Saturday 29 November 2014

“மேளம் கொட்டு….. தாலி கட்டு…” பாகம்.3.


 
இலக்கினம் என்பதுநான்என்று முன்பே சொல்லியிருந்தேன். இலக்கினத்திற்கு ஏழாமிடம் என்பது, “என் மனைவிஎன்றும் சொல்லியிருந்தேன்.

இப்போது, நான் என்கிற இலக்கினத்தின் மேல், எந்த கிரகம் உள்ளதோ, அதுஎன் மேல்உள்ளதாகத்தானே அர்த்தம். அப்படியானால், இலக்கினம் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசியின் அதிபதியும், அதற்கு சாரம் கொடுத்தவனும், இலக்கினத்தின் மேல் இருக்கும் கிரகமும், (ஒன்றுக்கு மேற்பட்டக் கிரகங்கள் இருந்தால், அவை ஒவ்வொன்றும்) “நான்என்கிற என்னை இயக்குபவையாக இருக்கும். இதே போன்ற நிலைதான் ஒவ்வொரு பாவகத்திற்கும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டக் கிரகங்கள் இலக்கினத்திலோ, ஏழாமிடத்திலோ, அல்லது இரண்டாமிடத்திலோ இருந்தால், அக்கிரகங்களின் காரக, நட்பு, பகை உறவின் அடிப்படையில், ஜாதகரோ, மனைவியோ, மற்றும் ஜாதகரின் குடும்பத்தினரோ செயல்படுவர்.

இலக்கினாதிபதியுடனோ, இலக்கினத்திலோ பல கிரகங்கள் கூடும் போது, ஜாதகரின்செயல்பாடுகள் பன்முகத் தன்மை உள்ளதாக இருக்கும்.

ஏழாமிடத்தினில் பல கிரகங்கள் கூட, ஜாதகர்க்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை, பலகிரகங்களின் காரகத்தன்மையை தனக்குள் உள்வாங்கியவராக இருப்பார்.  அதனால்தான், திருமணப் பொருத்தம் பார்க்கும் பருவத்தில், ஆண்பெண் இருபாலர் ஜாதகத்திலும், ஏழாமிடம், எட்டாமிடம் சுத்தமாக உள்ளதாக பார்த்துப் பொருத்துகிறார்கள்.

இலக்கினம் என்கிறஜாதகர்க்குஏழாமிடம் ஜாதகரின்மனைவியைக்  குறிக்கும் என்று முன்பே கண்டுள்ளோம்.

இந்த ஏழாமிடத்தில் சூரியன் இருந்தால், ஜாதகர் மணமுடிக்கும் பெண் ஆதிக்க உணர்வுள்ளவளாகவும், சுறுசுறுப்பு மிகுந்தவளாகவும், பிடிவாதம் மிக்கவளாகவும் இருப்பாள்.

இலக்கினத்துக்கு ஏழில் சந்திரன் இருக்க வரக்கூடிய வாழ்க்கைத்துணை எப்படியிருக்கும் என்றால், இரண்டு வகையான நிலைகொண்ட கிரகமான சந்திரன் வளர்பிறையில் நல்ல கிரகமாகவும், தேய்பிறையில் பாவத்தன்மைக் கொண்ட கிரகமாகவும் இருக்கிறார். அதனால், ஜாதகரின் வாழ்க்கை முறையும் மனக்குழப்பமும், சஞ்சலமும் உள்ளவராய் இருப்பார். உடனே அதிலிருந்து தெளிவும் அடைவார். இவர்க்கு அடிக்கடி எண்ணங்கள் அலைமோதிக் கொண்டே இருக்கும்.
ஏழாமிடத்தினில் செவ்வாய் இருக்க, வாய்க்கும் வாழ்க்கைத் துணை அவசரப்படுபவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும், கோபப் படுபவராகவும்  இருப்பார்.

ஏழினில் புதனிருக்க வாய்க்கும் வாழ்க்கைத்துணை அதீத புத்திசாலியாகவும், எல்லாம் தனக்குத் தெரியும் என்கிற இறுமாப்புக் கொண்டவராகவும் இருப்பார்.

ஏழில் குருவிருக்க, வாய்க்கும் வாழ்க்கைத் துணை சிந்தனை தெளிவுடையவர், ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவர். நேர்மையானவர். தூய்மையானவர். அப்பழுக்கற்ற ஒழுக்கம் உதையவராக இருப்பார்.
ஏழில் சுக்கிரனிருக்க, வாய்க்கும் மனைவி அழகானவ்ர். ஆடம்பரப்பிரியை. எப்போதும் பணத்தை கையாள்வதில் குறியாக இருப்பார். தன்னைக் கவர்ச்சியாக்க் காட்டிக் கொள்ள முயல்வார்.

ஏழில் சனியிருக்க வாய்க்கும் வாழ்க்கைத் துணைவர் எந்த வேலையையும் செய்யும் மனதுடையவர், அடிமைச் சிந்தனை அதிகமிருக்கும். மந்த சுபாவம் உடையவர். ஏழில் இருப்பதால் சனியின் தீயப்பார்வை இலக்கினத்தின் மேல் விழுவதால் இருவருக்கும் வாழ்க்கை சோபிக்காது.

 ஏழில் இராகு இருப்பதால் வாய்க்கும் வாழ்க்கைத் துணைவர் எதையும் பெரிதுபடுத்துபவராகவும், அடங்காத தனத்தை அதிகம் கொண்டவராகவும் இருப்பார். இராகு என்பது நிழலைக் குறிக்கும் கிரகமானதால், அது எங்கே படிகிறதோ, அந்த இடம் இருண்டதாகவே போய்விடும். அதனால் தான் ஏழில் இராகு, கேதுவிருக்க களத்திரத் தோஷம் எனப்படுகிறது.
ஏழில் கேது இருக்க, வாய்க்கும் மனைவி ஞானமிக்கவராக இருப்பார். எதிர்மறை சிந்தனை அதிகமிருக்கும். கணவனோ, மனைவியோ இருவருக்கும் ஒத்துப் போகாது. குடும்பவாழ்வுக்கான இணைவை விரும்பாதவர். பிரிவினை எண்ணம் உடையவர்,

இப்பலன்கள் காரகங்களோடு தொடர்பு கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டியது. நம் மனதுக்குள் எழும் கேள்விகளுக்கு ஆங்காங்கே தான் பதில் தரமுடியும். இது சின்ன பதிவுதான்.

No comments:

Post a Comment