Thursday 28 May 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...5





நான் நாத்திகவாதம் பேசி கதிகலங்கவைத்த நேரம். எங்களுடைய டீக்கடைக்கு CSI Charch Boster கள் வந்து போவார்கள். அவர்களுடன் இரவெல்லாம் நாத்திகத்திற்கும், ஆத்திகத்திற்குமான பேச்சரங்கம் நடக்கும். நானும் Bible இருந்து பல கேள்விகளை கேட்டுத் திணறடித்துவிடுவேன். அவர்களும் சளைக்கமாட்டார்கள். கலைந்து செல்லும் போது நட்புடன் பிரிவோம். அவர்கள் கூறுவார்கள், “ இன்னும் சில ஆண்டுகளில் உன்னை கடவுளை நம்ப வைக்கிஓறோம் பார் “ என்று சவால் விடுவார்கள். நான் மீண்டும் “ என் கருத்துக்களைக் கேட்டு, நீங்கள் நாத்திகவாதிகளாக மாறிவிடுவீர்கள் “ என்பேன். இவை நடந்தது  1985 ம் வருடமாகும்.


அதே ஆண்டு, திண்டுக்கல் அரண்மனைக் குளத்தின் அருகில் உள்ள, “சிவன் கோவில்” என்று அழைக்கப்படும் கோவிலில் ஒரு சாமியார் இருந்தார். என் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்  அவரிடம்  ஜாதகம் பார்க்கச் சென்றார். உடன் நானும் சென்றேன். சின்ன அட்டையில் ஜாதகக் கட்டம் போட்டு உடனே பலன் சொன்னார். ஜாதகரின் உடன் பிறப்புகளையும், தந்தை, தாயோடு பிறந்தவர்களையும், மனைவியோடு பிறந்தவர்களைப் பற்றியும், மனைவியின் வீடுவாசல் போன்றவற்றையும் சொல்லத்துவங்கினார். என் நாத்திக மூளைக்கு ஒன்றுமே புரியவில்லை. இது எப்படிச் சாத்தியம். பிரமாண்டமான பிரபஞ்சத்தை, அண்டவெளியை, சின்ன அட்டைக்குள் கட்டம் போட்டு, இங்கே குருவுள்ளார். இங்கே சனியுள்ளார் அங்கே அவர் உள்ளார், இங்கே இவர் உள்ளார் என கூறி, என் நண்பர்களின் உறவுகள் இத்தனைபேர் என்று எப்படிச் சொல்லமுடியும். நாத்திகம் பேசுவது முக்கியமல்ல. பேசுகிற வார்த்தைகளில் உண்மை இருக்கவேண்டும் என நினைத்தேன். அதற்கான பணிகளில் இறங்கினேன்.

முதன்முதலில் அங்கே தான் என் ஜாதகத்தை சிவன் கோவில் பெரியவரிடம் எழுதி வாங்கினேன். பின் விரிவாக வேண்டும் என்பதற்காக, வேடசந்தூர். ஆனந்தம்பிள்ளை அவர்களிடன் எழுதி வாங்கினேன். அவர் என் குணாதிசயங்களையும், வாழ்க்கை முறைகளையும் புட்டுப்புட்டு வைத்திருந்தார். எனக்கு இன்னும் நம்பிக்கையானது. அதன்பின் கரூர் அருகே உள்ள பாளையம் நகருக்கு அருகில் உள்ள சேர்வைக்காரன் பட்டி சதாசிவம் பிள்ளை அவர்களிடம் ஜாதகம் எழுதிவாங்கினேன். அவர் பல நுட்பவிடயங்களை எழுதி இருந்தார். அவையெல்லாம் அப்படியே நடக்கத்துவங்கியது. என்னோடு ஒட்டியிருந்த நாத்திக வாடை கொஞ்சம் கொஞ்சமாக விலகத்துவங்கியது. கிறித்துவனாகப் பிறந்து, நாத்திகனாக மாறி, ஜோதிடனாக அவதானித்துக் கொண்ட வருடம். 1989 ஆகும். என் நண்பர் திரு ஜோதிவேலும், நானும் ஜோதிடம் கற்கத்துவங்கினோம். நன்றி …. முகநூல் உறவுகளே!!!  

தொடர்புக்கு…. 9751822129  8754873378

No comments:

Post a Comment