சுமார் 2009 ம் ஆண்டே நண்பர் ஜெயவேல் மூலமாக நண்பர் முருகன்
தொடர்பில் வந்தார். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டதில்லை. கைபேசியில்
மட்டுமே தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். இருவருக்கும் என்ன ஒற்றுமை என்றால்,
அவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பேசுவார். நான் திண்டுக்கல் மாவட்டம்
ஆத்தூரில் இருந்து பேசுவேன். இதே நிலை ஒன்பது மாதங்கள் முகம்பார்க்காமல், குரலில்
மட்டும் கேட்டுக் கொண்டோம். என்னுடைய முதல் கட்டுரையின் தலைப்பு, “ திருமணபந்தம் முறிவைக்
கொடுத்திடும் ஜாதக
அமைப்பு “ என்பதாகும். அதில் என்னுடைய போட்டோவும்
வெளியிடப்பட்டிருந்தது. அப்போதுதான் “குருவருள் ஜோதிடம் “ புத்தகத்தை வாங்கிப் பார்த்துக்
கொண்டார். ஆனாலும், நான் அவரைப் பார்க்கவில்லை. அதற்கு பின் பலநாட்கள் கழித்து திண்டுக்கல்
புத்தகக் கடையில் இருவரும் சந்தித்துப் பேசும் சூழ்நிலை உருவானது. இவரும் துருவகணிதம்
இல்லாமல் உடன்பிறப்பு வர்க்கத்தைச் சொல்லும் திறன் உடையவர். ஆனால், இவரின் வழிமுறையும்,
என்னுடைய வழிமுறையும், திரு ஐயா, பாலப்பட்டி சீனிவாசகன் சொல்லும் வழிமுறையும் வேறுவேறானது.
இதே
காலக்கட்டத்தில்தான் ஐயா ஜோதிடசித்தர் எடப்பாடி மீனம் பச்சமுத்து அவர்களின் தொடர்பு
கிடைத்தது. அவரும் பல இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியவர். குருவருள் ஜோதிட மாத இதழின்
துணையாசிரியரும் ஆவார். எவ்வளவு பெரிய ஜோதிட சூட்சுமத்தையும் மிக எளிதாக விளக்கிவிடுவார்.
தமிழகத்தின் அனைத்து ஜோதிட சங்கங்களிலும் பேசிய அருளாளர். எங்களைப் போன்றவர்களை,” இது
வேண்டாம், விட்டுவிடுங்கள் “ என்று கண்டிக்கும் திராணியுள்ளவர் அவர் ஒருவர்தான். நான்
எழுதிய “மனிதனின் மரண நாள் மர்மங்கள் “ என்கிற கட்டுரையில் பல சூட்சுமங்களைச் சொன்னவர்.
வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தகுதியானவரும் கூட….. இந்த வயதிலும் தளராத சிந்தனையாளர்.
ஐயா, பச்சமுத்தய்யா வணக்கம்….. நன்றி முகநூல் உறவுகளே!!!
தொடர்புக்கு….
9751822129 8754873378
No comments:
Post a Comment