Monday 20 July 2015

என் கேள்விக்கு என்னபதில் ... முத்துப்பிள்ளை 91501 06069




ஜாதகம்: 1.

. மல்லிகார்ஜீனன்.
. நந்தினி. 09.04. 1985 இரவு மணி 10.00 நிமிடம். பிறந்த ஊர்.சென்னை.

கேள்வி. என் மகளுக்குத் திருமணம் தட்டிக் கொண்டே போகிறது. எப்பொழுது நடக்கும். வாழ்க்கையில் செளக்கியமாக இருப்பாளா? என்று தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா. மீனாக்ஷி.

சூரி  புத
சுக் வக்
செவ்  இரா





             இராசி

குரு




இல சந்  சனி வக்
கே மாந்


பிறப்பில் புதன் தசாவில் இருப்பு 07 வருடம். 00 மாதம் 26 நாள் .
தற்போது சுக்கிர தசையில் சனிபுக்தி 05.05.2015 வரை நடப்பில் இருக்கும்.

நந்தினியின் ஜாதகத்தின்படி, இலக்கினமும், இராசியும் விருச்சிகமாகும். மந்த சுபாவத்தைத் தரும் கிரக நிலைகளாகும். கணவனைத் தரும் காரகக் கிரகமான செவ்வாய், இராகுவுடன் இருப்பதும், களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் வக்கிரம்பெற்று இருப்பதும், இரண்டாமிடமான குடும்பத்தைக் குறிக்கும் குரு, மூன்றினில் நீசமடைந்து இருப்பதும், வீர்யம் மற்றும் சுகத்தைக் குறிக்கும் சனிபகவான், நீசச் சந்திரனுடன் கூடி இருப்பதும், திருமண வாழ்க்கைக்கு மாறான அமைப்புகளாகும். வாழ்க்கையின் இரண்டாம்  பகுதியில் தான் திருமணம் நடக்கும். காலம் தாழ்ந்து திருமணம் நடப்பதே நல்லது.
தற்போது திருமணம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளை, வருகிற ஒவ்வொருப் பெயர்ச்சிகளும் அதிகப்படுத்துகின்றன.
 தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தோ, அல்லது பூர்வீக வீட்டிற்கோ வடகிழக்கிலிருந்து வரன் வரும். மாப்பிள்ளையுடன் உடன்பிறந்தவர்கள், ஒருவர் இருப்பர். ஒருவருக்கு மேல் உடன்பிறந்தவர்கள் இருந்தால், அவர்களின் வாழ்க்கை சரியாக இருக்காது.
மதுரை மீனாட்சி சொக்கநாதரை வணங்க, மதுரை வாருங்கள். உங்கள் பெருங்கவலை தீரும். வாழ்க்கை நலமுடன் இருக்கும்.

ஜாதகம்: 2.

இரா. ஆர்த்தி. 16. 11.1983. காலை மணி 09.45 நிமிடம்.

கேள்வி. எனக்கு குழந்தைப் பாக்கியம் தள்ளிப் போகிறது. அதை நிவர்த்திக்க என்ன வழி? தங்களின் மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

சந்


இரா




             இராசி




இல

புத குரு கே
சூரி  சனி
சுக்  செவ்
 
பிறப்பில் சனிதசாவில் வருடம் 11 மாதம் 08 நாள் 25
தற்போது கேது திசாவில் சந்திரப் புக்தி 05.04.2014 முதல் 01.11. 2014 வரை இருக்கும்.

சகோதரி ஆர்த்தியின் ஜாதகப்படி இலக்கினம் தனுசு. இராசி மீனம். இலக்கினத்தின் அதிபதியும், இராசியின் அதிபதியும் குருவே ஆவார்.  இந்த ஜாதகத்தை வழிநடத்த வேண்டிய குருபகவான், இலக்கினத்திற்கு பனிரெண்டில் நின்று, பாதகாதிபதி புதனுடனும், எதையும் சிறுகச் செய்யும் கேதுவுடனும் தொடர்பு கொண்டு உள்ளார். மேலும், பாகை கலைகளின் படி, பாவக் கிரகங்களின் மத்தியிலும் உள்ளார். அதனால் தான் குழந்தைப் பாக்கியம் தடைபட்டுள்ளது. இலக்கினத்திற்கு நான்கில் சந்திரன் நின்று, சனிசாரம் பெறுவது, மனநிலை பாதிக்கும் அமைப்பாகும். மனதை செம்மைப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்பக் குழப்பங்கள் தீர, குலதெய்வ குறைபாடுகள் உள்ளது. அதைத் தீர்க்கவும். எல்லாம் நலமாய் அமையும். வாழ்த்துகள்.

ஜாதகம். 3.

கமல்நாத். 24. 05. 1981 மதியம் மணி 01.14 நிமிடம்.

கேள்வி. எனக்கு திருமணம் முடிந்து, நான்கு வருடங்கள் முடிந்து விட்டன. இன்னும் புத்திர சந்தான பாக்கியம் கிட்டவில்லை. கிடைக்கும் என்றால் எப்போது? விளக்கமாகத் தெரிவிக்கவும்.



செவ்
சூரி   சுக்கி
புத



        இராசி

இரா
சந்  கே

இல




குரு வக் சனி    வக்

பிறப்பு காலத்தில் சூரியன் திசாவில் வருடம் 00 மாதம் 05 நாள் 19 ஆகும்.
தற்போதூ இராகுதசாவில் சந்திர புக்தி 04.11.2013 முதல் 28.04. 2015 வரை நடப்பில் உள்ளது.

தங்களின் ஜாதகப்படி இலக்கினம் சிம்மம். இராசி மகரம். இலக்கினத்துக்கு ஐந்தாமிடமே, ஒரு ஜாதகத்தில் புத்திரப் பாக்கியத்தை அறியும் இடமாகும். அந்த வகையில் சிம்மலக்கினத்திற்கு ஐந்தாமிடமான தனுசுவே குழந்தைகளைப் பற்றி அறியுமிடமாகும். அதன் அதிபதி குருவே, புதுஜீவனைத் தரும், புத்திரக் காரகனாகும். அப்படியப்பட்ட குரு வக்கிரம் பெற்று, தாமத்தைக் குறிக்கும் முடக்கிரகமான சனியுடன் கூடி இருப்பது, குழந்தைப் பாக்கியத்தைத் தாமதமாய் பெறும் அமைப்பாகும்.
இராசிக்கு ஐந்தாமிடமான இரிடபத்தில் சூரியன் இருப்பது, புத்திர அற்பத்தைத் தரும். தங்களின் குலதெய்வத்தை வணங்கி வர, குறைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

ஜாதகம். 4.

என் பெயர் கனிமொழி. 16.01.1980. காலை மணி 07.20 நிமிடத்திற்குப் பிறப்பு. 

கேள்வி; என் குடும்ப வாழ்வு எப்போது சீரடையும். 



   மாந்



சுக் கே
 

      இராசி                  

இல சூரி

செவ் குரு இரா  ()
சந் புத



  சனி
   ()

தற்போது சந்திரதிசையில் சனிபுக்தி 10.05.2014 வரை, அதன்பின் புதன்புக்தி 02.10.2015 வரை நடக்கும்.

புத்திக்கும், மனதுக்கும் இடையில் சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் பிறப்பில் இருந்து பிரிவினைகளைச் சந்தித்து வந்துள்ளதால், எங்கே தனக்கும் அது போல் நிகழ்ந்து விடுமோ என்கிற அச்ச உணர்வில் தவித்து வருவீர்கள். இலக்கினாதிபதியும், இராசியாதிபதியும் வக்கிரமடைவதும், மகர லக்கினத்துக்குப் பாதகாதிபதியான செவ்வாயும், இராகுவும் எட்டாமிடமான மாங்கல்யத்தில் இருப்பதும், இரண்டாமிடத்தில் கேது இருப்பதும், குடும்ப வாழ்வுக்கு சரியற்ற அமைப்புதான் என்றாலும், பிரிவினைக்கான வாய்ப்பு இல்லை. ஆன்மீகத்தை நோக்கிய சிந்தனைதான், உங்கள் வாழ்வை மீட்டெடுத்துத் தரும். நன்றி!

ஜாதகம் 5

என்பெயர் சங்கீதா. இது  என்மகளின் ஜாதகம். பிறந்த நாள். 12.10.2012. காலை மணி. 07.13. நிமிடம்.

கேள்வி. என் மகள் எல்லாக் குழந்தைகளையும் போலவே, எட்டு மாதத்தில் எட்டெடுத்து வைத்து நடந்தாள். பார்க்கிறாள். சிரிக்கிறாள். கூப்பிட்டால் திரும்புகிறாள். பத்து மாதத்திலே குழந்தைகள் பேசத் துவங்கி, அடிப்படை வார்த்தைகளைப் பேசினாள். ஆனால், இப்போது எந்த வார்த்தைகளையும் பேசச்சொல்லிக் கொடுத்தாலும், பேச மறுக்கிறாள். சைகைகளைக் காட்டும்போது, என் மனம் துடிக்கிறது. இதே நிலை நீடிக்குமா?  . 

தற்போது கேது தசாவில் புதன்புக்தி 15.0



குரு கேது
()




     இராசி




சந் சுக்


செவ் இரா
இல மா புத சனி
சூரி

9.2014 வரை நடக்கும். அதன்பின் சுக்கிரதசா துவங்கும்..

நீடிக்காது. பயப்பட வேண்டாம். தங்களின் மகள் சிம்மராசி. துலாம் லக்கினம். மகம் நட்சத்திரம். இரண்டாமிடம் பாதிக்கப்பட்டு, இரண்டாமதிபதி இராகுவின் பிடியில் உள்ளார். அதனால் பேசுவதில் சிரமம் ஏற்படும். மேலும், இராசிக்கு எட்டுக்குடையக் கிரகம், இராசிக்கு பத்தில் இருந்தால், வாய் பேச முடியாது என்கிறது சுகர் நாடி. ஆனால் இந்த ஜாதகத்தில் இராசிக்கு எட்டுக்குடைய குரு, இராசிக்குப் பத்தில் வக்கிரமடைந்து அமர்ந்துள்ளதால், தற்போது பேசுவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது. மிகவிரைவில் சரியாகிவிடும்.


முத்துப்பிள்ளை
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர். 624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி 91501 06069.

  

No comments:

Post a Comment