என்னுடைய ஜோதிடம்
கற்கும் ஆவல் 1989ல் துவங்கியது. நானும் நண்பர் திரு ஜோதிவேல் அவர்களும் யாருடைய உதவியும்
இன்றி கற்கத் துவங்கினோம். ஜோதிடக் கணிதப்பாடத்தில் A to Z வரையுள்ள அத்தனைக் கணித
வழிகளும் அத்துப்படியானது. 1990 முதல் 1995 வரை என் வாழ்வில் நிகழப்போகும், அத்தனை
நிகழ்வுகளும் கணக்கிட்டு வைத்துக் கொண்டேன். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜோதிடம்
பார்க்கத் துவங்கினேன். ஓரளவுக்கு மக்கள் வரத்துவங்கினர். இவையெல்லாம் குறுகிய காலம்தான்
எனக்கு 09. 06. 1995 ம் வருடம் திருமணம் நடந்தது. வந்தவளின் கட்டளையே ஜோதிடம் பார்க்கக்
கூடாது என்பதுதான். காரணம், மதம் என்கிற மிகப்பெரிய கட்டுமானத்தில் தயாரிக்கப்பட்டவள்.
சுற்றி இருப்பவர்களின் தூண்டுதலும் எதிரொலித்தது. எங்கள் மதத்தின் மிகப்பெரிய எதிரியாக
“ ஜோதிடம் ” சித்தரிக்கப்படிருந்தது. ஆம். கிறித்துவமதத்தின் போதனைகளே, விலக்கப்பட்ட
கலையாக “ ஜோதிடம் “ உள்ளது. என்னை பலமுறை திருச்சபையில் இருந்தும் எச்சரிக்கப்பட்டேன்.
மதக்குருமார்களும் கண்டித்தனர். என் சமூகம் பார்க்கும் பார்வையே கொடூரமானது. என் உறவுகள்
ஏளனமாகவே பார்த்தனர். என்னோடு மல்லுக்கு நிற்கமுடியாதவர்கள், என் மனைவியின் வழியில்
பழிவாங்கினர். நான் தனித்தவனாக, மனைவியின் “மணவிலக்கு” என்கிற நிலைவரை யுத்தம் நிகழ்ந்தது. ஜோதிடம் மறக்கக் கூடிய கலையாக தெரியவில்லை. ஊனில்
இருந்தும் நினைவுகள் வரைக்கும், ஜோதிடம் தான் இருப்பதை உணர்ந்தேன். என் மனைவி ஜோதிடம்
பார்க்க வரும் வெளியூர், மற்றும் உள்ளூர் மக்களை தடை செய்யத் துவங்கினாள். நாளடைவில்
ஜாதகம் பார்க்க யாரையும் வரவிடாமல் வைத்திருந்தாள். ஆனாலும், ஜாதகம் எழுதிக் கொடுத்து
வந்தேன். அதன்மூலம் கிடைக்கும் பணத்தினை, ஜோதிடப் புத்தகங்கள், பஞ்சாங்கங்கள் வாங்கப்
பயன்படுத்துவேன். மீண்டும் பிரச்சனை, குழந்தைப்பாக்கியம் தள்ளிப்போனது. அதற்கும் ஜாதகம்
எழுதுவதன் மூலம் கிடைக்கும் சொற்பப்பணமே காரணம் என்கிற ஜோதிடம் தொடர்பான பிற்போக்கான
உறவுகள், மதவாதிகளின் சிந்தனைத் தூண்டலே காரணமானது. அதன்பின் நிரந்தரமாக ஜோதிடப் புத்தகங்களைக்
கட்டி பரணியில் போட்டேன். என் அறிவின் தேடல்கள் அத்தனையும் 31.12. 2000 அன்று பரணியில்
தூங்கியது. என் சிந்தனைகள் அழுதது. என் மதவாதிகளும், உறவுகளும் என்னை முழுதாய் வெட்டி
சாய்த்ததாக நினைத்தது. நெஞ்சக் கனத்தலுடன் உங்கள்…….
தொடர்புக்கு. 9751822129 8754873378
No comments:
Post a Comment