Sunday 7 June 2015

7 இன்றுவொரு ஜோதிடத்தகவலை அறிந்து கொள்வோம்.






இலக்கினத்திற்கு இரண்டுக்குடைய பணத்திற்குரிய கிரகமும், பதினொன்றுக்குடைய ஆசைக்குரிய கிரகமும் கூடி, இலக்கினத்தில் அமர, ஜாதகனில் பணம், செல்வாக்கு அனைத்தும் அவர்களின் தசாபுக்தி காலங்களில் ஜாதகர்க்கு கிடைக்கும்.
அதேபோல, இலக்கினாதிபதியும், பனிரெண்டுக்குடையவனும் பரிவர்த்தனைப் பெற்றால், தன் உடமைகள் அனைத்தையும் இழப்பார்

 8

நாம் எவ்வளவுதான் பணம், செல்வம், நகை இவைகளை சேர்த்து வைத்திருந்தாலும், அதை அணிந்து கொள்வதற்கோ, ஆனந்தமாய் செலவிடவோ, அல்லது தான காரியங்களில் ஈடுபட்டு மக்கள் தொடர்பையும் நன்மதிப்பையும் பெற்று மகிழ்வதுற்கும் , ஒருவரின் ஜாதகத்தில் நான்காமதியும், அவ்வீட்டை நோக்கும் கோள்களும் நல்லநிலையில் இருக்கவேண்டும்.

இலக்கினத்திற்கு  நான்கில் சுக்கிரன் பலப்பட்டு நிற்க, அந்த நான்காம்வீட்டை நல்லக்கோள்களான குரு, புதன் நோக்க, ஜாதகர்க்கு வீடுமனை, தோட்டம் துரவுகளும், கிடைக்கும். வண்டிவாகனங்கள் அதிகரிக்கும். இவைகளை அனுபவிக்க இலக்கினாதிபதியும், நான்காமதிபதியும் நல்லநிலையில் இருக்கவேண்டும். அவர்கள் பலக்குறைவாக இருந்தால் இவரால் கிடைக்கும் யோகத்தை, இவராலே அனுபவிக்க இயலாமல் போய்விடும்  

91501 06069

No comments:

Post a Comment