Saturday 14 March 2015

நான்குவிதமான மலடுகளுக்கான தோஷங்கள். 3, முத்துப்பிள்ளை.



முந்தைய பதிவில் புருஷ வந்தியை தோஷத்தைப் பற்றிக் கண்டோம். இன்று மிருத வந்திய தோஷத்தைப் பற்றிக் காண்போம்.

2). மிருத வந்திய தோஷம்:

ஜாதகத்தில் சுக்கிரன், குருவுடன் செவ்வாய் கூடியிருந்தால், கர்ப்பம் அழியும், அல்லது குழந்தை இறக்கும். இந்த அமைப்புடையவர்க்கு இலக்கினத்திலோ, எட்டாமிடத்திலோ கோள்கள் இருப்பது இந்த கெட்ட நிலையை மாற்றி, நல்ல நிலையை உருவாக்கும்.

மேஷம், விருச்சிகத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் கூடியிருந்து, இலக்கினத்தில் சந்திரன் இருந்து, பாவர்களால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகரோ, ஜாதகியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள இயலாதவராக இருப்பார்.

இலக்கினத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்து, சனியால் பார்க்கப்பட்டால், கருச்சிதைவு ஏற்படும். இலக்கினத்திற்கு ஏழில் சூரியனும், இராகுவும் கூடியிருந்தாலும், இலக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்து இராகுவின் சாரம் வாங்கியிருந்தாலும், அல்லது இராகு இருந்து சூரியன் சாரம் வாங்கினாலும் கருச்சிதைவோ, குழந்தை பிறந்து இறத்தலோ ஏற்படும்.


குழந்தையைத் தரும் ஐந்தாமதிபதிக்கோ, ஐந்தாமிடத்துக்கோ, சந்திரன், சனி, செவ்வாய் இம்மூன்றுக்கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால், மிருத வந்தியா தோஷம் ஏற்படும். அதாவது கருச்சிதைவு ஏற்படும்

No comments:

Post a Comment