நம்மில் பலரும் ஜோதிடத்தைக் கற்றவர்களாக இருக்கிறோம்.
ஆனால், கற்றுக் கொண்ட வழிமுறைகளும், விதங்களும் வேறுவேறாக உள்ளன. ஏதோவொரு உள்ளுணர்வின்
உந்துதலால், தானே உதிர்க்கும் வார்த்தைகளும், இறையருளின் பேரருளால் அப்படியே பலிக்கின்ற
அமைப்பும் இருக்கின்றன. அவர்கள் எவரிடமும் கற்றாருமில்லை, நூல் பயிற்சிப் பெற்றாருமில்லை.
எல்லாம் அவன் செயலாக மட்டும் பார்க்கப்படுகிறது. இந்த நிலைக்கு என்ன காரணம்?
உங்களின் இலக்கினத்திற்கு இரண்டில் புதன்
எனும் புத்திக்கோள் நின்று, முழு நல்லக்கோளான குருவெனும் எனும் பேரறிவாளன் காண, நீங்கள்
மிகச்சிறந்த ஜோதிடனாக வலம் வருவீர்கள். அதேபோல, இரண்டில் புதன் நின்று, இரண்டாமதிபதி
அப்புதனைக் காண, காலத்தைக் கணிக்கும் வகையறிந்தவன் ஆவான்,
14.
நமக்கு ஜோதிடம் அரைகுறையாகவாவது தெரிகிறதோ இல்லையோ,
ஆனாலும் Astro _________________ என்று பெயரையும்
போட்டுக் கொண்டு, முகநூலில் இருந்து வருகிறோம். இதில் இன்னும் சிலர் ஜோதிடத்தை தொழிலாகவோ,
அல்லது இரண்டாம் நிலை தொழிலாகவோ வைத்துக் கொள்ளாமல், அதனை Happy க்காக மட்டும் பயன்படுத்துவது
மட்டுமல்லாமல், முகநூலில் ஜோதிடப் பதிவுகளைப் போடும், “ கனவான்களை ” கேள்விகள் கேட்டு
மிரட்டுவதற்கும் பயன்படுத்தி வருகிறோம் அல்லவா? இவர்களுக்கான கிரக அமைப்பு எப்படி இருக்கும்
தெரியுமா?
இலக்கினக் கேந்திரங்களில் புதன் நின்று, குரு
காணவும், இரண்டாமிடத்தினில் அதாவது வாக்கு ஸ்தானத்தில் பலம்பெற்றக் கிரகம் நிற்குமாயின்,
ஜாதகர் ஜோதிட ஞானம் இருந்தாலும், அதை தொழிலாகச் செய்யமாட்டார். ஆனால்,
இலக்கினக் கேந்திரங்களில் புதன் வலுவிழந்து நின்று,
குருவும் பலமிழந்து காணவும், இரண்டாமிடத்தினில் இராகு நிற்க, அரைகுறையாய் ஜோதிடவாசனையுடன்
அனைவரையும் கேள்வி கேட்டு, வெறுப்படைய வைப்பார்.
91501 06069
No comments:
Post a Comment