Tuesday 18 November 2014

திருமணபந்தம் முறிவைக் கொடுத்திடும் ஜாதக அமைப்பு.


புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை
இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை.         குறள்
   
புகழையும் பெருமையையும் விரும்புவனின் குடும்பத்தலைவிக்கு, நற்பெருமையும், நல்லொழுக்கமும் இல்லையெனில், இகழ்ந்து பேசுவோர் முன், காளைபோல் மிடுக்காய் நடக்கும் நடையும், கணவனுக்கு இல்லாமல் போய்விடும்.
இரண்டு இளம் மனதுகளை இணைக்கும் திருமணம், நம் பண்பாட்டின் அடையாளமாகும். திருமணபேச்சு நடைபெறும்போதே, மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள், ஒரே நேரத்தில் பறக்கத் துவங்கிவிடும்.

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து திருமண பந்தத்துக்குள் நுழைபவர்கள், கோடிக்கணக்கான கனவுகளை மனதுக்குள் சூடிமகிழ்வார்கள். இருவரும் தங்கள் மனதோடு, உடலையும் பகிர்ந்துகொள்வதே, இந்த திருமண பந்தத்தின் உச்சகட்டமாகும்.
நான் நானாகவோ, நீ நீயாகவோ இருப்பதல்ல, திருமண உறவு. எனக்குள் நீயும், உனக்குள் 
நானுமாக இருப்பதே திருமண உறவு.

வன்கொடுமைகளையும், சொத்துப்பிரச்சனைகளையும் தீர்க்கத்தான் நீதி மன்றங்கள் உள்ளதாக, எண்பதுகளில் இருந்தநிலைமாறி, மிகவேகமாக 2000 வருடத்துக்குள் குடுமப் நலநீதிமன்றங்கள் திறக்கப்பட்டன.

போன அன்னைக்கி இருந்துட்டு பொதன்கிழம திரும்பி வந்த கதையாகஎன்ற கிராமத்து, “சொலவடை”, இன்றைய திருமண உறவை எள்ளி நகையடுகிறது. சரி, திருமண வாழ்வு பாழாவதற்கு பலகாரணங்கள் இருந்தாலும், ஜோதிடரீதியாகவும் ஆய்வு செய்வோம்.
இலக்கினத்துக்கு ஏழாமிடம் கணவனையோ, அல்லது மனைவியையோ குறிக்கும். இந்த ஏழாமிடத்தில் சனி எனும் இருள்கிரகம் நிற்கும்போது, அந்த முப்பது பாகை கொண்ட ராசிபகுதியே இருள் சூழ்ந்து நிற்கும்.

ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ஏழாமிடத்தில் சனிநின்றால், அவர்களுக்குள் இணங்கி நடக்கவேண்டும் என்கிற மனோபாவமே இருக்காது.
சரி, ஏழாமிடகாரகப் பலன்கள் எவையெவை என்பதைக் காண்போம்.

சட்டமுறையானக் கட்டுப்பாடு, கொடுக்கல், வாங்கல், வழக்கு, இருவர் சண்டை , அபராதம்.விவாகப்பிரிவினை, எதிரிக்கு அபாயம் விளைவித்தல், ஆகியவைகளை, இந்த இடத்திலிருந்து அறியலாம்.

எவருடைய ஜாதகத்திலாவது இலக்கினத்துக்கோ, இராசிக்கோ அல்லது காலபுருசனுக்கு ஏழாமிடமான துலாமிலோ, சனியிருக்கப்பிறந்தவர் திருமண வாழ்வு சிறப்பாக இருக்க 
வாய்ப்பு குறைவுதான்.

மேலும், முழுச்சுபக்கிரகமான குருவின் பார்வை, ஏழிலமர்ந்துள்ள சனிக்குக் கிடைக்கவில்லையென்றால், அந்த ஜாதகரின் திருமண வாழ்வு, சீக்கிரமே நீதிமன்றங்களில் முறையிட்டு முறிக்கப்படுகிறது.


தன்கொடிய பார்வையால் ஏழாமிடத்தை சனி கண்டாலும், அப்போதும் திருமண உறவு, உள்ளூர் கிராமப் பஞ்சாயத்திலோ, காவல் நிலையத்திலோ முறிக்கப்படுகிறது.

இந்த சனிக்கிரகம் ஆண் அலியாவான். ஆண் ஜாதகத்தில் ஏழாமிடமான பெண் ராசியில் அமர, அச் சாதகர்க்கு பெண்தன்மைத் தந்துவிடுவான். இவனே பெண்ஜாதகத்தில் ஏழாமிடமான ஆண்ராசியில் அமர,ஆண் தன்மையைத் தந்து விடுவான்.

மேலும், போக உணர்வை  மூளையிலிருந்து தூண்டும் நரம்புக்காரகனே சனி தான். ஏழில் சனி அமர, போகசிந்தனையும் அற்றுப்போகும்.  

உதாரண ஜாதகம்- 1.

பெண்ணின் ஜாதகம். இலக்கினம் துலாம். இராசி கும்பம். இராசிக்கு ஏழாமிடமான சிம்மத்தில் சனி. ஊதாரித்தனமான கணவனால், குடும்பத்தில் குழப்பம். இந்த ஜாதகர் அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர். தன் ஊதியத்துடன் நிம்மதியையும் தொலைத்தவர், குடும்ப நல நீதி மன்றத்தை அணுகி, திருமணமுறிவு ஆணையைப்பெற்றவர். தன் இரண்டாம் திருமணவாழ்வுக்கு பொருத்தமானவரை தேடி வருகிறார்
                           



கேது                 







சந்திரன்
13.10. 1978. 06.33 காலை. பெண்

               இராசி

      குரு





      சனி



 

இல செ, புதன், சுக்கி

    சூரி, இரா



உதாரண ஜாதகம். 2. 

