Sunday 7 June 2015

5. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோம்.




இலக்கினத்திறெகு ஒன்பதாமிடம் என்பது மிகவும் தூய்மையான இடமாகும். அது அப்பழுக்கற்ற நன்மைகளையும்,  முன்ஜென்ம வினைப்படி கிடைக்கவேண்டிய, அத்தனைவிதமான பலன்களும், ஜாதகர்க்கு கிடைக்க செய்துவிடும். அதனால், ஒன்பதாம் வீட்டின் அதிபதியையும், அதிலுள்ளகோள்களையும், பெற்ற சாரத்தையும் ஆய்வு செய்தால் போதும், எந்த யோகங்களைப் பெற, அருகதையுடையவர்தானா? எனது தெரிந்துவிடும்.
இலக்கினத்திற்கு ஒன்பதாமிடத்தினில் சந்திரனும், செவ்வாயும் இருக்க, அது சந்திரமங்கல யோகமாகிறது. அரசியலில் பலம் மிக்கவராகவும், ஆளுமைத் திறன் அதிகமுடையவராகவும், ஜாதகர் இருப்பார்  .




6
எந்தவொரு ஜாதகத்திலும் பரிவர்த்தனை பெறும் கோள்களுக்கு என்று, தனிமதிப்பே உண்டு. வீடுமாறி அமரும் கோள்கள், தன்பலன்களையும் வலுவாக தருகின்றன.நான்காமதிபதியும், ஐந்தாமதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றால், வீடுமனைகள் பூர்வசொத்தகளும் கிடைக்கும். அதேபோல, இலக்கினாதிபதியும், நான்காமதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றால், வீடுமனை தேடிவரும்  .

ஒருவருடைய ஜாதகத்தில் ஒம்றாமிடம் ஜாதகரைக் குறிக்கிறது என்றால், அதற்கு நேர் எதிராக இருக்கும் ஏழாமிடம் ஜாதகரின் மனைவியைக் குறிக்கிமிடமாகும். ஒன்றாம்வீட்டை நல்லக்கோள்கள் இருக்கவேண்டும், காணவேண்டும் என்பதைப்போல, மனைவியை அல்லது கணவனைக் குறிக்கும் ஏழாம்வீட்டையும், நல்லக்கோள்கள் இருக்க, காணவேண்டும். அவ்வாறு எவருடைய ஜாதகத்தில், இலக்கினத்தையும், ஏழாம்வீட்டையும் நல்லக்கோள்கள் காண்கின்றனவோ, அந்த ஜாதகர் இந்த பாவ உலகத்தின் பாக்கியவான் ஆவார். அவருக்கு எல்லா நன்மைகளும் அரசத் தொடர்பும், செல்வங்களும் தேடிவரும்.


91501 06069

No comments:

Post a Comment