இந்த மனிதப்பிறவியில் அவனின் வாழ்க்கை
எவ்விதம் அமையவேண்டும் என்பது, முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அப்படி தீர்மானிக்கப்பட்டதை,
அவனுக்கு உணர்த்தவும் தவறவில்லை. இதை தீர்மானித்தவனும்,
அதை வெளிப்படுத்தியவனும் ஒருவனே! அவனை இறைவன் என்று மேம்படுத்திச் சொன்னாலும், இயற்கை
என்று தன் வாழ்வியல் சூழலோடு இணைத்துச் சொன்னாலும், ஏதோவொன்று உணர்த்தியது என்றுதானே
அர்த்தம்.
பிறவிச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட மனிதன்,
தன் பகுத்தறியும் தன்மையால் அண்டவெளி இரகசியங்களை அறியமுயல்கிறான். அறிந்ததை பகுத்தறிந்து
விடையும் தேடுகிறான்.
இறைவனுக்கும், மனிதத்துக்குமான இடைவெளியை
ஒன்பது கோள்களையும், இருபத்தியேழு நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
மனிதத்தைப் பற்றிய இறைவன் வகுத்தச் சூட்சுமங்களை, பதினெட்டுச் சித்தர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இவர்களிடமிருந்தே ஜோதிடப் பேரொளி உலகெங்கும் பரவியது.
இதற்கு முந்தைய பிறவிகளில் தான் கற்றதையும்,
கற்றுக் கொடுத்ததையும், இந்தப் பிறவியில் தான் கற்றதையும், மற்றவர்களுக்கு கற்றுத்
தந்தவன் மனிதன் மட்டுமே!
அறம் சார்ந்து வாழவேண்டும் என்பதே மனித
இரகசியமாகும். இல் + அறமும், துற + அறமும் மனித வாழ்வியலின் குறியீடுகளாகும். ஒரு மனித
வாழ்வில் இல்லறமும், துறவறமும், ஏதோ இப்பிறவியில் “திடும்” என நிகழ்ந்திடுவதில்லை.
இப்பிறவியில் நுகரப்படும் அல்லது அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்கள், இப்பிறவிக்குண்டான
வினைகள் என்று நினைத்தால் அது தவறு. இவைகள் ஏழேழுப் பிறவிகளின் கர்மாத் தொகுப்பாகும்.
முன்பிறவிகளின் கர்மாக்களின் வரவு, செலவுகள்,
இப்பிறவியில் பூர்வபுண்ணியங்களால் சரிபார்க்கப்படும். சென்ற பிறவியின் கர்மாக்கள்,
இப்பிறவியில் ஜீவனால் அனுபவிக்கப்படுகிறது.
ஒரு மனிதனுக்குள் ஆசைகள் ஊற, ஊற கர்மாக்களும்
ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். ஆசைகள் அழிந்தால், கர்மங்கள் அழியும். கர்மம் அழிந்தால்,
மனம் ஒடுங்கும். மனம் ஒடுங்கினால், பரவெளி நிசப்த்தத்தில் ஜீவன் நிலைக்கும். அந்த பிரபஞ்சப்
பேரொளியில் ஜீவன் பயணிக்கும்.
சென்றபிறவிகளில் தேடித்தேடிச் சேர்த்த
கர்மங்கள் யாவும், அப்பிறவியிலே தொலைந்து விடாது. அவைகள் யாவும் இப்பிறவியிலும் தொடர்ந்து
வரும். இந்த பிறவி வாசனையை நுகராத, ஆத்மாக்கே இல்லையெனலாம். மனிதக்கர்மங்கள் மீறாத
தர்மங்கள் செய்திருந்தால், அவைகள் இப்பிறவியிலும் தொடரும்.
ஒவ்வொரு பிறவியிலும் சேர்க்கப்படும் பாவக்
கர்மங்கள் கூடகூட, பரப்பிரம்மத்தோடு இணைய வேண்டிய, தூய ஆத்மாக்கள் சிதைக்கப்பட்டு அழிவதை
சந்திக்கும். இதற்கு நம் பிறவியும் ஒரு காரணமாக இருந்து விடக் கூடாது.
உலகில் தோன்றிய சிந்தனையாளர்களும் அவர்களின்
வார்த்தை வெளிப்பாடுகளும், உரைகளும், மனித மனங்களை செம்மைப் படுத்தும் வழிகளாகவே பார்க்கப்பட்டன.
அவர்களின் சிந்தனா மொழிகள் அனைத்தும், ஆத்மாவை அழிவில் இருந்து காக்கவே பயன்பட்டன.
ஆனால், சடங்குகளை கைகளில் எடுத்த மனிதன், சாத்திரங்களை குப்பையென புறம் தள்ளினான்.
