Tuesday 4 November 2014

யோகங்கள். 1



1அனபா யோகம்.
உங்களின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டுக்கு, பனிரெண்டாம் வீட்டில் புதன், சுக்கிரன், சனி, குரு, செவ்வாய் ஆகிய பஞ்சமகாபுருஷக் கிரகங்களில் ஒன்று நின்றால் இந்த யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் மட்டும் இருந்து விட்டால், காலமுழுக்க சாப்பாட்டுக்குப் பஞ்சம் இருக்காது. கெளரவம் பெருகும். மதிப்பான வாழ்வும் வாழலாம். இதில் ஒரு நுட்பம் என்னவென்றால், சந்திரனுக்குப் பனிரெண்டில் குரு நின்றால், அது சகடை தோஷமாகிவிடும். பஞ்சமகா புருஷக் கிரகங்களில் குருவோடு, ஏதேனும் ஒரு கிரகம் கூட, சகடை தோஷம் பங்கமாகி, அனபா யோகமாகிவிடும்.

2. கிரகமாலிகா யோகம்.
இலக்கினத்துக்கு ஐந்தாம் வீட்டிலிருந்து இடைவிடாமல் கிரகங்கள் நின்றால், “புத்திர மாலிகாயோகம் என்று பெயர். இதன் பலன் என்னவென்றால், தவமிருந்தாலும் இதுபோன்ற பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாது. ஞானம் மிகுந்தவன். தெய்வ பலம் மிக்கவன். பேராலயங்களையும் புனரமைக்கும் புண்ணிய பணியைச் செய்பவன். மந்திர உபதேசம் பெறுபவன். மக்கள் பயன்படும்படியான கால்வாய், குளங்களை வெட்டுபவன். உலகம் புகழத்தக்க வாழ்வு வாழ்பவன்.

3. கிரகமாலிகா யோகம்.
இலக்கினத்துக்கு இரண்டாம் வீட்டிலிருந்து இராகு, கேது தவிர்த்து, மற்றக் கிரகங்கள் வரிசையாய் இடைவெளி இல்லாமல் நின்றால், அதற்கு, “தன மாலிகா யோகம்என்று பெயர். இதன் பலன் என்னவென்றால், குடும்பம் சிறப்புடன் இருக்கும். செல்வம், பணம் முதலியன தன்னிறைவுடன் இருக்கும். இனிமையான பேச்சைக் கொண்டவனாக இருப்பான்.

4. கிரகமாலிகா யோகம்.
இலக்கினத்திலிருந்து கிரகங்கள் இடைவிடாமல், ஏழு வீடுகளில் இருந்தால், அதற்கு, இலக்கின மாலிகா யோகம் என்று பெயர். இலக்கினத்திலிருந்து சுபக்கிரகம் இருந்து கிரகமாலிகா யோகம் துவங்கினால், பெரும் இராஜயோகத்தைத் தரும். பலதொழில் செய்பவன். நல்லமுன்னேற்றமான வாழ்வைத் தரும். அனைவரையும் வெற்றி கொள்வான். எதிலும் முதன்மையானவனாய், தலைமைப் பதவி வகிப்பவனாய் ஜாதகன் இருப்பான்.

5. கிரகமாலிகா யோகம்.
மூன்றாம் வீட்டிலிருந்து கிரகங்கள் இடைவிடாமல் அமர்ந்தால் அதற்குவிக்கிரம மாலிகா யோகம்என்று பெயர். இதன் பலன் என்னவென்றால், தைரியமிக்கவன், பலசாலி, காரிய வெற்றியை உடையவன். சகோதரப் பலமுடையவன் இசைஞானமுடையவன். தேகபலமுடையவன். போகபலம் உடையவனாகவும், அதிகாரமிக்கவனாகவும் இருப்பான்.

6. கிரகமாலிகா யோகம்.
நான்காம் வீட்டிலிருந்து கிரகங்கள் இடைவெளியில்லாமல் அமர்ந்தால், அதற்குசுகமாலிகா யோகம்என்று பெயர். இதன் பலன் என்னவெனில், செல்வ, அந்தஸ்து, கெளரவம், வீடு, நிலம், வாகனம், தாயி பேரன்பு கிடைத்தல், Gஅல்நடைச் செல்வங்கள், சுகபோக வாழ்க்கை அனைத்தும் கிட்டும். தர்மம் செய்யும் மனநிலையுடன் அரசனையொத்த வாழ்வு வாழ்வான் என்கிறது பிருஹத்ஜாதகம்.

