Monday 6 April 2015

தாலாட்டுப் பாட……. தாயாக வேண்டும்…..1 ஆத்தூர். முத்துப்பிள்ளை.





இந்த பிரபஞ்சத்தில் பரிணாமத் தோற்றத்தில் தான் உயிரினங்கள் பல்கிப் பெருகியுள்ளன. இனப்பெருக்கக் காலங்களில் பெண் உயிரினங்களை கவருவதற்கு, போராட்டங்களில் வெல்லும் ஆண் உயிரினமே உறவு கொள்ளமுடியும். அதன் மூலம் வீரியமான இனக்கவர்ச்சியின் மூலமே, தங்களின் மரபணுக்களைக் ஒவ்வொரு தலைமுறைகளாக, காலங் காலமாக கடத்தி வருகின்றன. இதே நிலைதான் மனிதர்களுக்கும் நீடித்தது. எப்படி என்றால், முரட்டுக்காளையை அடக்கினால்தான் பெண்தருவேன் என்பதும், வாள்போரும், மல்யுத்தப்போட்டிகளும், மாப்பிள்ளைக் கல் தூக்கிப்போடுவதும் அடங்கும். இவையெல்லாம் பெண்ணைக் கவர ஆணின் போராட்டங்கள். அதன் மூலம் வலிமையான சந்ததியை தன்னால் உருவாக்க முடியும் என்பதை சமூகத்திற்குச் சொல்கிறான். ஆனால், நாகரீகம் மிக்கதாகக் கருதப்படும், இக்காலத்தில் வலிமையானவன்தான் என்பதைக் காட்ட வேண்டிய சூழல் எந்த ஆணுக்கும் நிகழவில்லை.  
 இந்த பிரபஞ்சத்தில் எந்த உயிரினமாக இருந்தாலும், தன் சந்ததிகளை உருவாக்க முடியாதவைகளும். உருவாக்க முடிந்தவைகளும் உண்டு. உருவாக்க முடியாதவை   வீணான உயிரினமாகக் கருதப்படும். அவைகளை, “மலடுஎன்று ஒதுக்கப்படுகிறது.  
இந்த மனிதகுலத்தின்பேறு அற்றவைகளைநான்கு வகையாக, நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். அவைகளை, “வந்தியைதோஷம் என்றழைக்கப்படுகிறது.
                                                1) கதவீ வந்தியா :
பெண் குழந்தைகளை மட்டும் எவள் பெற்று எடுக்கிறாளோ, அவள்புருஷ வந்தியைஎன்றும் அழைக்கப்படுவாள்.

2) ஸ்திரீ வந்தியை;
எவள் ஆண்குழந்தையை மட்டும் பெறுபவளும், பெண்குழந்தையை பெற முடியாதவளையும், “ஸ்திரீ வந்தியைஎன அழைக்கப்படுவாள்.
3) மிருத வந்தியை:
எவளுக்கு குழந்தைகள் பிறந்து இறந்து விடுகின்றதோ, அவளுக்கு, “மிருத வந்தியைஎன்று பெயர்.
                                                4) ஸாஷாத் வந்தியை:
எவளொருத்தி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறாளோ, அவளே, “ஸாஷாத் வந்தியைஎன்று அழைக்கப்படுகிறாள்.

No comments:

Post a Comment