நாம் எப்போதும் மறப்பதற்குப்
பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். இது அவ்வளவு ஒன்றும் சுலபமான விடயமல்ல. எதையும் எளிதாய்
எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால், ஒருவேளை சித்திக்கலாம். ஆனால்,
அந்த காட்சியையோ, சூழலையோ, ஒருவரால் பாதிக்கப் பட்டால் அந்த நபரையோ காணும் போது, எண்ணப்பறவை
சிறகடித்து பின்னோக்கித்தான் பார்க்கச் சொல்லும். அப்போது மனக்குதிரையின், “லகானை”
கையாள்வதைப் பொறுத்தே, மனப் பதட்டத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.
##################################################################
எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளட்டும்
என்று நினைத்து, ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த செயலுக்கு உண்டான பலன் கிடைப்பதில்லையே
ஏன்? வலிய. வலிய சென்று, கூவிக் கூவி அழைப்பதாலா? அதனால்தான் உதவி செய்யும் மனோபாவமும்,
ஈகைக் குணங்களும் இல்லாமலே போய் விட்டனவோ? ஏணி உயரமாக இருக்கலாம். உங்களுக்கு ஏறுவதற்கு
தெம்பும் இருக்கலாம். ஆனால், அந்த ஏணிக்கு படிக்கட்டுகளும், உங்கள் தெம்பிற்கு ஊட்டச்சத்தும்,
வேறு எங்கோ இருந்துதான் கிடைக்கும்.
பத்து அடி தூரம் தாண்டுவதற்கு
செலவிடும் சக்தியை, பதினொரு அடி தூரம் தாண்டுவதற்கும் பயன்படுத்த முடியாது. உங்களால்
எதுவும் தீர்மானிக்கப்படாதவரை, ஒரு செயலின், “கர்த்தாவாக” இருக்கமுடியாது. அபோதுதான்
நீங்கள் பதட்டப்படாமல் இருக்கலாம்.
##################################################################
நெற்கதிரை களத்து மேட்டில்
அடித்து தூற்றி, கருக்காவை காற்றில் பறக்கவிட்டு, பட்டறையில் குவித்து காயவைத்த காலம்
மாறிப்போய்விட்டது. இன்று களத்து மேடு காலியாக உள்ளது. அதே போல,
மழைநீர் மேலாண்மையை
அரசாங்கம் சீர்படுத்தவில்லை. நதிநீரும் பற்றாக்குறை. முல்லைப் பெரியாறு ஒருபுறம், காவிரி
மறுபுறம். மேகதாதுவில் தொடங்கி, பாலாறு வரைக்கும் பிரச்சனையோ பிரச்சனை. அதனால, களத்து மேட்டில் முறம்பிடித்து ஏழைகளுக்கு
அள்ளிப் போட்ட, “சம்சாரிகளும்” இல்லாமலே போய் விட்டனர். இன்றுபசியோ பசி. அப்படி வறுமையை
விரட்டியடித்த விவசாயி, ஒட்டிய வயிறுடன் ரேஷன் கடை வாசலில் இலவச அரிசி வாங்க நிற்கிறான்.
அவன் விளைவித்த பொருளுக்கு, அவனால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அவன் உழைப்போடு
எதிர்காலத்தையும் இழந்து கொண்டு இருக்கிறான்.
மீன்பிடிக்கப் போனா
இலங்கைக்காரன் சுடுறான். கொல்றான். வலைகள, படகுகள சேதப்படுத்துறான். வெறகு வெட்டப்போனா
ஆந்திரக்காரன் சுட்டுக் கொல்றான்.
ஒலகத்தையே ஆண்ட இனம்,
உலகத்திலே மூத்த மொழின்னு சொன்னீகளேடா பாவிகளா?
எங்க போனாலும் கொல்றாங்களேடா? இப்ப எங்க போனீக. திருட்டு…………..?????
எத்தனை வரங்களைப் பெற்று
இப்புவியில் வாழ்ந்து வந்தாலும், அது யாவும் ஒரு பெண்ணின் சாபத்திற்கு முன் எடுபடமுடியாமல்
போய்விடும். கன்னிப்பெண்ணின் கண்ணீர், கூரிய வாள்முனையை விட வலிமையானது. அவளின் களங்கமற்ற
கண்ணீர், இரும்புக் கோட்டையையே தகர்த்து விடும். பெண்மையை போற்றுங்கள்.
###################################################################
முத்துப்பிள்ளை, 91501 06069, 91506 65878
No comments:
Post a Comment