Thursday 28 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...6





எனது குடும்பவாழ்வில் மிக நெருக்கடியான தருணம் 2003 ல் துவங்கியது. பணத்தேவைகள் அதிகரித்தது. திணறிப் போனேன். பரணில் கட்டிப் போட்டிருந்த ஜோதிட நூல்களை மீண்டும் தூசி தட்டி எடுத்தேன். மீண்டும் ஜோதிடப் பயணம் துவங்கியது. நாள்கணக்கில் ஜாதகங்கள் எழுதிக் குவித்தேன். பணத்தேவைகள் குறைந்து, சமநிலை எட்டியது.  குடும்பப்பிரச்சனைகளோடே ஜாதகமும் பார்க்கத் துவங்கினேன். அப்போதே அய்யம்பாளையம் பெரியசாமி, வேலக்கவுண்டன்பட்டி சண்முகம் ஜோதிடர், வீரக்கல் சுப்பிரமணியன், ஆகியோர்களுடன் நெருங்கியப் பழக்கம் ஏற்பட்டது. இவர்களில் ஒவ்வொருவரும் திறமைசாலிகள். அந்தகாலக்கட்டத்தில் தான்  வத்தலக்குண்டு அருகே உள்ள பாலப்பட்டி சீனிவாசகன் என்கிற ஜோதிடரோடு மூன்றுமாதங்கள் உடனிருக்கும் பாக்கியம் கிட்டியது. நான் முன்பே கூறியபடி, சிவன் கோவில் பெரியவரும், சேர்வைக்காரன் பட்டி சதாசிவம்பிள்ளை அவர்களும், ஜோதிட உலகில் புரையோடிக் கிடக்கும் துருவக்கணிதம் இல்லாமல், உடன்பிறப்புகளைச் சொன்னதுபோல், பாலப்பட்டி சீனிவாசகனும் துருவக்கணிதம் இல்லாமல், உடன்பிறப்பு, தாய்,தந்தையோடு பிறந்தவர்கள், மனைவியோடு பிறந்தவர்கள் அத்தனைக் குறிப்புகளையும் சொல்ல வல்லவராக இருந்தார்.  

என் வாழ்நாளில் குருநாதர் இடத்தில் பாலப்பட்டி சீனிவாசகனை மட்டுமே வைத்திருக்கிறேன். அவரிடம் துருவகணிதம் இல்லாமல் உடன்பிறப்புகளை சொல்லும் நுட்பத்தை அறிய சில “ டிப்ஸ்” வழங்கினார். அந்த வழிகளை வைத்துக் கொண்டு மீதமுள்ள உறவுகளுக்கு நானறிந்தேன். இப்போது நான் சொல்லிவரும் பலன்களில் இந்த துருவக்கணிதம் இல்லாமல் உடன்பிறப்புகளை சொல்லும் வித்தைகளைப் பயன்படுத்தி வருகிறேன். இது சுமார் 70% , 75% சதவீதம் உண்மை இருக்கிறது. ஜாதகத்தில் உள்ள சங்கேத வார்த்தைக் குறிப்புகளை வைத்து, ஈனத்தனமாக ஜாதகம் பார்ப்பதைவிட, இந்த வழி எவ்வளவோ மேன்மையானது. நன்றி … முகநூல் உறவுகளே! 

தொடர்புக்கு…. 9751822129  8754873378

No comments:

Post a Comment