Sunday 22 March 2015

சிந்தனை துளிகள் 5




#################################
நம் எண்ணங்களும், செயல்களுமே, நம்மை சுயபரிசோதனை செய்யும் கருவிகளாகும். இவைகளை புனரமைத்துக்கொள்ளாத எவரும்,வாழவின் உயர்ந்த நிலையில் இருந்தாலும், விளிம்பு நிலையில் வாழ்பவர்களே!!
###############################
தான் ஊர்க்குருவிதான் என்பதை உணர்ந்தவன், எவ்வளவு உயரத்தில் பறந்து திரிந்தாலும், தரைப்பகுதிக்கு பத்திரமாய் வந்து சேர்வான். தன்னிலை மறந்தவன், தரையில் நடந்தாலும் பறக்கிற சிந்தனையில் பாதாளத்தில் வீழ்வான்.
################################
நம் முன்னோர்கள் யுகயுகமாய் அனுபவித்து எழுதிய வைத்ததையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். புதிதாக எதையும் நாம் சொல்லவில்லை. அவர்களுக்குப் புலப்பட்ட எதுவும், நமக்குள் ஏன் தோன்றவில்லை. அவர்கள் இந்த சமூகத்திற்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள். நாமோ, அவர்கள் தேடிவைத்ததை தேடிக் கொண்டிருக்கிறோம்.
#################################
வயிற்றை நிரப்ப சோற்றுக்காக வாழும் மனிதர்களுக்கு உலகம் வெறுமையாகத்தான் தெரியும். வாழத்தெரியாத எவருக்கும் இரசனையற்றதாகவே இருக்கும். உங்கள் வாழ்வு உங்கள் கைகளில். பூமாலையாய் சூட்டிக் கொள்வதும், பிய்த்து எறியப் போவதும் நீங்கள் தான்.
##################################
பணம் செய்யும் மாயத்தைப் பார்த்தால், இறையருளுக்கும் விலை சொல்கிறது. முட்டாளை, முதலாளியாக்கி விடுகிறது. மூடனை அறிவாளியாக்கி அலையவிடுகிறது. மொத்தத்தில் மனிதனை மனிதனாக்க விடாமல் வைத்திருக்கிறது.
###############################
ஆணின் விந்தும், பெண்ணின் சுரேணியமும் கலந்தால், ஜீவன் ஜனிக்கிறதோ, அதேபோல, ஜோதிடத்தில் பாவகமும், காரகமும் இணைந்தால் தான் பிரபஞ்ச சக்தியோடு மனிதன் இயங்க முடியும்.
################################
ஆவதும், மனுஷன் அழிவதும், இன்னும் சொல்லப் போனால், அழிப்பதும் பெண்ணாலே என்றால், ஆணாதிக்க மனோபாவம் மட்டும் காரணமா?
################################
நாம் பேசும் ஒவ்வொரு சொற்களும் அர்த்தம் பொதிந் ததாக இருக்கவேண்டும். எப்போதெல்லாம் அர்த்த மற்றுப் பேசுகிறோமோ. அல்லது அவர்களின் தகுதிக்கு மீறிப் புகழ்கிறோ மோ, அப்போதெல்லாம், நம் பிறப்பின் நோக்கத்தை இழிவு செய்கிறோம்.
###############################
குடும்பவாழ்வில் புரிதல் இல் லாமலே, "இல்லறம் இனிதே" முடிந்து விடுகிறது.
ஆதிக்கங்களால் சாதிப்பது என்ன?
################################

No comments:

Post a Comment