எவ்வளவோ பாடங்களை
காலம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. புரிந்தவன் அடுத்தடுத்த பிரிவுகளில் தேர்ந்தவனாகிறான்.
புரியாதவன் தேங்கிவிடுகிறான். புரிந்தும், புரியாமல் இருக்கும் “இரண்டும் கெட்டான்கள்”,
அந்த காலத்திற்கே பாடம் நடத்துவார்கள்.
பூவுலகில்
வாழும் ஒவ்வொரு உயிரும், தன்னுயிரை மற்றொரு உயிரிகளிடமிருந்து, தற்காத்துக் கொள்வதற்காகவே
தன்னுடலை வடிவமைத்துக் கொண்டிருக்கும்.
சிந்திக்கத்
தெரிந்த மனிதமிருகம்கூட, மறைந்திருந்து வேட்டை ஆடுவதற்காகவே சொல்லும் குறியீட்டுச்
சொல்தான், “நிமிர்ந்து நில்”
#########################################################################
எங்கேயும் யாரும் அதிகம் சிந்திப்பதையே
விரும்புவதில்லை. நீங்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களே. கொடுக்கத் தகுதியுள்ள நீங்கள் யாசகம் பெற்று செல்லவும்
முதல் ஆளாக நிற்கிறீர்கள்.
வானில் நடக்கும் அதிசய நிகழ்வுகளையும்,
கோள்களின் நகர்வுகளையும் வெறுங்கண்ணால் கண்டே, இன்றைய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சியோடு
நம் பெரியவர்கள் நமக்கு அருளினர். இதில் எந்தவகையான கணக்கீடுகளை எடுத்துக் கொண்டாலும்,
அதன் அடிப்படை நுட்பம் முன்னோர்கள் வகுத்து தந்தவையே!
##################################################################
காற்று நிரப்பிய பந்தை
கடலுக்குள் அழுத்தி வைத்திருந்தாலும், அது நழுவி பெரும்விசையுடன் கடல்நீருக்கு மேலே
வருவதைப்போல, நீங்கள் என்கெங்கு எல்லாம் அழுத்தப் படுகிறீர்களோ, அங்கெல்லாம் “வீறு
கொண்டு” எழுங்கள். அழுத்தியவனே அதிர வேண்டும்.
உங்களின் எண்ணங்களுக்கு
வலிமையும், உழைப்புக்கு மதிப்பும் அதிகமாகவே கிடைக்கும்.
##################################################################
தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கும்
பலரில் ஒருவர், மற்றவர்மேல் ஏதிர்வினை புரியாமல் இருந்துவிட்டால், மற்றவரும் எதிர்வினை
புரிவதில்லை. மாறாக, வினைபுரிந்து விட்டால், இவரின் ஓட்டத்திலும் மாறுதல் ஏற்பட்டு
எதிர்வினைக்கு தயாராகி விடுவார். அதன்பின் பஞ்சபூத மாற்றங்கள் உடலில் அதிகம் ஏற்படுகிறது.
ஒரு நதி சீறிப்பாயும் இடங்களைத்
தவிர்த்து, அது இளப்பமாக, அமைதியாக அரிப்புத்தன்மை குறைவாகவும், வேகம் மட்டுப்பட்டு
இருக்கிறதோ அங்கே அதன்போக்கு அறிந்து, அணைபோட வேண்டும்.
##################################################################
முத்துப்பிள்ளை 91501 06069, 91506 65878
No comments:
Post a Comment