Thursday 6 November 2014

மாயத்தின் எல்லைகள்.

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 2956
                                                        திருமந்திரம்.

நவீன யுகமெனக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில் தான் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றோடு நின்று போனது. இருபது முப்பது வருடங்களுக்கு முன்புவரை, குறைந்தபட்சம் ஒரு தம்பதியர்க்கு நான்கு, ஐந்து குழந்தைகளாவது இருப்பர். அதற்கு மேல் இருந்தாலும் ஆச்சரியமில்லை. அவர்களுக்கு, திண்ண தின்பண்டம் கூட கிடைக்காது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வாங்கிவரும்     தின்பண்டத்தை சரிசமமாக, பெற்றவர்களால்    பங்கிட்டுத் தரமுடியாது. அப்படியே பங்கிட்டுத் தந்துவிட்டதாக கருதினாலும், தனக்கு குறைவாகக் கொடுக்கப்பட்டதாகவே, ஒவ்வொரு குழந்தைகளும் நினைக்கும். “அவனுக்கு கூட கொடுத்துட்டஎன்கிற அடமும் உண்டு. இந்த அஞ்சில ஒண்ணு அடாவடிக் குழந்தையும் இருக்கும். அந்த முரடன்  வலுக்குறைந்த அப்பாவிக்  குழந்தையிடமிருந்து பறித்தும் வாயில போட்டு மென்றுவிடுவான். தின்ற முடித்தவுடன் கைவிரித்து, தன்னிடம் ஒன்றுமில்லை என்று கைவிரித்து காட்டி சிரிப்பான். பாவம்  அவன் விக்கித்து அழுவான். ஒரே களேபரம் தான். இது நாம் அன்றாடம் பார்த்த செயல்.  ஒன்று புடுங்கித் தின்றிருப்போம். இல்லையென்றால் பறி கொடுத்திருப்போம் இல்லையா! சரி இப்போது விடயத்துக்கு வருவோம்..

நாம் எப்போதும் உறவுகளின் பிணைப்பிலே வாழ்வதால், நம்மை ஆளும் கிரகங்களுக்கும் உறவுகளைச் சொல்லியே இணைத்துப் பார்க்கிறோம். நம் அண்டத்தில்   சூரியன் தந்தையென்றும், சந்திரனை தாய் என்றும், செவ்வாயை சகோதரன் என்றும், புதனை மாமன் என்றும், குருவை ஆசான் என்றும், சுக்கிரனை மனைவி என்றும், சனியை வேலையாள் என்றும், இராகுவை தந்தைவழி பாட்டன் என்றும், கேதுவை தாய்வழி பாட்டன் என்றும்   அழைக்கிறோம். நமக்கும், கிரகங்களுக்கும் குடும்ப உறவுத்தொடர்பு இருப்பதால், உறவுகளுக்குள் உண்டான பலசாலிப் போட்டியைப் போல, கிரகங்களுக்கும் உண்டாகிவிட்டது என நினைக்கிறேன்.   

நவக்கிரகங்களின் வலிமையற்ற கிரகத்தில் முதல் கிரகம் புதன்தான். இவரை விட செவ்வாய் வலுவானது   இதேபோல, செவ்வாயை விட சனி வலுவானது. சனியை விட குரு வலுவானது. குருவை விட சுக்கிரன்   வலுவானதுசுக்கிரனை விட சந்திரன் வலுவானது. சந்திரனை விட சூரியன் வலுவானது. சூரியனை விட இராகு வலிவானது. இராகுவை விட கேது வலிவானது. இப்படி நவக்கிரகங்களின் பலத்தை, ஒரு கிரகத்துக்கு மறுகிரகத்தை ஒப்பிட்டு, நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்.  

இங்கே, புதன், செவ்வாய், சனி, குரு, சுக்கிரன் இந்த ஐந்தும் தான், பாறைகளும், மணல்களும், தாதுக்களும் கூடிய  உண்மையான கிரகவரிசையில் இடம்பெற்றுள்ள கிரகங்கள் ஆகும். இந்த கிரகங்கள்தான் ஒன்றுக்கொன்று பலம்மிக்கதாகச் சொல்லப்பட்டுள்ளது. இவையனைத்தையும் விட, பூமியின்  துணைக்கிரகமான சந்திரன் வலுவானவன். இந்த துணைக்கிரகமான சந்திரனை விட, நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்ட சூரியன் வலுவானவன். அந்த சூரியன் எனும் நட்சத்திரத்தை விட, பூமியின் தென்துருவ வெட்டுப்புள்ளியும், இராகு எனுப்பெயரிடப்பட்ட கருநிழல்  வலுவானது. இந்த கருநிழலைவிட தென்துருவ வெட்டுப்புள்ளியான செந்நிழல் கேது வலுவானது என்று நம் முன்னோர்கள் பிரித்துள்ளனர்.

எந்த கிரகம் முதலில் தன் ஈர்ப்பு பலத்தை இழக்கிறதோ, அந்த கிரகம், தன்னைவிட பலமிக்க கிரக ஈர்ப்பில் ஈர்க்கப்படும் போது, முதலில் புதன் செவ்வாயின் வட்டப் பாதைக்குள் நுழைந்து விடும். இதேபோல், ஒவ்வொரு கிரகமும், தன்னை விட பலமிக்க்க் கிரகத்துடன் இணையும் போது, பூமியும், சந்திரனும் சூரியனின்  ஈர்ப்புப்பாதைக்குள் நுழைந்து, அண்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அதன்பின் இருண்ட ஈர்ப்பின் மையம் மட்டும் சுற்றிவரும்.  அண்டமும், பேரண்டமும் மாயம் என்றும், ஒன்றுமில்லாதது என்றும் ஆகிவிடும்.

கிரகங்களைவிட, துணைக்கிரகம் வலுவானது. துணைக்கிரகத்தைவிட நட்சத்திரம் வலுவானது. நட்சத்திரத்தைவிட, நிழல் வலுவானது. அண்ட,பேரண்ட முடிவில் இருள் மட்டும் நிரந்தரமானது.  ஆம்….

மானிடஜீவன்கள் மட்டுமல்ல, அண்ட பேரண்டமும் மாயையில்தான் சூழ்ந்து உள்ளது. அதிலிருந்து மீளும்வழி நமக்குள்தான் உள்ளது.

என்றும் உங்கள் முத்துப்பிள்ளை. 91501 06069,    9345636268

No comments:

Post a Comment