பிறவித் துன்பங்களுக்கு பரிகாரங்கள் மூலம்
வழிகாண முயன்றான். ஜென்மாதிஜென்மப் பாவங்களை மந்திர மொழியால் வென்று விடலாம் என புத்திக்குள்
புகட்டப்பட்டன. ஆனால்,
பிறவித் துன்பங்களுக்கு கர்மாவே காரணம்.
அதனால், பரிகாரம் தீர்வல்ல. நம் கர்மவினைகளுக்கு பரிகாரம் செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குத்தான்
உண்டே தவிர, மனிதனுக்கு இல்லை. மனிதத் தோற்றத்தில் வெள்ளை, கருப்பென நிறமி வேறுபாடுதான்
உண்டே தவிர, ஆத்மாவுக்குள் வெள்ளை கருப்பென்று எதுவுமில்லை. ஆத்மாவில் அடைபட்டுள்ள
இருவினைகளில் (நல்வினை, தீவினை) கூடுதல் குறைச்சலே “கர்மா சுத்தத்தை”க் காட்டும்.
எனக்குள் இருக்கும் ஆத்மாவை, என் கர்மவினைகளால்
(நல்வினை, தீவினை) தான் கழுவ முடியும். புனித நீர் தெளிப்பதாலும், புரியாத மந்திரங்களை
துப்புவதாலும், பூர்வஜென்ம வினைகள் தீர்ந்து விடாது.
இப்பிறவியில் அனுபவிக்கும் நல்லக் கர்மாவோ,
தீயக் கர்மாவோ, ஏதோவொரு பிறவியின் வெளிப்பாடுகள் தான். இப்பிறவியில் உயர்ந்த நிலையை
அடையும் ஆத்மா, பல்வேறு பிறவிகளில் உயர்வான (முக்தி) நிலையை அடைய, மிகப் பெரும் போராட்டமே
நடத்தியிருக்கும்.
இந்த “சனாதன மதம்” இரு பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கர்மாக் காண்டம். மற்றொன்று ஞானக்காண்டம். கர்மம் என்பது
வினை செய்வது. ஞானம் என்பது துறவு மேற்கொள்வது.
கர்மம் என்பது உலக இன்பத்திற்கும், இகவாழ்விற்கும்
இட்டுச் செல்வது. ஞானம் என்பது துறவு நெறியில் நேரடியாக அகவாழ்விற்கு இட்டுச் செல்வதும்
ஆகும். பிறருக்கு தீங்கு செய்ய ஞானவாழ்வு வாழ்பவர் அஞ்சுவார். காரணம், பிறர்க்கு தீங்கு
செய்ததற்கான விலையை, இப்பிறவியிலோ, அடுத்தப் பிறவியிலோ தீர்க்கவேண்டும் என அவர்க்கு
தெரியும். பிறர்க்கு இக, அகவாழ்விலோ தான் நலம்பெற
வேண்டும் என்றால், பிறர்க்கு தீங்கு செய்யும் வினைகள் செய்யாமல் இருப்பதே நன்று. தனக்கும்
பிறர்க்கும் நன்மை பயக்கும் வினைகளை செய்ய வேண்டும். நல்ல கர்மவினை ஒருவனை முக்திக்கு
அழைத்துச் செல்லும். தீயகர்மவினை ஒருவனை ஆத்மா அழிவிற்கு இட்டுச் செல்லும்.
சென்ற பிறவியில் தேடித்தேடிச் சேர்த்த
தீயக்கருமங்கள் இப்பிறவியில் பிறப்பெடுத்த நமக்குத் தெரியாது.ஆறலால், அவைகளை விட்டுவிடலாம்.
ஆனால், இப்பிறவியில் எந்ய்யும் கர்மங்கள் அல்லது வினைகள் யாவும், நாம் அறிந்ததுதானே.
அதனால், தீயக்கருமங்களை, தீயக் கருனங்களினால்
உண்டாகும் ஆசைகளை அறிந்து தடுத்தோமேயானால், நல்லவினைகள் கூடும். மனம் வயப்படும். பரப்பிரம்மத்தோடு
ஜீவன் இணையத் துடிக்கும்.
இப்பிறவியில் ஆன்மீகக் கர்மாக்களை ஜீவனுக்குள்
கோர்த்து பரமாத்மாவோடு இணையத் துடிக்கும், ஓர் ஆதீனத் துறவியின் பிறப்பு ஜாதகத்தை ஆராய்வோம்.
|
இராகு
|
|
|
|
|
இராசி
|
இல
|
||
சந்திரன்
செவ்வாய்
|
சனி
|
|||
சூரி-புதன்
குரு
|
சுக்கிரன்
|
கேது-
மாந்தி
|
|
|
விதி; 1
இலக்கினத்துக்கு பனிரெண்டாம் வீடு புதனுடைய
வீடாகி, அந்த வீட்டைப் புதன் காணபுண்ணியங்கள் நிரம்பச் செய்தவனாவன்.