இது ஆணின் ஜாதகம். இலக்கினம் மீனம். இராசி மேடம். இலக்கினத்துக்கு ஏழில் சனி. திருமணம் முடிந்து, தன் தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர், மீண்டும் கணவனிடம் வரவேயில்லை. அங்கேயே தங்கிவிட்டார்.
இந்த ஜாதகரால், தன் மனைவியை சந்திக்கவே இயலவில்லை. மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். எந்த காரண காரியமின்றி. இவர் மனைவியும், அவர் மனைவியின் குடும்பத்தினரும் குடும்ப நல நீதிமன்றத்தில், அதிகம் வரதட்சனை கேட்பதாக வழக்குத்தொடுத்து, ஜாதகரை நீதிமன்ற தண்டனைக்கு உட்படுத்தினார்கள்.




      இல

சந்தி





     கேது

            30.11.1979. 02.25.காலை. ஆண்

                 இராசி




செவ்
குரு
இராகு

சுக்கிரன்

சூரியன்
      புதன்

      சனி



உதாரணம் ஜாதகம். 3.  

இது ஓர் ஆணின் ஜாதகம்இலக்கினம் மகரம். இராசி துலாம். இலக்கினத்துக்கு ஏழில் சனி. திருமணம் முடிந்து, ஓர் இரவு கூட, இருவரும் உறவுகொண்டதில்லை.
இந்த கருத்தை மையமாக வைத்தே குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. திருமணமுறிவுக்கு முன்பாக, எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இந்த ஜாதகர் போகசுகத்தில் ஈடுபடமுடியாதவர் எனக்கண்டறியப்பட்டு, நீதிமன்ற வளாகத்திலே அவமானப்படுத்தப்பட்டார்.
இவரோடு வாழ்ந்து வந்தஎந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியலஎனப்பாடி வந்த இவர் மனைவி, இந்த ஜாதகரிடமிருந்து திருமணமுறிவு கிடைத்தவுடன், உடனே மறுமணம் முடித்துக்கொண்டார். ஆனால், ஜாதகர்க்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.   








                                   குரு,    கேது               

சூரி
சுக்
புதன்



05.07.1976. 07.36 மாலைஆண்

                இராசி

சனி

            
             இல                      

செவ்





சந்தி    இராகு





உதாரண ஜாதகம். 4. 

இது பெண்ணின் ஜாதகம். இலக்கினம் துலாம். இராசி  கும்பம். இராசிக்கு ஏழாமிடமான சிம்மத்தில் சனி. தன் கணவனை விபத்தில் பறிகொடுத்துவிட்டு, பரிதவித்து வாழ்ந்து வருகிறார்.





     புதன், சுக்கி
        செவ்
சூரி




சந் கேது

         19.05.1979. 05.32. மாலை. பெண்

                 இராசி.
குரு




சனி
இராகு





இல






ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் இன்னன்ன கிரகங்கள், இந்தந்த இராசிகளில், இப்படி இப்படித்தான் அமர்ந்திருக்கவேண்டுமென எவரும் வரம் வாங்கிப்பிறப்பதில்லை. எல்லாருடைய ஜாதகங்களிலும் சாதக, பாதக நிலையில்தான் கிரகங்கள் அமர்ந்திருக்கும்.
திருமணப்பொருத்தங்கள் பார்க்கும் ஜோதிட அன்பர்கள் தயவுசெய்து நட்சத்திரப்பொருத்தங்கள் மட்டும் பார்க்காமல், கிரகப்பொருத்தங்களும் காணுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.  
மூலநூல்களில் ஏழில் சனி பற்றிய குறிப்புகள்.

1)  ஏழாம் வீடு. காரகன் சனி. திருமணப்பிரச்சபைகள், மனைவி, திருமணம் இவைகளைக் கணித்துக் கூறலாம். ஜாதகபாரிஜாதம்.
2)  கணவனுக்கோ, மனைவிக்கோ துன்பம் தருபவராக இருப்பார். சர்வார்த்த சிந்தாமணி.
3)  சட்டமாய் சனி ஏழில் நிற்கில், தாரம் இரண்டு தப்பாமல் செய்குவான். வீமகவி.
4)  பெண்களால் அவமானம் அடைவான். பிருகத் ஜாதகம்.
5)  மனைவியே நட்டம். புலிப்பாணி.
6)  திருமணம் இரண்டு. பெண்களின் விரோதி. தியாக இராஜ சேகரம்.
7)  கதிர்மகன் ஏழில் கலந்திட இருந்தால்
     கன்னியர் களத்திரம் இரண்டாம்.
     சதியிது என்றும் சரணமே கதியாய்
     சதுர்முகன் விதித்தது விதியே ! சுகர்  நாடி.
8)  ஏழாமிடம் சனியினால் பார்க்கப்பட்டால் களத்திர நாசம். சாராவளி.
9)  ஏழில் சனி. பிற பெண்களிடம் தொடர்பு கொள்வான். சாராவளி.
10) ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் சனியிருக்க விதவை. கணவனால் கைவிடப்பட்டவள். அதிக தோஷம் உடையவள். அதிக வஞ்சனை உள்ளவள்.
                         
                                       



வாழ்க தமிழ் வாழ்க!      வாழ்கவே!          


                                                  முத்துப்பிள்ளை 
                      4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
                                          ஆத்தூர். அஞ்சல் 624701.
                                                         ஆத்தூர் வட்டம்.
                                                 திண்டுக்கல் மாவட்டம்.
                                                      கைபேசி. 9150106069















         


































No comments:

Post a Comment