Thursday 28 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...7






திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் பெரியகுளம் பிரதானசாலையில், கொடைக்கானல் போகும் சாலைபிரியும் இடத்தில் பரசுராமபுரம் எனும் சிற்றூர் உள்ளது. அதனருகில் கிளைச்சாலையான மண்பாதை பிரியும். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால், பாலப்பட்டி ஊர்சாவடி வரும் அதனருகில் ஓலைக்குடிசையில் ஜோதிடம் பார்ப்பவர்தான் பாலப்பட்டி ச்சீனிவாசகன் என்பவர். அவரருகில் மூன்று மாதகாலம் பயிற்சி எடுத்தேன். பயிற்சி எடுத்த ஆண்டு, 1999 ஆகும். நான் முதலில் எல்லோரையும் போல்தான், ஜாதகம் பார்ப்பதாக நினைத்தேன். காரணம், வந்தவர்கள் அனைவரும், ஏழரை சனியுள்ளவர்களாகவோ, அட்டம, கண்டச்சனி பீடிக்கப்பட்ட்டவர்களாகவோ இருந்தனர். அதனால் பலன்களும் பேசியதே திரும்பத் திரும்ப சொல்வதாக எண்ணினேன். முதன்முறையாக பிறந்து ஜாதகம் எழுதாத குழந்தையின் குறிப்பைப் போட்டு தந்தேன். அதற்கு அவர் ஜாதகப்பலன் சொன்னது தான், என் வாழ்க்கைப் பயணத்தை திருப்பியது. அக்குழந்தையின் ஜாதகத்தை வைத்து சகோதரவர்க்கத்தைச் சொன்னார். அதன்பின் வரிசையாக தாய், தந்தை உடன்பிறப்புகளையும், சரளமாகச் சொன்னார். உண்மையில் வியந்து போனேன். வெறும் கட்டம், பாதசாரம் மட்டும் வைத்துக்கொண்டு, துருவகணிதம் எனும் பரணிஸ்புடம் இல்லாமல் எப்படி இவரால் சொல்லமுடிகிறது. என் பார்வையில் துருவகணிதம் இல்லாமல் சகோதரவர்க்கம் சொன்ன மூன்றாவது குரு இவராவார். திரு. பாலப்பட்டி சீனிவாசகன் அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை. வெகுவிரைவில் எடுத்து விடுவேன். அதை உடனே வெளியிடுவேன்.  

ஜோதிட சாத்திரம் என்பது அனுமான சாத்திரமாகும். இதில் நூறு சதவீதம் உண்மையை சொல்லிவிட முடியாது. இங்கே ஜோதிட அறிஞர்கள் பலபேருக்கு இந்த கருத்தில் உடன்படுவீர்கள் என்று தெரியும். அதிகபட்சமான உண்மையை சொல்லக்கூட, முயற்சி செய்யாதவர்களை என்னசெய்யலாம். உங்களால் முடியவில்லை என்பதால், வேறு யாராலும் முடியாது என்றால், பிரச்சனை ஜோதிட நுட்பங்களில் இல்லை. உங்களிடம் தான் உள்ளது. கருத்துக்களில் முட்டி தேய்ந்தவனும், முடங்கிக் கிடப்பவனும் விலகிக் கொள்ளுங்கள். முடியாது என்பதைச் சொல்ல ஜோதிட அறிஞன் என்கிறப் பெயரில் நீ எதற்கு?  நன்றி…முகநூல் உறவுகளே!!!    

 தொடர்புக்கு…. 9751822129  8754873378

No comments:

Post a Comment