Friday 12 June 2015

43. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?





எந்த மனிதப் படைப்பும் வீணானப் படைப்பு என்று இல்லை. அவர்களுக்குள் ஏதோவொருத் திறமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தாமலே, அழிந்தும் போகிறார்கள். பலர் இல்லாத திறமையை இருப்பதாக காட்டிக் கொண்டு மிகைப் படுத்துபவர்களும் உண்டு. பலர் தன் திறமைகளை வெளிபடுத்தினாலும், உலகம் திரும்பிப் பார்க்காத கொடுமைகளும் உண்டு. ஏதோவொரு ஒரு சில “ மின்மினிகளும் “ மின்னி மறைந்தும் உள்ளன. ஒன்றிரண்டு துருவ நட்சத்திரங்களை மட்டுமே உலகம் தன்னை மறந்தும் தூக்கிக் கொண்டாடுகிறது. அவர்களின் திறமைகளுக்கான பாராட்டும், பத்திரமும் வெகுசிலருக்கே வழங்கி மகிழ்கிறது.
உங்களின் ஜாதகத்தில் இலக்கினாதிபதியும், பதினொன்றுக்குடையவனும் இவர் வீட்டில் அவரும், அவர் வீட்டில் இவருமாக அமர்ந்து பரிவர்த்தனைப் பெற்றாலும், மேலும், இலக்கினாதிபதியின் சாரத்தை, பதினொன்றுக்கு உடையவன் பெற்றாலும், அல்லது பதினொன்றுக்கு உடையவன் சாரத்தை இலக்கினாதிபதி பெற்று, இவ்விருவர் வீட்டிற்கும் மறையாமல் அமர்ந்திருந்தாலும், உங்களைத் தேடி பாரட்டும், பத்திரமும், கேடயமும் வாழ்த்தொலிகளும் வந்து சேரும்


44

நாம் எதிர்பார்க்கும் காலம் என்பது, யாரோ திட்டுமிட்டு நகர்த்திக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதற்கொரு பெயரும் சூட்டினர். அதுதான் இறை. அடுத்தடுத்த வினாடிகளில் நிகழப்போகும் எதிர்வினைகளைப் பற்றிய தேடல்தான், இந்தளவுக்கு மனிதனை பரிணாமப்பட வைத்துள்ளது. இந்த தேடலுக்கான உச்சம் என்பது வரையறுக்கப்படாத ஒன்றாகும். 

ஜோதிடத்தில் ஐந்துக்குடையவன், ஒன்பதிலும், ஒன்பதுக்குடையவன் பத்திலும், பத்துக்குடையவன் ஐந்திலும் இருந்தால், தன் தாய்மொழியில் சிறந்தவர். வணிகத்தில் சிறப்பானவர். ஏதோவொரு துறையில் ஆய்வுக்குரியவராகவும், செல்வசிறப்புடன் வாழ்வார்.

No comments:

Post a Comment