விளக்கம்;
இவருடைய ஜாதகத்தில் கடகம் இலக்கினமாகி,
புதன் வீடு பனிரெண்டாம் வீடாகிறது. இந்த வீட்டை தனுசுவில் இருக்கும் புதன் காண்கிறார்.
விதி; 2
சூரியன் நல்லக்கோள்களுடன் கூடி உச்சமானாலோ,
அல்லது கூடினாலோ, பார்த்தாலோ இளம் வயதில் துறவறம் பூண்டு, ஞானவாழ்வில் அடியெடுத்து
வைப்பார்.
விளக்கம்;
ஆத்மக்காரகன் சூரியன், ஜீவக்காரகன் குருவுடனும்,
புத்திக்காரகன் புதனுடனும் கூடி அமர்ந்துள்ளார்கள். இவர் ஏழு வயதிலே துறவு மேற்கொண்டார்.
விதி; 3
சந்திரன், சனி நின்ற ராசிகளை, இலக்கினாதிபதி
காண தீட்ஷிதனாக விளங்குவான். மேலும், செவ்வாய் நிற்கும் இராசி, சனியின் திரேகாண ராசியாக
இருந்து, அந்த ராசியை சந்திரனும், சனியும் காண, அச்சாதகர் துறவியாக இருப்பார்.
விளக்கம்;
கர்மக்காரகன் சனி வீட்டான மகரத்தில் செவ்வாய்
அமர, மனோக்காரகன் சந்திரன் கூடியுள்ளார். வக்கிரம் பெற்ற சனி தன் பலனை கடக வீட்டிலிருப்பது
போல பாவித்து தன் பலனை செய்வதால், சிம்மத்தில் வக்கிரம்பெற்ற சனி கடகத்தில் நிற்பதாகவே
அர்த்தமாகிறது. அதனால் கடக லக்கினாதிபதியான சந்திரன் மகரவீட்டில் நின்று, கடகத்தைப்
பார்ப்பதால், வக்கிர சனியையும் காண்பதாகவே ஆகிறது.
விதி; 4
குரு, சனி, செவ்வாய் கூடி நிற்க அல்லது
பார்த்திருக்க துறவியாக வாழ்வார்.
விளக்கம்;
சனி வீட்டில் செவ்வாய் நின்று, சனியை காண்கிறார்.
தன் ஒன்பதாம் பார்வையாக குரு, சனியை காண்கிறார்.
விதி; 5
பத்தாம் வீட்டினில் ஒரு கோள் நிற்க, விண்ணுலகத்
தேவர்கள் வியந்து போற்றும் அளவுக்கு துறவற வாழ்வில் சிறந்து இருப்பார்.
விளக்கம்;
கால புருஷனின் பத்தாம் வீட்டினில் சந்திரன்,
சுக்கிரன் அமர்ந்துள்ளனர். பிறப்பு ஜாதகத்தில் பத்தில் இராகு அமர்ந்து, கேது சாரம்
பெற்றுள்ளார்.
சந்திரராசிக்கு பத்தாம் வீட்டினில் ஞானவான்
கேதுவே அமர்ந்து, அன்றாடம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துபவராக உள்ளார்.
விதி; 6
இலக்கினத்திற்கு பத்தாமதிபன் நல்லக்கோளுடன்
கூடினாலும், அல்லது பத்தாமதிபனுக்கு இரண்டுபுறமும் நல்லக்கோள் இருந்தாலும், நித்தம்
சிவபூசை செய்பவராக இருப்பார்
விளக்கம்;
இலக்கினத்திற்கு பத்தாமதிபதியான செவ்வாயுடன்
கூடியுள்ளார். இன்னும் அதிபட்சமாக செவ்வாய்க்கு இருபுறமும் நல்லக்கோள்களே அமர்ந்துள்ளனர்.
விதி; 7
செவ்வாய், சனி, குரு, புதன், சூரியன் இந்த
ஐவரும் கூடியிருக்க, அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள, தேடுதற்கரிய
சன்மார்க்கம் வழியை அறிந்தவனாகி, ஞானச் சிந்தனையுள்ள சிவயோகியாக இருப்பார்.
விளக்கம்.
சூரியன், குரு, புதன் கூட, சனியை குரு
காண, சனி வீட்டினில் செவ்வாய் அமர, இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில் தான் உள்ளனர்.
