நாம் சில பதிவுகளில், இலக்கினம் என்பது ஜாதகரைக் குறிக்கும் என்பதால், இலக்கினத்திற்கு
இரண்டாமிடம் “ஜாதகரின் குடும்பம்” என்றும், மூன்றாமிடம் , “ ஜாதகரின் வீரியம், வெற்றி” என்பதைக்
குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். அதேபோல், ஏழாமிடம் என்பது, ஜாதகரின் மனைவியை” குறிக்கும் என்றால், எட்டாமிடம், ஜாதகரின் ஆயுளை” குறிக்கும்
அல்லவா?
இப்போது ஒருவரின்
ஆயுளை அறியவேண்டுமென்றால், அந்த ஜாதகரின் எட்டாமிடத்தையும்,
அந்த இடத்தின் அதிபதியையும், அந்த அதிபதி அமர்ந்துள்ள
இடத்தையும், அவரோடு கூடிய கோள்களையும், மற்றும் ஆயுள்காரகனையும் பார்த்தால்
போதுமானது.
எட்டுக்குடையக்
கோள் இலாபத்தில் இருந்தால், ஆயுளுக்கு இலாபம் என்று
அர்த்தமாகிறது. அப்படியென்றால், ஆயுள் அதிகம்.
அதுவே, எட்டுக்குடையவன் விரையவீட்டில் இருந்தால்,
குருபோன்ற நல்லக்கிரகங்கள் பார்த்தால், ஆயுள் அதிகம்.
இல்லையென்றால், ஆயுள் விரையமாகும். இப்படி காரகங்களைப் பாவகங்களுடன் பொருத்திப் பார்க்கவும்.
எட்டுக்குடையவன், இலாபவீட்டில் இருந்து, இலக்கினாதிபதியும், சனியும் கேந்திர திரிகோணவீடுகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு
ஆயுள் நூறைத் தாண்டும் எனக்கூறி, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment