ஜாதகம்; 1 பி.வி வெண்ணிலா. 30.04.1979 அதிகாலை மணி 05.30 நிமிடம்.பிறப்பு.
கேள்வி: ஐயா, எனக்கு குழந்தைப் பாக்கியம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த பாக்கியம் எப்போது கிடைக்கும். தயைகூர்ந்து கூறுங்கள். இத்துடன் என் ஜாதகத்தையும் இணைத்து அனுப்பியுள்ளேன்.
புத சுக்கி செவ்
|
இல சூரி
|
சந்தி
|
|
கேது
|
இராசி
|
குரு
|
|
|
சனி
(வ) இரா
|
||
மாந்
|
|
|
|
பிறப்பில் தசா இருப்பு செவ்வாய் வருடம் 04. மாதம் 02 நாள் 27 ஆகும். தற்போது,28.01.2017 வரை குருதசாவில் இராகுபுக்தி நடப்பில் இருக்கும்.
உங்களின் ஜாதகத்தை வாக்கிய கணிதத்தில் கணித்து அனுப்பி இருந்தீர்கள்.
அதை திருக்கணிதத்திற்கு மாற்றியுள்ளேன். உங்களின் புத்திரஸ்தானாதிபதி சூரியன் இலக்கினத்தில் உச்சமாகியும், புத்திரக்காரகன் குரு நான்கினில் உச்சமாகியும் உள்ளனர்.
ஆனால், புத்திரஸ்தானத்தில் இராகுவும், சனியும் அமர்ந்து புத்திரப் பாக்கியத்தை தடைசெய்கின்றனர். இதில் சனி வக்கிரமடைந்து
உள்ளார்.
வக்கிரம் என்பது பின்னோக்கி சுழல்வதைக் குறிப்பதால், குருவோடு சனியிருப்பதாக அர்த்தமாகிறது, இது
பிரம்மஹத்தி தோஷம் என்பர். இதை நிவர்த்தி செய்யுங்கள். இதனாலும் புத்திரபாக்கியக் குறைபாடு ஏற்படும்.
அதனால், வியாழக்கிழமை தோறும் தட்சணாமூர்த்தி சன்னதியில் கொண்டைக் கடலை மாலையுடன், கடலை
எண்ணெயில் தீபமும் முல்லை மலர்மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள். மருத்துவர் உதவியையும் நாடுங்கள் உங்கள்
கவலைகள் எல்லாம் வெகுவிரைவில் தீரும். வணக்கம்.
ஜாதகம்:2. கோவிந்தன். 07.01.1984 மதியம் மணி 02.20 நிமிடம். ஈரோட்டில் பிறப்பு.
எனக்கு திருமணம் நடக்க காலதாமதம் ஆகிறது. எப்போது நடக்கும். அதைப்பற்றிய விளக்கங்கள் கூறுங்கள் ஐயா?
|
இல
|
இராகு
|
|
சந்
|
இராசி
|
|
|
மாந்
|
|
||
சூரி புத குரு
|
சுக்கி கேது
|
செவ் சனி
|
|
பிறப்பில் இராகு தசா இருப்பு வருடம் 15. மாதம் 02 நாள் 18 ஆகும். தற்போது குருதசாவில் இராகு புக்தி 02.01. 2015 வரை நடப்பில் இருக்கும்.
குருதசாவின் முடிவு
காலத்தில் இருக்கிறீர்கள். உங்களின் களத்திரஸ்தானாதிபதியும், காரகனும் சுக்கிரன் ஒருவனே ஆவான். அந்த கிரகம்
கேதுவுடன் இணைந்ததால் திருமணத் தடையை தந்துவிடும். சனி,
செவ்வாய் ஏழில் இருந்தாலும் திருமணவாழ்வில் புயல்தான் வீசும். வேலை செய்வதில் ஆர்வமும்,
கோபமும் மிகுந்த பெண் வாழ்க்கைத் துணையாக வருவாள்.
இவரோடு உடன்பிறந்தவர்கள் இருவர் இருப்பர். இவர்வீட்டுக்கு வடக்கே பிள்ளையார் கோவிலும், கிழக்கில் சிவன் கோவிலும் இருக்கும். உங்கள் வாழ்க்கை வளம்பெற வாழ்த்துகள்.
ஜாதகம்:3. இரமேஷ் குமார். சேலம். 29.04. 1989 மதியம் மணி 01.57 நிமிடம்
கேள்வி: ஐயா, நான் MCA முடித்துள்ளேன், வெளிநாட்டில் வேலைகிடைக்குமா? திருமணம் எப்போது? தயவு செய்து பதில் கூறுங்கள்.
|
சூரி புத சுக்கி
|
குரு
|
செவ் மாந்
|
இராகு
|
இராசி
|
|
|
|
இல கேது
|
||
சனி
|
|
|
சந்
|
ஜென்மத்தில் இருப்பு செவ்வாய் தசா வருடம் 04. மாதம் 05 நாள்
16 ஆகும். தற்போது குருதசாவில் சனி புக்தி துவங்கியுள்ளது.