விதி; 8
பத்தாம் வீட்டோன் நல்லவருடன் கூட, செல்வங்களாலும்,
பிரம்மவித்தையாலும் மேனானப் பலன்களே நடக்கும்.
விளக்கம்;
பத்தாமதிபன் செவ்வாய் சந்திரனுடன் கூடியுள்ளார்.
விதி; 9
ஒன்பதாம் அதிபதி ஆட்சி, உச்ச கேந்திரம்
பெற ஞானமார்க்கம் சித்திக்கும். அந்த ஒன்பதாம் அதிபதி யாரோ அவராலே உபதேசம் பெறுவார்.
விளக்கம்;
ஒன்பதாமதிபனான குரு ஆட்சி பெறுகிறார்.
இவர்க்கு இவரின் மேன்மைமிகு “குரு மகா சன்னிதானம்” அவர்களே தூறவறம் மேற்கொள்ள மேன்மை
தந்து ஆசி தந்தருளினார்.
விதி; 10
சூரியன், சந்திரன், செவ்வாய், மற்றும்
குரு ஆகிய கிரகங்கள் பத்தாம் வீட்டில் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டோடு தொடர்பு
கொண்டிருந்தாலும், இந்த சாதகர் எந்நாளும் அழிவில்லா துறவற வாழ்வில் சிறந்திருப்பார்.
விளக்கம்;
பத்தாமதிபதி செவ்வாயுடன் சந்திரன் கூடியுள்ளார்.
மேலும், சந்திரன், செவ்வாய்க்கு சூரியன் சாரம் வழங்கி, குருவின் வீட்டினில் அமர்ந்துள்ளார்.
இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில் தான் உள்ளனர்.
விதி; 11
பத்தினில் கேது இருப்பதும், பத்தாமிடத்தைப்
பார்ப்பதும், அறநிலையத்துறை அதிகாரியாகவோ, அறங்காவல் குழுத் தலைவராகவோ, ஒரு மடதின்
அதிபதியாகவோ இருப்பார்.
விளக்கம்;
இராசிக்கு பத்தாம் வீட்டினில் கேது உள்ளார்.
மேலும், இலக்கினத்திற்கு பத்தினில் இருக்கும் இராகுவிற்கு கேது சாரம் வழங்குகிறார்.
இவரும் ஒரு ஆதீன மடத்தின் அதிபதியாக உள்ளார்.
விதி; 12
இலக்கினத்திற்கு நான்காம் வீட்டினில் கேதுவுடன்,
மாந்தியும் கூடியிருக்க, குடியிருக்க வீடுவாசலும் இல்லாதவராக இருப்பார்.
விளக்கம்;
இலக்கினம் கடகம். நான்காம் வீடு துலாம்.
இதில் கேது, மாந்தி. இன்றுவரை இவர் பெயரில் அசையா சொத்துக்கள் என்று எதுவுமில்லை. ஒரு
அன்பரின் கல்விநிலையத்தில் தங்கியுள்ளார்.
விதி; 13
சூரியனுக்குப் பின்னே அசுரகுரு சுக்கிரனும்,
தேவகுரு வியாழனும் அமர்ந்திருக்க, “பாலை யோகம்” என்று பெயர். அதன் பலன் என்னவென்றால்,
வெகுவான கவிகளை படிக்க வல்லவன். பலநூற்களை கற்றுத் தேர்ந்தவன். சொற்பொழிவில் பெரும்
வித்தகன். நெடுநாள் பூமியில் வாழ்பவன்.
விளக்கம். இவரின் ஜாதகத்தில் சூரியனுக்குப்பின்னே
பாகை அடிப்படையில் குருவும், இராசியின் அடிப்படையில் சுக்கிரனும் பின்னுக்கு உள்ளனர்.
இவர் பல முன்னவர் பட்டங்களைப் பெற்றவர். கணக்கற்ற நூற்களைக் கற்றவர். எண்ணற்ற பட்டப்படிப்பும்
படித்தவர். ஆன்மீக சொற்பொழிவாளர். அபாரத் திறமையுடையவர்.
இந்த ஆதீனக் கர்த்தாவின் ஜாதகத்தில், இன்னும்
பல விதிகள், என் ஊனக்கண்களுக்கும் தெரியாமல் விரவிக் கிடக்கலாம். நீங்களும் இவரின்
ஜாதகத்தினை ஆய்வு செய்யுங்கள். நன்றி.
ஜோதிடக்கவிஞர் முத்துப்பிள்ளை 91501
06069,87548 73378, 89405 29429, 0451. 2556525
கட்டுரை
ஆக்கம். 05. 11. 2009