நம்மில் பலருக்கு மிக இளம்வயதிலே திருமணம் முடிந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு வயது சென்றாலும் மணமுடிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். இதற்கு குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உடல், மன ரீதியாகவும் பலகாரணங்கள் இருந்தாலும், நாம் சார்ந்திருக்கும் ஜோதிடரீதியாகவும் காரணங்களை ஆய்வு செய்வோம்.
இலக்கினம் என்பது, “நான்” ஆகும். நான் என்கிற இரண்டாமிடத்தில், எனது, “குடும்பம்” உள்ளது. இதே போல் இலக்கினத்திற்கு
மூன்றாமிடத்தில்,
எனது,
“வீரியம்”
அதாவது
அடக்கியாளும்
திறன்
உள்ளது.
நான்காமிடத்தில்
நான்
அனுபவிக்கும்
“சுகம்”
உள்ளது.
ஐந்தாமிடத்தில்
எனது,
“குழந்தையும்,
சொத்தும்”
உள்ளது.
ஆறாமிடத்தில்
“என்
எதிரியும்,
என்
கடனும்”
உள்ளது.
ஏழாமிடத்தில்
“என்
மனைவி”
உள்ளாள்.
இதேபோல்
மற்ற
வீடுகளுக்கும்
பார்த்துக்
கொள்ள
வேண்டியது.
நம்முடைய ஜாதகத்தில் முழுமையான நல்லக்கிரகமான
குரு
கோச்சாரத்தில் 2,5,7,9,11 ல் இருந்தால் மட்டும் மணமுடிக்க முடியுமா? நம் இராசியின்படி குருபலம் வந்து விட்டால், அதன் காரணமாக திருமணம் முடிந்து விடும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த எண்ணம் நம் மக்களின் எண்ணத்துக்குள்
எப்படி
வந்தது?
ஒட்டுமொத்தமாக “புனிதமான ஜோதிடத்தின்” பக்கம் கைகாட்டி விடமுடியாது. தன் சுயலாபத்திற்காக வானியலை பயன்படுத்தும் “ஜோதிடர்கள்” தான் காரணம்.
ஆணாக இருந்தால் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனும், மனைவியைக் குறிக்குமிடமான
ஏழாமிடத்தின்
அதிபதியும்,
ஏழாமிடத்தில்
இருக்கும்
கிரகங்களும்,
ஏழைப்
பார்க்கும்
கிரகங்களும்,
இவைகளோடு
தொடர்புடைக்
கிரகத்தின்
தசாபுக்திகளும்,
கோச்சாரக்கிரகங்களும்
பலம்பெற்று
வலுவுடன்
இருக்கும்
காலத்தில்
திருமணம்
நிகழும்.
இலக்கினத்திற்கு
ஏழுக்குடைய
கிரகம்,
சனியுடன்
கூடினாலோ,
அல்லது
களத்திரக்
காரகனோ,
குடும்பதிபதியோ
சனியுடன்
கூடினாலோ,
ஜாதகர்க்கு
கால
தாமதத்
திருமணம்
தான்
நிகழும்.
பாவருடன்
கூடாத
முழுமையான
நல்லகிரகமான
குரு
காண,
பலன்கள்
மாறுபடும்.
இலக்கினம் என்பது, “நான்” என்று முன் பதிவில் கண்டிருந்தோம். அதேபோல, ஏழாமிடத்தை “மனைவி” இருக்குமிடமாக படித்துள்ளோம். இப்போது, நான் என்கிற இலக்கின அதிபதி, என் மனைவி என்கிற ஏழாமிடத்தில் இருந்தாலும், என் மனைவியைக் குறிக்கும் ஏழாமதிபதி, நான் என்கிற இலக்கினத்தில் இருந்தாலும், கணவன், மனைவி இருவரும் அதீத பிரியமுடன் மிக்க அன்புடன் இணைந்தே வாழ்வார்கள்.
No comments:
Post a Comment