்”
ஒருவரின்
ஜாதகத்தில் இலக்கினத்துக்கு நான்கிற்குடைய
கிரகம் எந்த
வீட்டிலமர்ந்துள்ளதோ, அந்த
வீடு சுபக்கிரக
வீடாக இருக்கவேண்டும்.
அந்த வீடு,
நான்காம் வீட்டுக்கு
கேந்திரமாகவோ (1,4,7,10), பண்பரஸ்தானமாகவோ
(2,6, 8, 11) இருக்கவேண்டும். அப்படியிருந்தால்,ஜாதகரின்
குடிசைவீடு, வருங்கலத்தில் மாடமாளிகையாய்
உயர்ந்துவிடும்.
1. இலக்கினாதிபதியும்,
நான்காம் அதிபதியும்
கேந்திர, திரிகோணங்களில் அமர,
இவர்களை சுபக்கிரகங்கள் காண,
அலங்காரமிக்க மாளிகை
கட்டுவார்.
2. இலக்கினாதிபதி
1,2,5,9,11,-ல் இருந்து,
அவ்வீடே ஆட்சி,
உச்ச, நட்பு
வீடாக இருந்து,
குரு போன்ற
சுபக்கிரகங்கள் காண,
ஜாதகர் குடியிருக்கும் மஆளிகைக்கு
நான்கு திசைகளிலும் வாசல்
இருக்கும்.
3. இலக்கினாதிபதி கேந்திர,
திரிகோணங்களில் இருந்து,
நான்காம் வீட்டில்
சுபக்கிரகமிருந்தால், மாளிகை
வீடு கட்டுவார்.
4. நான்காமதிபதி குரு,
சுக்கிரனுடன் கூடினாலும்,
அல்லது இவர்களுக்குள் தொடர்பு
ஏற்பட்டாலும், மாளிகை
கட்டி வாழ்வார்.
5. “”………….நாலோனும்
உச்சம் தன்னில்
நேயவே
பெருமாடக்கூடமுண்டாம்”
7 “புந்தி
பத்து எட்டில்
புதுமனை கட்டுவானாம்”
8 “புந்தியை
பாவர் பார்க்கில்
புதுமனை உண்டாம்
பாரே” என்று
வீமகவியில் கூறப்பட்டுள்ளது. (புந்தி=
புதன்)
9 இலக்கினத்துக்கு நான்காமதிபதி,
புதன், வளர்பிறை
சந்திரனுடன் கூடினாலும்,
அல்லது, அவர்களுக்குள் தொடர்பு
ஏற்பட்டாலும், புது
மாளிகை கட்டி,
அதில் வாழ்வார்.
10 “அறிவித்தேன் ஐந்துக்கு ஐந்தோன்(ஒன்பதாம் அதிபதி) தானும்
அப்பனே அப்பதிக்கு கோணம் தன்னில்
தெரிவித்தேன் திரவியமும் காடியுண்டு
திடமான மனைகட்டி ஆளுவானாம்”
11 இலக்கினாதிபதியும்,
நான்காமதிபதியும் பரிவர்த்தனை பெற,
அழகான மாளிகைவீடு
கட்டுவார்.
12 இலக்கினத்துக்கு நான்காம்
வீட்டில், சூரியனும்,
சந்திரனும் கூடி
நின்றால், மாட
மாளிகையுடன் உப்பரிகையும் கட்டிவாழ்வார்.
13 “
சொல்லும் புதனும் சுங்கனும் சூழ்ந்து இலாபம் தன்னிலேற
நல்ல குருவும் ஆட்சி உச்சம் நாடியிருக்கச் சாதகர்க்கு
வெல்லும் பூமி மனைமச்சு மிகப்பூஷணம் உண்டாகி
வல்ல சேயும் செல்வமுடன் வாழ்வான் என்றே வழுத்துவையே”
என்று வீமனவியில் கூறப்பட்டுள்ளது.
இங்கே
குறிப்பிடப்பட்டுள்ள விதிகளில்,
சில உங்கள்
ஜாதகத்திலும் பொருந்திவரலாம்.
அப்படியிருந்தால், நீங்களும்
மாட, மாளிகை
கூட கோபுரமெல்லாம் கட்டுவீர்கள்.
உங்களை
எந்த. கிரகங்கள்
ஆட்சி செய்கின்றன
என்பதைப்பொறுத்தே, இது
போன்ற நல்லபலன்கள் நடக்கும்.
பங்களா போன்ற
வீடுகட்டி, பெருவாழ்வு
வாழ இறைவன்
அருள் புரியட்டும்.
வாழ்க
வளமுடன்
வாழ்க
வாழ்கவே
முத்துப்பிள்ளை
4/7/1.
வடக்கு
வெள்ளாளர் தெரு
ஆத்தூர்.
அஞ்சல். 624 701
ஆத்தூர்.
வட்டம் திண்டுக்கல் மாவட்டம்.கைபேசி
எண் 91501 06069.
No comments:
Post a Comment