சிம்மலக்கினத்திற்கு(ஸ்திரம்)
ஏழுக்குடைய சனி, பாதகாதிபதியாவான். அவன் தன்புக்தியை துவங்கியுள்ள காலம் மணவாழ்க்கையைத்தானே
தர நினைப்பான். ஏழில் இராகு
இருப்பது திருமணத் தடையைத் தரும். இதை களத்திரதோஷம்
என்பார்கள் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
மணப் பெண்ணோடு இருவர்
உடன்பிறப்புகளாக இருப்பார்கள். சம்பாதிக்கும்
பெண்ணே மணப்பெண்ணாக வரவாய்ப்புள்ளது. உள் நாட்டில் வேலை பார்ப்பதே சிறப்பானது. உங்களின் வருங்காலம் வளமிக்கதாக இருக்கும். நன்றி
ஜாதகம்: 4. முரளி. சென்னை. 17.12.1973 நேரம் மாலை மணி 04.06 நிமிடம்.
கேள்வி: என் தொழில் என்ன நிலையில் உள்ளது. இதே நிலைதான் நீடிக்குமா? நான் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும்
வாழ
என்ன
செய்வது?
|
செவ்
மாந்
|
இல
|
சனி
கேது
|
|
இராசி
|
|
|
சுக்கி
குரு
|
|
||
சூரி
இராகு
|
புதன்
|
|
சந்தி
|
சந்திர
தசா
வருடம்
09. மாதம்
02 நாள்
15 ஆகும்.
தற்போது
குருதசாவில்
கேது
புக்தி
23.08.2014 முதல்
25.07.2015 வரை
நடக்கும்.
இலக்கினம் இரிஷபம்.
இராசி கன்னி. உங்களின் பத்தாமதிபதியான சனி கேதுவுடன் கூடி
இரண்டில் இருக்க, பணப்பற்றாக்குறையில் தொழில் ஸ்தம்பித்து நிற்கும். தற்போது வேறு கேது
புக்தி நடப்பில் இருப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். வருமான இழப்பு ஏற்படும். அதனால், தொழிலில் கூடுதல் முதலீடு இல்லாமல் நடத்துங்கள். காரணம் கடன் கூடும்
காலமிது.
இலக்கினாதிபதி சுக்கிரன் நீசக்கிரகத் தொடர்பு பெறுவதும்,
இலக்கினத்திற்கு இருபுறமும் பாவக்கிரகங்கள் சூழ்ந்து இருப்பதும் உடல் ஆரோக்கியம் கெடும்.
தீராதநோய் வாட்டும். சந்தோஷமோ, மகிழ்ச்சியோ எதுவும் கிட்டாது. அதன்
போக்கிலே வாழ்க்கையை போக விடுங்கள்.
பிரதோஷ காலத்தில் கூடுவாஞ்சேரியில் உள்ள
ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்ரஹ யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து
வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள். நன்றி.
ஜாதகம்: 5. அமுதா:
சென்னை
06.03.1982
நள்ளிரவு
மணி 02.35
நிமிடம்.
கேள்வி: ஐயா, என் வாழ்க்கையின் பிற்பகுதி எப்படி இருக்கும். இதுவரையிலும் முன்னேற்றமே தென்படவில்லை. எல்லா ஜோதிடர்களும் ஒவ்வொருவிதமாகக்
கூறுகிறார்கள்.
|
|
|
இராகு
|
சூரிய
|
இராசி
|
சந்
|
|
புத சுக்
|
|
||
இல
கே மா
|
|
குரு
|
செவ்
சனி
|
ஜென்மத்தில் இருப்பு
குருதசா வருடம் 03 மாதம் 09 நாள் 10 ஆகும்.
இப்போது நடப்பில்
புதன்தசாவில் இராகுபுக்தி 13.01.2014
முதல்
19.07.2016 வரை
இருக்கும்.
வணக்கம்.
சகோதரி. இங்கே பதிவு செய்யப்படும் கேள்விபதில்களுக்கு நான் பதில்
கூறுவதாக அர்த்தம் கொள்ளவேண்டாம். நான் கருவி.
என் வழியில் ஸ்ரீ அனுமன்
உங்களுக்கு பதில் தருகிறார் என்றுதான் அர்த்தம். சரி.
உங்கள் கேள்விக்கு வரலாம்.
இலக்கினம் மீனம்.
இராசி கடகம். பாதகாதிபதி புதன் இரண்டில் இருந்து தசாவை நடத்துகிறான். ஏழில் இருக்கும் இராகு புக்தியை நடத்துகிறான். நாம் பேசும்
பேச்சை இரண்டாமிடத்தைக் கொண்டுதான் அளக்க முடியும். அதில் ஆறாமதிபதி எதிரிகளை சொல்லும் சுக்கிரன் இருப்பதும், பாதகாதிபதி இரண்டில் கூடியிருப்பதும், உங்கள் பேச்சுதான் எதிரிகளை உருவாக்கும். வாய்ப்புகளை இழக்கச் செய்யும். நீங்கள் நினைக்கும் கண்டிப்பான பேச்சு என்பது உங்களுக்கே எதிரியாக முடியும். நீங்கள் ஆளுமையும், சாதிக்கும் திறனும் உள்ளவர்தான். ஆனால், வாய்ப்புகள் கிடைக்காத போது,
எல்லா திறனும் விழலுக்கு இறைத்த நீராகிப் போகும். இன்னும் கொஞ்ச காலத்திற்கு இப்படியேதான் போகும். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி.
அனுப்பவேண்டிய முகவரி.
முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்
கைபேசி. 91501 06069
|
No comments:
Post a Comment