2010
மே மாதம் என் முதல் கட்டுரை ஏழில் சனியிருக்கும் ஜாதகங்களைப் பற்றிய விரிவான கட்டுரையை
“குருவருள் ஜோதிடம்” என்கிற மாத இதழுக்கு அனுப்பினேன். அக்கட்டுரையைப் படித்த ஆசிரியரும், வெளியிடுபவருமான
பெரு மதிப்புக்குரிய திரு. சித்தரடிமை ஸ்ரீசி. இராஜீ அவர்களிடமிருந்து போன் வந்தது.
அந்த கட்டுரையைப் பற்றி சிலாகித்துப் பேசினார். வரும் ஜீன் மாதமே வெளியிடுவதாக கூறினார்.
அப்போதெல்லாம் ஏனோதானோவென்றுதான் எழுதிக் கொண்டதற்கே, எனது ஆசிரியர் பாராட்டுகிறாரே
என்று அதன் பிறகு ஒவ்வொரு கட்டுரையும் மிகக் கவனமாக மாற்றி மாற்றி எழுதி அனுப்பினேன்.
குருவருள் ஜோதிடம், திருவருள் ஜோதிடம் என்கிற இரண்டு இதழ்களிலும், “ முத்துப்பிள்ளை
“ என்கிறப் பெயரிலே எழுதிவந்தேன். ஒரு நிரந்தரக் கட்டுரையாளன் என்கிற முத்திரைக் குத்தப்பட்டது.
அங்கே,” ஒளியும், இருளும்,” “ மந்திரமும் … கோலமும்….”,” மனிதனின் மரணநாள் மர்மங்கள்”
வருடம் முழுதும் வரும் தொடர்கட்டுரைகள் எழுதிவந்தேன். அதன்பின் “ திரிசக்தி ”, “ சித்தர்ஞான
ஜோதிடம் “ ஆகிய வார, மாத இதழ்களிலும் எழுதி வந்தேன்.
இவைகளை
எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், “எப்படி எழுத வேண்டும் என்கிற நுட்பத்தை எங்களைப்
போன்றவர்களுக்கு சொல்லி வழிகாட்டியவர்கள்”. ஒரு விடயத்தை எப்படிச் சொல்லவேண்டும் என்கிற
வித்தையை, நான் சரியாகப் பயன்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன் என்றால், அதற்கு இவர்கள்
தான் காரணம். ஒரு கட்டுரையை எப்படித் துவங்கி எப்படி முடிக்கவேண்டும் என்கிற சூட்சுமத்தை
சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, எழுத்துலகில் நீடிக்கமுடியும். உங்கள் எழுத்தை
நீங்களே காதலிக்கவேண்டும். வெள்ளைத்தாளையோ, கணினியின் வெண்திரையோ உங்கள் காதலியாகப்
பாவித்துக் கொள்ளுங்கள். உங்களின் காதலியின் மேல் எப்படி எழுத வேண்டும் என்பதனை நீங்கள்
தான் தீர்மானிக்கவேண்டும். உங்கள் காதலியும் உங்கள் எழுத்தில் இலயிக்கவேண்டுமல்லவா?
இன்று
நானொரு இடத்தில் “ஆசிரியனாக” இருக்கிறேன் என்றால், அதற்கு என் மதிப்புக்குரிய திரு.
சித்தரடிமை ஸ்ரீசி. இராஜீ அவர்களே காரணம். நன்றி ஐயா. என்னை வாழ்த்துங்கள் ஐயா. என்
எழுத்துலக வளர்ச்சி உங்களிடமிருந்தே …. நன்றி
முகநூல் உறவுகளே!!!
தொடர்புக்கு….
9751822129 8754873378
No comments:
Post a Comment