நம்மில் பலர் பலவருடங்களுக்கு முன்பு நாம் பார்க்கும்போது, அவர்கள் என்னதொழில்
செய்தார்களோ, அதே தொழிலை இன்று வரையும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் சேய்து வருகிறார்கள்.
காரணம், என்ன? இதில் அவர்களுக்கு அடைமொழியும் இருக்கும். உதாரணமாக, “ மிஷின்காரர்,
கறிக்கடைக்காரர், கல்லுக் கொத்தி, அப்புறம் ரம்பக்காரர், பாம்பாட்டி “ இந்த பெயர்களெல்லாம்,
அவர்களுக்கு தொழில்சார்ந்து வைக்கப்பட்டதாகும்.. உண்மையான பெயர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கே
கூட மறந்து போயிருக்கலாம். தொழில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால், என்றோ தொழிலை மாற்றிவிட்டு,
வேறு நல்லவேலைக்கு மாறிவிடுவார்கள் அல்லவா?
நேற்று சூரியன் + இராகு அல்லது கேது கூடி ஐந்தில் இருந்தால், என்ன பலன் என்று
பார்த்தோம். இன்று, அதே சூரியனுக்கு 4, 7, 10 ம் வீடுகளில் இராகு அமர்ந்து இருந்தாலோ,
இருவரும் இலக்கினக் கேந்திரங்களில் கூடியிருந்தாலோ, அல்லது சிம்ம வீட்டில் கூடினாலோ
ஜாதகன் தொழில் முன்னேற்றம் இல்லாமல் பரிதவிப்பான்
24. மனிதன் உழைக்கும் போக்கை சமீபகாலமாகவே குறைத்துக் கொண்டே வருகின்றான்.
காரணம், கடுமையாய் உழைக்கத் தகவமைக்கப்பட்ட மனித உடலை வைத்து, சம்பாதித்து பொருள் ஈட்டுவைவிட,
, மேம்போக்காய் அறிவைப் பயன்படுத்தி, புத்திசாலித்தனமாய் பெருந்தொகை பார்த்து விடுகிறான்.
அதனால், ஏதோவொரு வகையில் உடல் அலுக்காமல் வேலை செய்து பணம் ஈட்டவே எல்லோரும் விரும்புகிறோம்.
இதற்கெல்லாம் காரணம், என்ன?
ஜோதிடத்தில் பத்தாமிடத்தையும், அதன் அதிபதியையும், அதனுடன் கூடிய கிரகங்களை
வைத்தும், தொழில்காரகன் சனியையும் இவருடன் கூடிய கிரகங்களையும் வைத்துதான் ஜாதகனின்
வேலை மற்றும் செய்யும் தொழிலைத் தீர்மானிக்கப்படுகிறது.
இந்த பத்தாமிடங்களில் ( இலக்கினத்திற்கோ, இராசிக்கோ ) முழுச்சுபக்கிரகங்களான
குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், மற்றும் புதன் ஆகியோர் இருந்தால், அந்த ஜாதகன்
நல்ல அலுவலுடன், வளமான வாழ்வுதரும் மனையாளுடன், செல்வம், செல்வாக்குடன் வாழ்வான் .
91501 06069
No comments:
Post a Comment