பிறக்கவொரு நாடு, பிழைக்க ஒரு நாடு என்கிற நிலையில் இருந்து,
இன்னும் நாம் விடுபடவில்லை. இங்கே வேலையும், வாய்ப்பும் நடுத்தர மக்களுக்கானதாக இல்லை.
இயற்கையும், வறுமையும், மாறிமாறி விரட்ட, தற்கொலையில் இருந்து தப்ப, வெளிநாட்டிற்கு
அடிமை வேலைக்குப் போகும் சூழல் உருவாகிறது. படித்த.மற்றும் படிக்காத அடிமைகளை ஏற்றுமதி
செய்யும் நாடாகவே, நமது நாடு இருக்கிறது.
இராகு, கேது தவிர்த்த மற்ற ஏழுகிரகங்களும், சரராசிகளில் இருக்க,
ஜாதகன் வெளிநாடுகளில் வேலை பார்ப்பான் .
42. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?
நம் சமூகம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம்
கொஞ்சமாக மாறி, தனித்த வலைகளை தேடித்தேடி அமைத்துக் கொண்டது. இது தன்னலத்தின் வெளிப்பாடாகும்.
இதனால் குடும்பத்துள் அன்பு, பாசம், பரிவு, பண்பு, அடக்கமென அத்தனை நற்குணங்களும் வளரும்
சந்ததிகள் உணராமலே வளர்கின்றன. தாத்தாவின் அன்பும். பாட்டியின் பரிவும் தன்னளவிர் உணராத
இளம் சமூகம் உருவாக்கப்பட்டதால், முதியோர் இல்லங்களும் உருவாகத் துவங்கின. யாரெல்லாம்
தாத்தா, பாட்டிகளையும், அப்பா அம்மாவையும் கடைசி காலம்வரை விருப்பத்துடன் முதியோர் இல்லம் அனுப்பாமல், அல்லது நன்றாக கவனிப்பவர் யார் என்பதை
ஜோதிடம் கூறும் தகவலைக் காண்போமா???
ஆதி உறவைக் குறிக்கும் சூரியனுடன், குரு கூடி இருந்து,
6,8, 12 மதிபதிகளோ, அல்லது மற்ற பாவக்கிரகங்களோ காணாமல் இருந்து நல்லக்கிரகங்கள் காண,
தமை ஈன்றவர்களையும், தாத்தா, பாட்டி ஆகியவர்களையும் கடைசி காலம்வரை காப்பாற்றி
"கரை முறை " சேர்ப்பார்.
91501 06069
No comments:
Post a Comment