இதுவரை நல்லவிடயங்களை
மட்டுமே ஜோதிடத்தின் வாயிலாகப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளோம். இப்போது, முதன்முறையாக, ஒருவனின்
வலியையும், வேதனையும், துன்பங்களையும்,
மற்றும் தெய்வ நம்பிக்கையற்ற சிந்தனைகளையும் பார்க்கப்போகிறோம்.
சில நூல்களில் உள்ள காரகங்களைத் தொகுத்தபோது, (இதில் பல நூல்கள் விடுபட்டுள்ளன) அதில் பெரும்பாலும்,
மன்னிக்கவும் முழுமையாகவே கெட்டக் காரகங்களே அதிகம் இருந்தன.
இவ்வாறு கெட்டக்காரகங்கள் உள்ளடக்கிய எட்டாம் பாவத்தைப் பற்றி எழுத முயல்கிறேன்.
இதை ஆய்வு நோக்கில் படிப்பவர்கள் மட்டும் படிக்கலாம். மற்றவர்கள்……. உங்கள் விருப்பம்போல் செயல்படுங்கள்.
முதலில் எட்டாம்பாவக்காரகங்களைக்
காண்போம்.
ஜாதகர்க்கு
எதிர்பாராமல் கிடைக்கும் சட்டவிரோதமான பணம், மரணம், அதன்
மூலம் கிட்டும் காப்பீட்டு பணமும்,
வலி, வேதனை, , துரதிஷ்டம்,
போராட்டம், உடல் உறுப்பு பழுது, ஜாதகரின் பொருள் திருடப்படல், தெய்வக்குற்றம்,
தெய்வ அருள் கிட்டாத நிலை, ஜாதகரின் அதர்ம சிந்தனை,
அவமானம், கெட்ட பெயர், இறையருள்
இல்லாததால் அதிகமாக உழைத்து
பணம்பெறமுடியால் போவது. ஜாதகரின் திறமை வெளிச்சத்துக்கு வரமுடியாமல்
போவது, தற்கொலை, கொலை, துர்மரணம், கொள்ளை, எதிரிகள் தொல்லை,
எல்லாவித் தடைகள், வீண்பழி, நட்டம், சீதனம், வஞ்சம்,
அறுவை சிகிச்சை, சக்திக்கு மீறின பெருங்கடன், அதிக கோபம், இளமையில் தந்தையை இழப்பது, இயற்கை சிற்றங்கள், போர், ஆயுள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், பிறர் பொருளை அபகரிப்பது, எதிர்பாராமல் நடைபெறும் அனைத்து
செயல்களும், ஒரே நேரத்தில் வரும் பல நோய்கள், நாள்பட்ட நோய்கள், எதிர்பாராமல் நடைபெறும் எல்லாவிதமான
நன்மை, தீமையான் சம்பவங்கள், தெய்வநிந்தனை, மறு பிறப்பின்மை, செயற்கை மரணம், நீரில் மூழ்கிய மரணம், நெருப்பு ஆபாயம், பழி, தேடாத செல்வ்ம்,
கசாப்புக்காரன், பஞ்சம், நிலநடுக்கம், பற்றாக்குறை ஆகியவைகளைக் குறிக்கும்.
உடல் கூறில்
எட்டாமிடம் பாலின உறுப்புகள். மண்ணீரல், மலக்குழி, மர்மக்குழி, வயிற்றுப்பகுதி
எலும்புகளைக் குறிக்கும்
பொதுவான நோய்கள். மூத்திரப்பையில் கல் அடைப்பு, பிறப்புறுப்பு நோய்கள்,
கர்ப்பப் பைக்கு செல்லும் பாதையில் அடைப்பு, பெண்நோய்,எய்ட்ஸ், மாதவிடாய் கோளாறு, விந்தணு
பிரச்சனை, வலிப்பு நோய், வாதம்,
பேச்சுக்கோளாறுகள், கால்களில் நோய் முதலிய மறைமுக நோய்கள் ஏற்படும்.
பரந்துபட்ட
பன்னிரண்டு இராசிமண்டலத்தின் 108 பாத நட்சத்திர மண்டலமாகும்.
ஒரு பாவகத்தில் உள்ள முப்பது டிகிரி என்பது, 9 நட்சத்திர பாத மண்டலம் ஆகும்.
இந்த ஒன்பது பாதத்துக்குள் தான் முப்பதுடிகிரியே உள்ளது.
இப்போது எட்டாம்
பாவத்துக்குள்ளும் ஒன்பது நட்சத்திர பாதம் உள்ளது அல்லவா? எட்டாம் பாவம் தீமையைத் தருகிறது என்றால் , அதற்குள்
இருக்கும் ஒன்பது நட்சத்திரப் பாதமும் தீமையானது அல்லவா? எட்டாம்வீட்டிற்குள்
இருக்கும் இரண்டே கால் நட்சத்திரங்கள், யோகரின் நட்சத்திரமாக
இருந்தாலும், உங்களுக்கு தீமையைத்தான் தரும்.
மீண்டும் அடுத்த
பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment