ஜோதிடம் எனும்
அற்புதக் கலையாகும். இதன் மூலமாக, உலகியல் முதற்கொண்டு தனிமனித வாழ்வு வரை அனைத்து
நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளமுடியும் எனும்போது,
“ சாள்திரத்தைக்
கெடுக்குமாம் சகோதர ஸ்தானம் “ என்கிற முதுமொழியும் உருவாகியுள்ளதே! இதைப் பார்க்கும்
போது, இது போன்ற மனநிலையை உருவாக்கியது யார்? அரைகுறைகள் கூட தம்மால் எல்லா பலன்களையும்
சொல்ல முடியும் என்பதைக் காட்டிக் கொள்ள, நம்மை போன்ற ஜோதிடர்களின் குறுக்குச் சிந்தனைதானே
துருவக்கணிதம் உருவாகும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தது. சரி….
உண்மையில் சாஸ்திரத்தைக்
கெடுக்கிறதா? சகோதர ஸ்தானம். நம்மிடையே பல பழைய
நூற்களில் இது போன்ற விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையெதுவும் தற்காலத்தில்
பொருந்தி வருகிறதா?
இலக்கினத்திற்கு
இரண்டாம் வீடான குடும்ப வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாத்கருக்கு சகோதரங்கள் உண்டு.
அதே போல,
செவ்வாய் பலம்
பெற்று இரண்டாம் வீட்டைப் பார்த்தாலும், ஆண்பெண் என்று சகோதரங்கள் உண்டு. மேலும்,
இலக்கினத்திற்கு
நான்கு, பத்தில் செவ்வாய் நின்றால், ஜாதகருக்கு மூத்த உடன்பிறப்புகள் உண்டு என்று பழைய
தமிழ்நூல் கூறுகிறது. இந்த விதி உங்களுக்குப் பொருந்தி வருகிறதா? நண்பர்களே!!!
இனி இது போன்ற
விதிகளை, இனிவரும் காலங்களிலும் பார்ப்போம். நன்றி.
91501 06069
No comments:
Post a Comment