Thursday 23 April 2015

சீந்தனை சிதறல்கள் 6





உலகம் எனும் வட்டக் குளத்துக்குள், உயிரினங்களை உலாவ விட்டிருப்பது போல, மனிதர்களாகிய நம்மையும் அலைய விட்டிருக்கிறான். இறையைப் பற்றிய ஞானத்தெளிவு வராதவரை, தூண்டில் புழுவிற்கு ஆசைப்படும், துள்ளும் மீன்கள்தான்.
நம்மை படைத்ததின் நோக்கம் தெரியாமலே, வாழ்ந்து முடித்து விடுகிறோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மூடத்தனமான எண்ணங்களும், கருத்துக்களும், சிந்தனைகளும் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தூரவிரட்டப்படும். மொழியறிவு சிறக்க வேண்டுமானால், வாசிப்பைக்  கட்டாயம் செய்யவேண்டும்.     

இன்றிருக்கும் காலகட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தையும், வாழ்க்கைப் பாவனைகளையும் மாற்றிக் கொண்டாலே ஜெயித்துவிடலாம் என்கிற மனப்போக்கு நம்மிடையே உள்ளது.

எப்போது எல்லாம் இவைகளில் சிக்கல் வரூகிறோ, அப்போதெல்லாம் தோற்றுப்போவது குடும்ப வாழ்வுதான்.

“ஓடினால்தான் ஆறு, தேங்கினால் குட்டை” அதுபோல, நாம் வாழ்க்கைப் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஓடிச்சேர வேண்டிய தூரத்தை நாமே நிர்ணயம் செய்து கொள்ள முடியாது.

எத்தனை அணைகள்கட்டித் தடுத்தாலும், ஆற்றுக்குத் தடைகள் புதிதல்ல. உடைத்தெறிந்து பொங்கும் புனலாய் கிளம்பும். அதேபோலத்தான் வாழ்க்கையும்…… 

##################################################################

இந்த உலகம் நவநாகரீகமாக மாறிக் கொண்டிருக்கிறது. மண்ணைக் கிண்டியவனிடம் இருந்துதான் உலகியல் மாற்றமே உருவானது. அதனால்,   கற்றுத் தேர்ந்து கயமைத்தனம் செய்பவனை விட, கல்லாதவனே சமூகப்பொறுப்பு மிக்கவன்.

##################################################################

எவ்வளவோ பாடங்களை காலம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. புரிந்தவன் அடுத்தடுத்த பிரிவுகளில் தேர்ந்தவனாகிறான். புரியாதவன் தேங்கிவிடுகிறான். புரிந்தும், புரியாமல் இருக்கும் “இரண்டும் கெட்டான்கள்”, அந்த காலத்திற்கே பாடம் நடத்துவார்கள்.


முத்துப்பிள்ளை 91501 06069, 91506 65878

No comments:

Post a Comment