7. கிரகமாலிகா யோகம்.
 ஆறாம் வீட்டிலிருந்து கிரகங்கள் இடைவிடாமல் அமர்ந்திருக்க, அதற்குசத்ரு மாலிகா யோகம்என்று பெயர். எதிரிகளே இல்லாமல் அழித்தொழிக்கப் படுவர். நினைத்த செயலை முடிக்கும் ஆற்றல் உள்ளவர். நோய்கடன் இவைகளால் பாதிக்கப் படாதவர். இந்த ஆறாம் வீட்டில் மட்டும் பொது பாவக்கிரகங்களான, சனி, செவ்வாய், சூரியன் இருந்து மற்றராசிகளில் வெவ்வேறு கிரகங்கள் இருந்தால், ஜாதகரின் ஆயுள் மட்டும் எதிரிகளும், கடனும், நோயும் இல்லாமல் இருப்பர் 

8. கிரகமாலிகா யோகம்.
ஏழாம் வீட்டிலிருந்து கிரகங்கள் இடைவிடாமல் அமர்ந்திருக்க, அதற்கு, “களத்திரமாலிகா யோகம்என்று பெயர். ஒரு பேரழகியே மனைவியாக வாய்ப்பாள். அவள் வசதி மிக்கவளாகவும், தெய்வபக்தி மிகுந்தவளாகவும் இருப்பாள். நண்பர்கள், கூட்டாளிகள், பங்களிகள் ஆகியோர்கள்நன்மையை மட்டும் தருபவர்களாக இருப்பார்கள். இந்த ஏழாமிடத்தில் வளர்பிறைச் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் ஆகியோர்களில் யாரேனும் ஒருவர் இருக்க, களத்திரமாலிகா யோகம் சிறப்பானப் பலனைத் தரும்

9. குரு சந்திர யோகம்
ஒருவரின் ஜாதகத்தில் குரு சந்திரன் கூடினால் மட்டும், இந்தயோகம் அமைந்து விடாது. குருவும் சமசப்தமத்தில்(அதாவது நேரெதிர்) பார்த்துக்கொண்டாலும் இந்த யோகம் ஏற்படும். குருவும் சந்திரனும்கேந்திரத்தில் இருந்தால், அது கஜகேசரி யோகமே என்று நீங்கள் நினைத்தால், ஒரு சின்ன விளக்கம். இரண்டு கிரகங்களும் 4,10 ல் நின்றால் மட்டுமே கஜகேசரி யோகம் ஏற்படும். முதல் கேந்திரத்தில் கூட, அது குருசந்திர யோகமாகும். ஒன்றையொன்று ஏழில் பார்த்துக்கொள்ள, அது அவயோகமாகி விடுகிற்து. பொதுவாக, குருசந்திரன் கூடிய யோகம், ஜாதகர்க்குப் பிரச்சனையைத் தருகிறது. சப்தமத்தில் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதும் திருமணத் தடையையும், அன்னை ஸ்ரீலட்சுமி தேவி விலகி இருப்பாள் என புலிப்பாணி கூறுகிறது.    

10. அம்ச அவதார யோகம்.
இலக்கினக் கேந்திரங்களில் (1,4,7,10)குருவும் சுக்கிரனும் இருந்தாலோ, அல்லது தங்களுக்குள் ஒன்றுக்கொன்று கேந்திரங்களில் நின்று, இலக்கினம் சரராசியாகி, சனி உச்சம் பெற்று இருந்தால், அம்ச அவதார யோகம் ஏற்படும்

இதன் பலன் ஜாதகர் அவதாரப் புருரடராகவே பிறப்பார்.அரசப்பதவி அல்லது அதற்கு சம்மானப் பதவியைத் தந்து, செல்வம், செல்வாக்கு, கெளரவம், சொல்வாக்கு வேதாந்தம், தத்துவஞானம், ஆலயம் அமைத்தல், தெய்வக்காரியங்கள் செய்தல் போன்ற மேலானப் பலன்களே நடக்கும். ஆனால், ஜாதகர்க்கு ஆயுள் மட்டும் குறைவாக இருக்கும்

முத்துப்பிள்ளை

91501 06069
93456 56268

No comments:

Post a Comment