இன்றைய
காலச்சூழலில் பிறந்த குழந்தையை அதிக கண்காணிப்புடன் வளர்க்கப்படுகிறது. குழந்தை பால்
குடிப்பதில் இருந்து, கைகால்களை அசைப்பதில் இருந்தும், மூன்று மாதத்தில் குப்புற புரள்வதையும்,
ஐந்து மாதத்தில் தவழ்வதையும், எட்டு மாதத்தில் எட்டு எடுத்து நடப்பது வரைக்கும் கண்காணிக்கப்படுகிறது.
இதில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால், அதற்கான ஆலோசனைகள் பெறுவதில் முயற்சி செய்கின்றோம்.
தங்களுடைய குழந்தை வளர்ப்பில் அதீத கவனம் செலுத்தும் நாம், பல்லாயிரக்கணக்கான வருடங்கள்
தவயோகிகளும், சித்தர்களும் மேன்மைபடுத்தி வந்த ஜோதிடத்தை, இன்னும் செம்மைப்படுத்தி
நம் சந்ததிகளுக்கு தர மறுக்கிறோமே ஏன்? இதில் சிலர் புது முயற்சிகளை முன்னெடுத்து செல்லத்
துணிந்தால், “அதெல்லாம் முடியாது, இதெல்லாம் முடியாது, நீ மக்களை ஏமாற்றுகிறாய். உனக்கு
கண்டனம் தெரிவிக்கிறேன்” என்றால், “ நீயும் திங்க மாட்டீங்கற, அடுத்தவனையும் திங்க
விடமாட்டீங்கற, சுய அறிவில்லாம அடுத்தவன் எழுதினத உன்பேர்ல போட்டுக்கிற, சுயமா சிந்திக்கிறவனையும்
திட்டுற, சீக்கிரமா செத்துப் போவன்னு சாபம் வேற விடுற, ” ஆம்.. முகநூல் உறவுகளே! புதுப்புது
வழிமுறைகள் ஏராளம் உள்ளன. பல்வேறு வழிகளில் ஏதோவொன்றை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள நுட்பங்களை
வெளிக்கொணர முயல்வோம்.
சுமார்
2007 ம் வருடம். நண்பர் ஜோதிவேலின் மூலமாக நண்பர் திரு ஜெயவேல் அறிமுகமானார். அவர்
நூறுகட்டுரைகளுக்கு மேலாக, வார, மாத ஜோதிட இதழ்களில் எழுதி வந்துள்ளார். எனக்கு பல
ஜோதிட நூல்களை அறிமுகம் செய்தவர். என் எழுத்துக்களை அதிகம் படித்தவர். ஜோதிடப் பேச்சுக்களை
அருகில் இருந்து கேட்டவர். இவர் மூலமாக முருகன் என்கிற நண்பர் அறிமுகமானார். அவரும்
துருவ கணிதமில்லாமல் தாய், தந்தை, சகோதர வர்க்கம் சொல்ல முயற்சி செய்து, வெற்றியும்
கண்டவர். அவராலும் 70%, 75% சதவீதம் சொல்லமுடியும். நண்பர் திரு ஜெயவேல் அவர்கள் எங்கள்
மூவரையும் இதழ்களில் கட்டுரைகள் எழுதத் தூண்டுவார். ஆனால், நாங்கள் மறுப்போம். பிடிவாதமாக
நான் உள்பட ஜோதிவேல், முருகன் ஆகியோரிடம் “ நானே எழுதுகிறேன். நீங்கள் எழுதினால் என்ன?”
என்பார். அவரின் தொல்லை தாங்காமல் 2010ல் எழுதத் துவங்கினேன். அந்த எழுத்துப் பயணம்
இன்று வரை தொடர்கிறது. நன்றி ஜெயவேல். நன்றி … முகநூல் உறவுகளே!!!
தொடர்புக்கு….
9751822129 8754873378