வடமொழி
நூல்களில் சொல்வது
உண்மையான பட்சத்தில்,
ஆண்பெண் குழந்தைகளைக்
கொண்ட தம்பதிகள்
மட்டுமே, புத்திர
தோஷமற்றவர்கள் என்று
ஆகிறது. நம்
முன்னோர் சொல்லிய
கருத்தை ஆய்வு
செய்வோம். நம்
சமூக அமைப்பு
குழந்தைப் பேறு
அற்றவர்களைப் பார்க்கும்
பார்வை மிகக்கொடுமையானது.அவர்கள்
ஏதோ இந்த
பூமியில் வாழவே
தகுதியற்றவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
இதில் அதிகம்
பாதிக்கப்படுவது பெண்
சமூகம்தான். மனதளவில்
பெண் கடுமையாகப்
பாதிக்கப்படுகிறாள். அந்த
அளவுக்கு ஆணுக்குப் பாதிப்பில்லை.
இந்த சமூகம் மலட்டுத்தன்மைடை
பெண்ணின் உடல்சார்ந்த
நிகழ்வாகப் பார்க்கிறது.
திருமணம் முடிந்து
சிலமாதங்களிலே குழந்தைக்கு
கருவுறவில்லை என்றால்,
அதையொரு துக்கநிகழ்வாக
உறவுகள் விசாரிக்கத்
துவங்கும். அந்த
விசாரிப்பில் அக்கறை
இருப்பதுபோல, மறைமுக
வார்த்தைத் தாக்குதல்
இருக்கும். நல்லது
கெட்டது என்று
எங்கும் செல்லமுடியாது.
அன்றிலிருந்து கரு
உருவாகும்வரை, அந்த
பெண் பாவம்தான்.
இனி குழந்தைப்பேறு
கிடைக்காது என்று
ஆனபின், அவள்
மலடி என்று
முத்திரை குத்தப்படுகிறாள்.
குழந்தைப்பேறு
இல்லாமல் போவதற்கு
பெண்தான் காரணம்
என்று, நம்
சமூகம் திட்டமிட்டுச்
சொல்கிறது. ஆனால்,
அறிவியலும், ஜோதிடமும்
பெண்மட்டும் காரணமல்ல.
ஆணும்தான் காரணம்
என்கிறது.
1). புருஷ
வந்தியை எனும்
காகவந்தியா தோஷம்:
இலக்கினத்திற்கு
எட்டாமிடத்தில் சனியும்,
சூரியனும் கூடியிருந்தாலும்,
அல்லது இவர்களின்
சொந்த வீடுகளில்
கூடியிருந்தாலும்,
இதே
அமைப்பில் சந்திரனும்,
புதனும் கூடினாலும்,
அவர்களின் வீடுகளில்
கூடியிருந்தாலும், ஜாதகர்க்கு
ஆண் சந்ததி
கிடைக்கவாய்ப்பில்லை. பெண்
சந்ததியே உண்டாகும்.
இந்த அமைப்பு
என்னுடைய நண்பரின்
ஜாதகத்தில் உள்ளது.
அவர்க்கு இரண்டுமே
பெண்குழந்தைகள்.
சுக்கிரனும்,
புதனும் ஐந்தாமிடத்தில்
இருந்து, புத்திர
ஸ்தானாதிபதி பலக்குறைவாய்
இருந்தால், பெண்குழந்தையே
பிறக்கும்.
2). மிருத
வந்திய தோஷம்:
ஜாதகத்தில்
சுக்கிரன், குருவுடன்
செவ்வாய் கூடியிருந்தால்,
கர்ப்பம் அழியும்,
அல்லது குழந்தை
இறக்கும். இந்த
அமைப்புடையவர்க்கு இலக்கினத்திலோ,
எட்டாமிடத்திலோ கோள்கள்
இருப்பது இந்த
கெட்ட நிலையை
மாற்றி, நல்ல
நிலையை உருவாக்கும்.
மேஷம்,
விருச்சிகத்தில் செவ்வாயுடன்
சுக்கிரன் கூடியிருந்து,
இலக்கினத்தில் சந்திரன்
இருந்து, பாவர்களால்
பார்க்கப்பட்டால், அந்த
ஜாதகரோ, ஜாதகியோ
குழந்தைப் பெற்றுக்
கொள்ள இயலாதவராக
இருப்பார்.
இலக்கினத்திற்கு
ஏழில் செவ்வாய்
இருந்து, சனியால்
பார்க்கப்பட்டால், கருச்சிதைவு
ஏற்படும். இலக்கினத்திற்கு
ஏழில் சூரியனும்,
இராகுவும் கூடியிருந்தாலும்,
இலக்கினத்திற்கு ஏழில்
சூரியன் இருந்து
இராகுவின் சாரம்
வாங்கியிருந்தாலும், அல்லது
இராகு இருந்து
சூரியன் சாரம்
வாங்கினாலும் கருச்சிதைவோ,
குழந்தை பிறந்து
இறத்தலோ ஏற்படும்.
குழந்தையைத்
தரும் ஐந்தாமதிபதிக்கோ,
ஐந்தாமிடத்துக்கோ, சந்திரன்,
சனி, செவ்வாய்
இம்மூன்றுக்கிரகங்களின் தொடர்பு
ஏற்பட்டால், மிருத
வந்தியா தோஷம்
ஏற்படும். அதாவது
கருச்சிதைவு ஏற்படும்.
3). ஸ்திரி
வந்தியாம்:
மகரமோ,
கடகமோ ஐந்தாமிடமாகி,
அதில் குரு
நீசமாகவோ அல்லது
உச்சமாகவோ இருந்தால்,
அது ஸ்திரீ
வந்திய தோஷமாகும்.
மேலும், இதேவிடங்களில்
சந்திரனும், சுக்கிரனும்
இருந்தாலும் இந்த
தோஷம் உண்டாகும்.
இலக்கினத்தில் இராகுவும்,
அதற்கு ஐந்தாமிடமான
புத்திர
ஸ்தானத்தில் குருவிருக்க,
அதற்கு ஐந்தாமிடமான
ஒன்பதாமிடத்தில் சனியிருக்க
ஜாதகர்க்கு ஒரே
புத்திரன்தான் இருப்பான்.
4). ஸாக்ஷாத்
வந்தியா தோஷம்:
இலக்கினத்துக்கு
ஐந்தாமிடம் புதன்
அல்லது சனியின்
வீடாக இருந்து,
அதில் சனியும்,
மாந்தியும் கூடியிருந்தால்,
அல்லதுபார்வைப் பட்டால்
புத்திரவர்க்கம் இல்லை.
ஐந்தாமிடத்தில் பல
பாவக்கிரகங்கள் கூடியிருந்தால்
குழந்தைகள் இல்லை.
புத்திர ஸ்தானாதிபதி
நீச வர்க்கம்
பெற்றால், குழந்தைகள்
இல்லை. இலக்கினம்,
சந்திரன் மற்றும்
குருவுக்கு ஐந்தாமிடத்தில்
பாவக்கிரகங்கள் சூழ்ந்து
இருந்தால், குழந்தைகள்
இல்லை. ஐந்தாமதிபதி
பாவக்கோள்களுடன் கூட
ஸாக்ஷாத் வந்தியா
தோஷம் ஆகும்.
இதுபோன்ற
கிரக அமைப்புகளை
அவயோக அமைப்பாகும்.
இவைகளை வந்தியை
தோஷம் என்பார்கள். நன்றி. மீண்டும்
அடுத்த பதிவில்
சந்திப்போம்.
No comments:
Post a Comment